TA/Prabhupada 0554 - இந்த மாயையுலக பசிபிக் சமுத்திரத்தின் மையத்தில்

Revision as of 07:23, 25 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.62-72 -- Los Angeles, December 19, 1968

தமால் கிருஷ்ணா: "தண்ணீரில் ஒரு படகு பலத்த காற்றால் அடித்துச் செல்லப்படுவதால், அப்படியிருந்தும், மனம் நிலைபெறும் புலன்களில் ஒன்று - மனிதனின் புத்திசாலித்தனத்தை எடுத்துச் செல்லும்."

பிரபுபாதர்: ஆம். நீங்கள் ... பசிபிக் கடலில் நீங்கள் ஒரு படகில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அல்லது ஒரு நல்ல இருக்கையில், ஆனால் உங்களிடம் கட்டுப்பாட்டு திறன் இல்லை என்றால், அந்த பசிபிக் பெருங்கடலின் ஒரு அலை உடனடியாக உங்களை கடலின் அடிப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியும். எனவே இது தேவை. இந்த மாயிகா உலகின் பசிபிக் கடலின் நடுவே நாம் உள்ளோம். ஸம்ஸார - சமுத்ரா. இது சமுத்ரா என்று அழைக்கப்படுகிறது. எனவே எந்த நேரத்திலும் நம் படகு கட்டுப்பாட்டு சக்தியைக் இழக்கக்கூடும், நமக்கு கட்டுப்படுத்தும் சக்தி இல்லையென்றால். ஆம்.

தமால் கிருஷ்ணா : "ஆகையால், வலிமைமிக்க ஆயுதம் பூண்டவரே, யாருடைய உணர்வுகள் அவற்றின் பொருட்களிலிருந்து கட்டுப்படுத்தப் படுகின்றனவோ, அது நிச்சயமாக, நிலையான புத்திசாலித்தனம் கொண்டது."

பிரபுபாதர்: ஆம். இப்போது, ​​யாருடைய புலன்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோ... இந்த மனித வாழ்க்கை என்பது புலன்களைக் கட்டுப்படுத்துவதற்கானது. தபஹ். இது தபஸ்யா, தவம் என்று அழைக்கப்படுகிறது. நான் சில வகையான புலன்களின் திருப்திக்கு பழக்கமாக இருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். இப்போது, ​​நான் கிருஷ்ண உணர்வுக்கு செல்கிறேன். என் ஆன்மீக குரு அல்லது வேதம், "இதைச் செய்யாதீர்கள்" என்று கூறுகிறது, எனவே ஆரம்பத்தில், நான் சில அசௌகர்யங்களை உணரலாம், ஆனால் நீங்கள் அதை பொறுத்துக்கொள்ள முடிந்தால், அது தபஸ்யா. அது தபஸ்யா. தபஸ்யா என்றால் உடல் ரீதியாக நான் சில அசௌகர்யங்களை உணர்கிறேன், ஆனால் நான் பொறுத்துக்கொள்கிறேன். அது தபஸ்யா என்று அழைக்கப்படுகிறது. இந்த மனித வடிவம் வாழ்க்கை அந்த தபஸ்யாவிற்கானது. என் உணர்வுகள் இந்த திருப்தியைக் கோருவதால், நான் உடனடியாக வழங்குவேன். இல்லை. என் புலன்கள் கோரும் வகையில் நான் என்னைப் பயிற்றுவிப்பேன், "என் அன்பான ஐயா, இந்த வசதியை எனக்குக் கொடுங்கள்" நான் கூறுவேன், "இல்லை. உங்களுக்கு அது கொடுக்க முடியாது." இது கோஸ்வாமி அல்லது சுவாமி என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய தருணத்தில், எல்லோரும், நாம், நாம் நமது புலன்களை சுவாமி அல்லது எஜமானராக ஆக்கியுள்ளோம், நீங்கள் உண்மையில் புலன்களின் எஜமானராகும் போது, நீங்கள் சுவாமி அல்லது கோஸ்வாமி. அதுவே சுவாமி மற்றும் கோஸ்வாமியின் முக்கியத்துவம். அது ஆடையில் அல்ல. கட்டுப்படுத்தும் சக்தியை உள்ளவர், புலன்களால் கட்டளையிடப்படாதவர், புலன்களின் வேலைக்காரன் அல்ல. "தயவுசெய்து என்னை ஸ்டேக்ஸ் சாப்பிட அந்த உணவகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்." என்று என் நாக்கு ஆணையிடுகிறது. அது என்ன ஸ்டேக்ஸ்? ஸ்டேக்ஸ்?

பக்தர்: ஸ்டேக்ஸ்.

பிரபுபாதா: ஸ்டேக்ஸ்? எழுத்தாக்கம் என்ன?

பக்தர்: எஸ்-டி-இ-ஏ-கே.

பிரபுபாதர்: எனவே எப்படியோ ... அல்லது அந்த வறுத்த கோழி. ஆம். எனவே நாக்கு எனக்கு ஆணையிடுகிறது. ஆனால் உங்கள் நாக்கைக் கட்டுப்படுத்த முடிந்தால், "இல்லை. நான் உனக்கு இன்னிப்புருண்டைத் தருவேன். அங்கு செல்ல வேண்டாம்." ( சிரிப்பு ) பிறகு நீங்கள் புலன்களின் எஜமானர் ஆகிவிடுவீர்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? மற்றவர்கள் "அங்கு செல்ல வேண்டாம்" என்று மட்டுமே முயற்சி செய்கிறார்கள். அது சாத்தியமற்றது. நாக்கிற்கு சுவையான ஒன்று வேண்டும். இல்லையெனில் அது சாத்தியமில்லை. அது செயற்கையானது. நாக்கிற்கு, இந்த வறுத்த கோழி அல்லது மாமிசத்தைவிட சுவையான ஒன்றை அவருக்குக் கொடுத்தால், அது நிறுத்தப்படும். அதுதான் கொள்கை. எங்கள் கொள்கை அது. அரிசியுடன் பால்புரதம் பொரித்ததை நாம் கொடுக்கலாம். அது எவ்வளவு நன்றாக இருக்கிறது. அவர் இறைச்சி சாப்பிடுவதை மறந்து விடுவார். எனவே இதுதான் கொள்கை, கிருஷ்ண உணர்வு. எல்லா புலன்களுக்கும் ஏதாவது வழங்க வேண்டும். அதை செயற்கையாக நிறுத்த வேண்டாம். அது சாத்தியமில்லை. அது சாத்தியமில்லை. மற்றவர்கள், அவர்கள் வெறுமனே புலன்களின் செயல்பாட்டை நிறுத்த செயற்கையாக முயற்சி செய்கிறார்கள். இல்லை. அது சாத்தியமில்லை.