TA/Prabhupada 0098 - கிருஷ்ணரின் அழகால் கவரப்படுங்கள்

Revision as of 23:47, 3 September 2015 by Rishab (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0098 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

The Nectar of Devotion -- Vrndavana, November 11, 1972

மதன-மோஹன. மதன-மோஹன என்றால் பாலுறவு ஈர்ப்பு. மதன, பாலுறவு ஈர்ப்பு, மன்மதன், மேலும் கிருஷ்ணர் மதன-மோஹன என்று அழைக்கப்படுகிறார். ஒருவர், கிருஷ்ணரால் கவரப்பட்டால், அதாவது அவர் பாலுறவு ஈர்ப்பைக் கூட உதாசீனப் படுத்தலாம். அதுதான் சோதனை. மதன இந்த ஜட உலகில் வசீகரித்துக் கொண்டிருக்கிறார். எல்லோரும் பாலுறவு வாழ்க்கையால் கவரப்பட்டிருக்கிறார்கள். இந்த ஜட உலகம் முழுதும் பாலுறவு வாழ்க்கையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. யன் மைதுனாதி-க்ருஹமேதி-ஸுகம் ஹி துச்சம் (ஸ்ரீ.பா.7.9.45). இங்கு சந்தோஷம் என்பது மைதுன, மைதுனாதி. மைதுனாதி என்றால் இங்கு சந்தோஷம் மைதுனாவிலிருந்து தொடங்குகிறது, உடலுரவு. பொதுவாக, மக்கள், ஒரு மனிதர் திருமணம் செய்துக் கொள்கிறார். அதன் நோக்கம் பாலுறவு விருப்பத்தை நிறைவு செய்துக் கொள்ள. பிறகு பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறார்கள். பிறகு மறுபடியும், பிள்ளைகள் வளர்ந்தவுடன், அவர்கள், பெண் மற்றொரு ஆடவனை மணக்கிறாள், ஆண் மற்றொரு பெண்ணை மணக்கிறார். அதுவும் அதே நோக்கத்துடன் தான்: உடலுறவு. பிறகு மறுபடியும் பேரப்பிள்ளைகள். இவ்வாறாக, இந்த ஜட இன்பம் - ஸ்ரீரியைஸ்வரிய - ப்ரஜெப்ஸவ:. அன்றொரு நாள் நாம் கலந்துரையாடினோம். ஸ்ரீ என்றால் அழகு, ஐஸ்வரிய என்றால் சொத்து, மேலும் ப்ரஜா என்றால் பரம்பரை. ஆகையால் பொதுவாக, மக்கள் அதை விரும்புகிறார்கள் - நல்ல குடும்பம், நல்ல வங்கி தொகை, மேலும் நல்ல மனைவி, நல்ல மகள், மருமகள். ஒரு குடும்பம் அழகான பெண்களும், சொத்துக்களும் உடையவர்களாக இருந்து, இன்னும் பிரமாதமாக, பல பிள்ளைகளை பெற்றிருந்தால், அவர்கள், வெற்றி பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர் பெரும் வெற்றிபெற்ற மனிதராக கருதப்படுகிறார். ஆகையால் சாஸ்த்ர கூறுகிறது "இது என்ன வெற்றி? இந்த வெற்றி உடலுறவுடன் ஆரம்பமாகிறது. அவ்வளவுதான். மேலும் இதை ஆதரவளித்து காப்பாற்றுகிறார்கள்." ஆகையால், யன் மைதுனாதி-க்ருஹமேதி-ஸுகம் ஹி துச்சம் (ஸ்ரீ.பா.7.9.45). இங்கு சந்தோஷம் உடலுறவிலிருந்து ஆரம்பமாகிறது, மைதுனாதி. நாம் இதை நேர்த்தியாக வேறுவிதமாக கூறலாம், ஆனால் மைதுனா, பாலுறவு ஆனந்தம், பன்றிகளிடமும் உள்ளது. பன்றிகளும் நாள் முழுதும் உண்ணுகிறது, இங்கும் அங்கும்: "எங்கிருக்கிறது மலம்? "எங்கிருக்கிறது மலம்?" மேலும் வித்தியாசம் இல்லாமல் பாலுறவு கொள்கிறது. பன்றிகள் அம்மா, சகோதரி அல்லது மகள் என்று வித்தியாசப்படுத்துவதில்லை. ஆகையினால் சாஸ்த்ர கூறுகிறது, "இங்கு, இந்த ஜட உலகில், நாம் சிக்கலில் இருக்கிறோம், நாம் இந்த ஜட உலகில் பாலுறவு வாழ்க்கையில் மட்டும் ஈடுபட்டிருக்கிறோம்." அதுதான் மன்மதன். மன்மதன் பாலுறவு வாழ்க்கையின் கடவுள், மதன. ஒருவர் மதன, என்னும் மன்மதனால் தூண்டப்படவில்லை என்றால், அவரால் முடியாது, நான் சொல்வதாவது, பாலுறவு வாழ்க்கையில் மகிழ்வடைய முடியாது. மேலும் கிருஷ்ணரின் பெயர் மதன-மொஹன. மதன-மொஹன என்றால் கிருஷ்ணரால் கவரப்பட்டவர், அவர் பாலுறவினால் ஏற்படும் சுகத்தை மறந்துவிடுவார். இதுதான் சோதனை. ஆகையினால் அவர் பெயர் மதன-மொஹன. இதோ மதன-மொஹன. சனாதன கோஸ்வாமீ மதன-மொஹனை வழிபட்டார். மதன அல்லது மாதன. மாதன என்றால் பைத்தியமாவது. மேலும் மதன என்றால் மன்மதன். ஆகையால் அனைவரும் உடலுறவின் பலவந்தத்தால் சினமடைகிறார்கள். அங்கே பல இடங்கள் உள்ளன, பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது, பும்ஸ: ஸ்த்ரியா மிதுனீ-பாவம் ஏதம் தயோர் மிதோ ஹ்ருதய-க்ரந்திம் ஆஹுர். அனைத்து ஜட உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது: ஆண் பெண்ணால் ஈர்க்கப்படுகிறார் பெண் ஆணால் ஈர்க்கப்படுகிறார். மேலும், இந்த ஈர்ப்பை நாடுவதால், அவர்கள் இணையும் போது, இந்த ஜட உலகின் பற்றுதல் மேலும் மேலும் அதிகரிக்கிறது. இப்படியாக, ஒன்று சேர்ந்த பிறகு, அல்லது திருமணமான பிறகு, ஒரு ஆணும் பெண்ணும், அவர்கள் அழகான வீட்டை நாடுகிறார்கள், க்ரஹ; க்ஷெத்ர, நடவடிக்கை, வியாபாரம், தொழிற்சாலை அல்லது விவசாய துறை. ஏனென்றால் ஒருவர் பணம் சம்பாதிக்க வேண்டும். பிறகு உணவு பெற வேண்டும். க்ரஹ-க்ஷெத்ர; ஸுதா, குழந்தைகள், மேலும் ஆப்த, நண்பர்கள்; வித்த, சொத்து. அதோ க்ரஹ-க்ஷெத்ர-ஸுதாப்த-வித்தைர் ஜனஸ்ய மோஹோ அயம் (ஸ்ரீ.பா.5.5.8). இந்த ஜட உலகின் மேல் உள்ள ஈர்ப்பு மேலும் மேலும் நெருக்கமாகிறது. இதை மதன என்றழைக்கிறோம், மதனாவால் ஈர்க்கப்படுதல். ஆனால் நம் வேலை இந்த ஜட உலகின் மங்கிய ஒளி வீச்சினால் கவரப்படாமல் இருப்பது, ஆனால் கிருஷ்ணரால் கவரப்படுவது. அதுதான் கிருஷ்ணர் பக்தி இயக்கம். கிருஷ்ணரின் அழகில் நீங்கள் ஈர்க்கப்படவில்லை என்றால், நாம் இந்த ஜட உலகின் பொய்யான அழகில் நிச்சயமாக திருப்தி அடைய வேண்டியிருக்கும். ஆகையினால் ஸ்ரீ யமுனாச்சாரியார் கூறுகிறார்: யதாவதி மம சேதா: க்ருஷ்ண-பாதாரவிந்தயோர் நவ-நவ-தாமரந்தம் ஆஸீத்: "கிருஷ்ணரின் அழகால் நான் ஈர்க்கப்பட்டிருக்கும் வரை, மேலும் அவர் கமலப் பாதங்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்துள்ளதால், எனக்கு புதிய சக்திகள் அன்று முதல் கிடைத்துக் கொண்டிருக்கின்றன, நான் உடலுறவை பற்றி நினைத்தவுடன், நான் அதில் உமிழ விரும்புகிறேன்." அதுதான் விதிர்ஷ்னா, எந்த ஈர்ப்பும் இல்லை, இந்த ஜட உலகின் ஈர்ப்பின் மையப் புள்ளி உடலுறவு வாழ்க்கையாகும், ஒருவர் இந்த உடலுறவு வாழ்க்கையிலிருந்து விலகி பிரியும் பொழுது, ததாவதி மம சேதா., யதாவதி மம சேதா: க்ருஷ்ண-பாதாரவிந்தயோர் நவ-நவ-(ரஸ-)தாம (அநுதியாத) ரந்தம் ஆஸீத்: தடாவாதி பத நாரீ-சண்கமெ ஸ்மர்யமாநெ பவதி முக-விகாரஹ சஸ்து நிஸ்தீவனம் ச. "உடலுறவை பற்றி நினைத்தவுடனே, உடனடியாக என் வாய் மறுபுறம் திரும்புகிறது, மேலும் நான் அதில் உமிழ விரும்புகிறேன்." ஆகையினால் கிருஷ்ணர் மதன-மோஹன. மதன அனைவரையும் கவருகிறார், பாலியல் வாழ்க்கையில், மேலும் கிருஷ்ணர், ஒருவர் கிருஷ்ணரால் கவரப்பட்டால், பிறகு மதனாவும் வீழ்த்தப்படுவார். மதன வீழ்த்தப்பட்டவுடனே, நாம் இந்த ஜட உலகில் வெற்றிக் கொள்கிறோம். இல்லையெனில் இது மிகவும் கடினம்.