TA/Prabhupada 0755 - கடலால் வருந்துபவர்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0755 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0754 - Very Instructive Struggle Between the Atheist and the Theist|0754|Prabhupada 0756 - Modern Education - There Is No Real Knowledge|0756}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0754 - நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் இடையே அறிவுறுத்தும்படியான போராட்டம்|0754|TA/Prabhupada 0756 - நவீன கல்வியில் உண்மையான ஞானம் இல்லை|0756}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:24, 19 July 2021



Lecture on SB 6.1.7 -- Honolulu, May 8, 1976

பிரபுபாதா: நீங்கள் பகவத் - கீதையை படித்திருக்கிறீர்கள். "சர்வ - யோனிஷு ": என்றால், எல்லா பிறப்புகளின் மூலங்களிலும். சர்வ - யோனிஷு சம்பவந்தி மூர்த்தயோ யஹ் (ப கீ 14.4). உயிரினங்களில், வெவ்வேறு வடிவங்கள் உள்ளன, மொத்தம் 8,400,000. அவை அனைத்தும் உயிர் வாழிகள், ஆனால் கர்மாவின் படி, அவை வெவ்வேறு உடல்களைப் பெற்றுள்ளன. இதுதான் வித்தியாசம். நமது விருப்பப்படி வெவ்வேறு ஆடைகள் கிடைத்ததைப் போலவே, அதேபோல், நமது விருப்பப்படி வெவ்வேறு உடல்களையும் பெறுகிறோம். இன்று காலை நாம் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம் ... என்ன அழைக்கப்படுகிறது? கடல் பாதிக்கப்படுகிறதா?

பக்தர்: உலாவர்

பிரபுபாதா: உலாவர், ஆம். (பக்தர்கள் சிரிக்கிறார்கள்) உலாவர். நான் "பாதிக்கப்பட்டவர்" என்று அழைக்கிறேன். "கடல் பாதிக்கப்பட்டவர்." (சிரிப்பு). கடல் உலாவர், இது நடைமுறைக்குரியது, ஏனென்றால் நாம் ஒரு மீனாக மாறும் சூழ்நிலையை உருவாக்குகிறோம். (சிரிப்பு) ஆம். மாசு. நீங்கள் ஏதேனும் ஒரு நோயை வேண்டுமென்றே மாசுபடுத்திக்கொள்வது போல, நீங்கள் அந்த நோயால் பாதிக்கப்பட வேண்டும். காரணம் குண-சங்கோ சிய சத்- அஸத் ஜென்ம - யோனிஷு (ப கீ 13 22) , பகவத் கீதையில் உயிரினங்களில் பல்வேறு வகைகள் ஏன் உள்ளன? காரணம் என்ன? அதன் பொருள் காரணம் என்று . பகவத்தில் கிருஷ்ணர் கூறுகிறார் ... காரணம் குண- சங்கோ 'அஸ்ய சத - அஸத் ஜென்ம-யோனிஷு . ப்ரக்ரிதேஹ் க்ரியமானானி (ப கீ 3 27) பிரகிர்தி -ஸ்தோ அபி புருஷாஹ் பூஞ்சனதே தத் குணான் (ப கீ 13 22) . ஆகவே காரணம் ... நாம் இயற்கையை மாசுபடுத்துவதால் .. இயற்கையின் விதி மிகவும் சரியானது, உங்களுக்கு ஏதாவது, சில நோய், சில மாசுபாடுகள் மூலம் தொற்று ஏற்பட்டால், நீங்கள் கஷ்டப்பட வேண்டும். இது இயற்கையின் விதி தானாகவே நடக்கிறது. காரணம் குண- சங்கோ 'ஸ்ய. எனவே பௌதீக இயற்கையின் மூன்று முறைகள் உள்ளன - ஸத்வ குணம், ரஜோ குணம், மற்றும் தமோ குணம். இவ்வளவு காலமாக நாம் இந்த பொருள் உலகில் இருக்கிறோமோ, புருஷாஹ் பிரகிர்தி -ஸ்தோ அபி புருஷாஹ் பூஞ்சனதே தத் குணான். நாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தால், அந்த இடத்தின் முறைகளால் நாம் பாதிக்கப்பட வேண்டும்.

எனவே மூன்று முறைகள் உள்ளன: சத்வா - குணா, ராஜோ-குணா ... நாம் ஸத்வ குணத்தோடு, அல்லது ரஜோ குணத்தோடு, அல்லது தமோ குணத்தோடு தொடர்புபடுத்த வேண்டும். இப்போது மும்மூன்று, அது ஒன்பது, ஒன்பது ஒன்பதும், அது எண்பத்தி ஒன்று ஆக மாறுகிறது. எனவே கலவை. நிறம் போல. மூன்று வண்ணங்கள் உள்ளன: நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள். இப்போது வண்ணத்தை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள், கலைஞர்களே, அவர்கள் இந்த மூன்று வண்ணங்களையும் வெவ்வேறு வழியில் கலந்து அவர்கள் காண்பிக்கிறார்கள். இதேபோல், குணங்கள் அல்லது கலவையின் படி, சங்கம் - காரணம் குண- சங்கோ 'அஸ்ய - நாம் பல்வேறு வகையான உடல்களைப் பெறுகிறோம். எனவே நாம் பல வகையான உடல்களைக் காண்கிறோம். காரணம் குண- சங்கோ 'அஸ்ய (ப கீ 13 22) . ஆகவே, மீன்களைப் போல கடலில் நடனமாடிமிகுந்த மகிழ்ச்சியைப் பெறுபவர், , எனவே அவர் இயற்கையின் முறைகளை மாசுபடுத்துகிறார், இதனால் அடுத்த ஜென்மத்தில் அவர் ஒரு மீனாக பிறவி எடுப்பார். அவர் கடலுடன் நடனமாட மிகவும் சுதந்திரமாக இருப்பார். (சிரிப்பு). இப்போது, ​​மனிதனின் நிலைக்கு வர, அவருக்கு மீண்டும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும். ஜலஜா நவ- லக்ஷானி ஸ்தாவரா லக்ஷ- விம்ஷதி அவர் மீன் வாழ்க்கையை கடந்து செல்ல வேண்டும். 900,000 வெவ்வேறு உயிரினங்கள் உள்ளன. நீங்கள் மீண்டும் நிலத்திற்கு வருகிறீர்கள் - நீங்கள் மரங்கள், தாவரங்கள் மற்றும் பலவற்றாக மாறுகிறீர்கள். நீங்கள் செல்ல வேண்டிய இரண்டு மில்லியன்களான வெவ்வேறு வடிவங்கள். அதுவே பரிணாமம். டார்வின் பரிணாமக் கோட்பாடு, அது சரியாக விளக்கப்படவில்லை. இது வேத இலக்கியங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆகவே ... ஒரு மரம் பத்தாயிரம் ஆண்டுகளாக நிற்கிறது, இந்த வாழ்க்கையை நாம் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஆனால் முழுமையான அறிவு இல்லை. நாம் இப்போது நமக்கு மிகவும் நல்ல அமெரிக்க உடல் அல்லது இந்திய உடல் கிடைத்துள்ளது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். இல்லை. இந்த வாழ்க்கைக்கு வர பல ஆண்டுகள் ஆனது. எனவே சாஸ்திரம் கூறுகிறது, லப்தவா சுதுர்லாபம் இதம் பஹு- சம்பவாந்தே (ஸ்ரீ பா 11.9.29): "பல, பல மில்லியன் ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இந்த மனித வடிவத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள்." எனவே அதை தவறாக பயன்படுத்த வேண்டாம். அதுவே வேத நாகரிகம், மனித வாழ்க்கையை தவறாகப் பயன்படுத்தக்கூடாது.