TA/Prabhupada 1009 - ஆன்மீக குருவை நீங்கள் கடவுளாக மதிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவருக்கு கடவுளின் வசதி: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 1008 - My Guru Maharaja Ordered Me 'Go and preach this cult in the Western countries'|1008|Prabhupada 1010 - You Can See Wood, Stone. You Cannot See What is Spirit|1010}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 1008 - எனது குரு மகாராஜா 'மேற்கத்திய நாடுகளில் சென்று இந்த வழிபாட்டை போதியுங்கள்' என்று கட்டள|1008|TA/Prabhupada 1010 - நீங்கள் மரம், கல் பார்க்க முடியும். ஆன்மா என்றால் என்ன என்று நீங்கள் பார்க்க முடியாது|1010}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:36, 16 August 2021



750713 - Conversation B - Philadelphia

ஆனி ஜாக்சன்: நீங்கள் மிகவும் சிறியவர், நீங்கள் கடவுள் இல்லை என்று கூறியுள்ளீர்கள், ஆனாலும் பக்தர்கள் உங்களை கடவுளாகவே கருதுகிறார்கள் என்பது எனக்கு ஒரு வெளி நபராகத் தோன்றுகிறது.

பிரபுபாதர்: ஆம், அது பக்தரின் கடமை. அரசாங்க அதிகாரியைப் போல. தனிப்பட்ட முறையில் அவர் மிகவும் முக்கியமல்ல, ஆனால் எவ்வளவு காலம் அவர்கள் அரசாங்க உத்தரவை நிறைவேற்றுகிறார்களோ, அவர் அரசாங்கமாக மதிக்கப்பட வேண்டும். அதுதான் வழி. ஒரு சாதாரண போலீஸ்காரர் கூட வருகிறார் என்றால், அவர் அரசாங்க மனிதர் என்பதால் நீங்கள் அவரை மதிக்க வேண்டும். ஆனால் அவர் அரசாங்கம் என்று அர்த்தமல்ல. அவர் மதிக்கப்படுகிறார். ஸாக்ஷாத்-தரித்வேன ஸமஸ்த-ஷாஸ்த்ரைர் உக்தஸ் ததா பாவ்யத ஏவ ஸத்பி:. அந்த மனிதர் "நானே அரசாங்கம், மக்கள் என்னை மதிக்கிறார்கள்" என்று நினைத்தால், அவர் முட்டாள். எனவே ... ஆனால் அது ஆசாரம். அரசாங்க மனிதர் வந்தால், அவரை அரசாங்கமாக மதிக்க வேண்டும்.

ஆனி ஜாக்சன்: அதே யோசனையுடன், பல அழகான பொருள் விஷயங்களைப் பற்றியும் நான் ஆச்சரியப்படுகிறேன், பக்தர்கள் உங்களிடம் கொண்டு வருகிறார்கள், உதாரணமாக, நீங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறியபோது, நீங்கள் ஒரு அழகான, பெரிய, ஆடம்பரமான காரில் புறப்பட்டீர்கள், இதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்...

பிரபுபாதர்: அது எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்பிக்கிறது. அரசாங்க மனிதனை நீங்கள் அரசாங்கமாக மதிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவரை அப்படி நடத்த வேண்டும்.

ஆனி ஜாக்சன்: ஆனால் ...

பிரபுபாதர்: ஆன்மீக குருவை கடவுளாக மதிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவருக்கு கடவுளின் வசதிகளை வழங்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் அவரை கடவுளாக எப்படி கருதுகிறீர்கள்? வெறுமனே மனதில்? செயலிலும்.

ஆனி ஜாக்சன்: மன்னிக்கவும். கடைசியாக நீங்கள் என்ன சொன்னீர்கள்?

பிரபுபாதர்: ஆன்மீக குருவை கடவுளாகக் கருதினால், எனவே அவரை கடவுளாகவே கருதுகிறார் என்பதை அவர் நடைமுறையில் காட்ட வேண்டும். எனவே கடவுள் தங்க காரில் பயணம் செய்கிறார். எனவே ஆன்மீக குருவுக்கு சாதாரண மோட்டார் கார் வழங்கப்பட்டால், ஆகவே அது போதாது, ஏனென்றால் அவர் கடவுளைப் போலவே நடத்தப்பட வேண்டும். கடவுளுக்கு இந்த மோட்டார் கார் என்ன? (சிரிப்பு) அது இன்னும் குறைவு கடவுள் உங்கள் வீட்டிற்கு வந்தால், நீங்கள் அவரை சாதாரண மோட்டார் காரில் கொண்டு வருவீர்களா? அல்லது நீங்கள் அவரை கடவுளாகக் கருதினால், தங்கக் காரை ஏற்பாடு செய்வீர்களா? எனவே உங்கள் கருத்து என்னவென்றால், அவர்கள் எனக்கு நல்ல மோட்டார் காரை வழங்குகிறார்கள், ஆனால் அது போதாது என்று நான் சொல்கிறேன். அதுவே அவரை கடவுளாகக் கருதுவது இன்னும் குறைவு. நடைமுறையில் இருங்கள்.

ஆனி ஜாக்சன்: நேற்று நியூயார்க்கில் இருந்து வந்த ஒரு பக்தரைச் சந்தித்தேன் திருவிழாவில் மற்ற கிரகங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர், நீங்கள் அவர்களைப் பார்க்க முடியும் என்று அவர் சொன்னார். அது உண்மையா?

பிரபுபாதர்: ஆம், ஆம். எல்லோரும் பார்க்கலாம். உங்களுக்கு கண்கள் இருந்தால், நீங்களும் பார்க்கலாம். ஆனால் உங்களுக்கு கண்கள் இல்லையென்றால், அவர்கள் ஒரு நல்ல மோட்டார் காரை வழங்கியதால் நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள். எனவே நீங்கள் கண்களால் பார்க்க வேண்டும். ஒரு குருடனால் பார்க்க முடியாது. எப்படி பார்ப்பது என்று கண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

ஆனி ஜாக்சன்: இது உங்கள் மற்ற புலன்களுக்கும் உண்மையா?

பிரபுபாதர்: ஒவ்வொரு புலன்களுக்கும். நீங்கள் எதையாவது பார்க்க விரும்பினால், எப்படிப் பார்ப்பது என்பது குறித்து உங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஒரு விஞ்ஞானி நுண்ணோக்கி மூலம் எதையாவது பார்ப்பது போல. நீங்கள் வெறும் கண்களால் பார்க்க விரும்புகிறீர்கள். எப்படி பார்க்க முடியும்? நீங்கள் பார்க்கும் செயல்முறையை பின்பற்ற வேண்டும். பின்னர் நீங்கள் எல்லாவற்றையும் பார்க்கலாம்.