TA/Prabhupada 0262 - பக்தி என்றால் ஹிருஷிகேஷவிற்கு சேவை செய்வது, புலன்களின் எஜமானர்
Lecture -- Seattle, September 27, 1968
Tamāla Kṛṣṇa: பிரபுபாதா , நமக்கு சேவை செய்ய விருப்பம் இருக்கின்றது .. செய்யவேண்டும் என்று உறுதியாக இருக்கின்றோம்,.ஆனால் நம் சேவை முழுமையாக இல்லை என்று தெரியும் போது என்ன செய்யவேண்டும் பிரபுபாதா : ஆம் .. எப்பொழுதுமே உன் சேவை முழுமையாக இருக்கின்றது என்று நினைக்காதே.. அது உன்னை சிறந்த நிலையில் வைத்திருக்கும் நம் சேவை எப்பொழுமே முழுமை அடைந்துவிட்டது என்று நினைக்கவே கூடாது. ஆம் அது மிக சரியானது சைதன்ய மகாபிரபு , நமக்கு கூறியதை போல.. என் அன்பு நண்பர்களே.. என்னிடமிருந்து கிருஷ்ணரின் பக்தி இல்லை என்று ஒரு சிட்டிகை எடுத்து பாருங்கள்.. நான் ஏன் அழுகிறேன் என்றால், நான் ஒரு நல்ல பக்தன் என்பதால் ... என்னிடம் ஒரு துளி கூட கிருஷ்ணரின் மேல் காதல் இல்லை.. இதை அழுகை என்பது என்னுடைய நிகழ்ச்சி .. நீங்கள் ஏன் அப்படி கூறுகிறீர்கள் " இப்பொழுது என்னவென்றால், நான் இன்னும் கிருஷ்ணரை காண முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.. அப்படி என்றால்.. கிருஷ்ணரின் மேல் எனக்கு அன்பு இல்லை என்று தான் பொருள்.. நான் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றேன்.. நான் கிருஷ்ணரை காணாமல் முன்னரே இறந்திருக்க வேண்டும்.. எனவே,. நாம் இதை போல சிந்திக்க வேண்டும்.. நீங்கள் எவ்வளவு சிறப்பான சேவை செய்யதாலும் , நீங்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும் கிருஷ்ணர் வரம்பற்றவர்.. நீங்கள் எவ்வளவு சிறப்பாக சேவை செய்தாலும் அது அவரை முழுமையாக சென்று அடையாது அது எப்பொழுதுமே முழுமையடையாமல் தான் இருக்கும்.. ஏன் என்றால் நாம் வரையறுக்கப்பட்டவர்கள் ஆனால்.. கிருஷ்ணர் மிகவும் கருணை உடையவர்.. நீங்கள் செய்யும் சிறு சேவையை கூட அவர் ஏற்றுக்கொள்வார் அது தான் கிருஷ்ணருடைய அழகு. Svalpam apy asya dharmasya trāyate mahato bhayāt. கிருஷ்ணர் உன்னுடைய சிறிய சேவையை ஏற்றுக்கொண்டால், பின்னர் உன் வாழ்வு ஒளிமயமானதாக இருக்கும்... எனவே, கிருஷ்ணருக்கு சேவை செய்வது முழுமையாக செய்ய இயலாது.. ஏன் என்றால் அவர் எல்லையற்றவர் இந்தியாவில் கங்கை நதியை வழிபடும் பழக்கம் இருக்கின்றது கங்கை நதி மிகவும் தூய்மையானதாக கருதப்படுகிறது கங்கை நதியை அவர்கள் வழிபடுகிறார்கள் . கங்கை நதி கங்கையிலிருந்து நீரை எடுத்து படைப்பார்கள் சிறிய பானையிலோ அல்லது கைகளினாலோ.. கங்கையிலிருந்து நீரை எடுத்து பக்தியுடன் மந்திரத்தை கூறி.. கங்கை நீரை காணிக்கையாக கொடுப்பார்கள்.. எனவே நீ ஒரு கவளை தண்ணீரை கங்கையிலிருந்து எடுத்து கங்கைக்கே கொடுப்பார்கள்.. இதில் கங்கைக்கு லாப நஷ்டம் என்ன இருக்கின்றது கங்கையிலிருந்து ஒரு குவளை நீரை எடுத்து கங்கைக்கே திரும்பவும் கொடுப்பதால், கங்கைக்கு என்ன பலன்.. ஆனால் உங்களின் செயல்முறை , உங்களின் நம்பிக்கை, மற்றும் உங்களின் கங்கை மேல் உள்ள அன்பு ஆகியவை , "கங்கை தாயே .. உனக்கு இந்த சிறிய நீரை காணிக்கையாக தருகிறேன்"இது ஏற்றுக்கொள்ள படுகிறது இதை போல கிருஷ்ணருக்கு கொடுப்பதற்கு நிமிடம் என்ன இருக்கின்றது ? எல்லாமே அவனுடையது.. இந்த பழங்களை கிருஷ்ணருக்கு கொடுக்கிறோம்.. இது நம்முடையதா ? இந்த பழங்களை யார் செய்தது யார்? நானா ? ஒரு பழத்தை, ஒரு நெல்லை, அல்லது பாலினை செய்வதற்கு மனித அறிவினால் இயலுமா ? அவர்கள் மிக பெரிய விஞ்ஞானிகள் .. அவர்கள் அதை உற்பத்தி செய்யட்டும் பசு புல்லை தின்றுவிட்டு உங்களுக்கு பாலை தருகிறது அறிவியலை வைத்து, ஒரு புல்லை எப்படி நீங்கள் பாலாக மாற்றுவீர்கள் அப்பொழுது கூட முட்டாள்கள் கடவுள் இல்லை என்று தான் கூறுவார்.. மிகவும் முட்டாள்களாக இருக்கின்றார்கள்..அறிவியல் என்று சொல்கிறார்கள்... பசு புல்லை தின்று விட்டு பாலை தருகின்றது அதை போல் உன் மனைவியிடம் குடுத்து பாலை வாங்கி கொள்ளலாமே.. எதற்காக கடைக்கு சென்று வாங்க வேண்டும் ஆனால் இந்த புல்லை மனிதனுக்கு கூடுதல் அவன் இறந்துவிடுவான் எனவே.. அனைத்துமே கடவுளின் சட்டப்படியே கிருஷ்ணரின் சட்டப்படியே நடக்கின்றது இருந்தும் சிலர் , கடவுள் இல்லை.. நான் தான் கடவுள் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள் நீங்கள் இப்படி செய்யுங்கள் இதை.. அவர்கள் அனைவரும் முட்டாள்களாக , ஏமாளிகளாக ஆகிறார்கள் இந்த கூட்டத்திற்கு அவர்கள் ஏன் வருவதில்லை ? இந்த ஸ்வாமிஜி கடவுளை பற்றி பேசுகிறார் .. பழைய கதைகள் ..(சிரிக்கிறார்.) நாம் புதிதாக ஒன்றை கண்டுபிடித்தோம்.. கவனித்தீர்களா ஒருவன் சம்மந்தமே இல்லாமல் முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருந்தால்.. ஐயோ .. அவன் .. நான்கு மணி நேரம் பூஜ்யத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறான்.. மாண்ட்ரீல் எனும் இடத்தில் ஒருவர் கூறினார் .. "ஸ்வாமிஜி , அவர் வியத்தகும் வகையில் 4 மணி நேரம் பூஜ்யத்தை பற்றி பேசினார் " அவர் எவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பின் நான்கு மணி நேரம் பூஜ்யத்தை பற்றி கேட்டுக்கொண்டிருப்பார் ... பூஜ்யத்தின் மதிப்பு என்ன ? நீ உன் நேரத்தை , 4 மணி நேரத்தை பூஜ்யத்திற்காக செலவிடுவதால் பயன் என்ன மக்கள் இதை விரும்புகிறார்கள் .. நாம் எளிமையான விஷயங்களை சொன்னால் .. " கடவுள் பெரியவர். நீ அவரின் வேலைக்காரன் .. நித்திய பணியாள் உனக்கென்று எந்த சக்தியும் கிடையாது.. கடவுளை சார்ந்து தான் நீ இருக்கவேண்டும்.. நீ உன்னுடைய பணியை கடவுளுக்கு செய்.. நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய் " இப்படி நாம் கூறினால் .. அவர்கள் ..."ஐயோ இது நன்றாக இல்லை " என்கிறார்கள் அவர்கள் ஏமாற்றம் அடைய ஆசைப்படுகிறார்கள்.. எனவே பலவகையான ஏமாற்றுக்காரர்கள் வந்து ஏமாற்றி விட்டு செல்கிறார்கள் மக்கள் ஏமாற்றம் கொள்கிறார்கள். எளிமையான விஷயங்களை செய்ய அவர்கள் விரும்புவதில்லை