TA/690911 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 15:09, 18 September 2022 by SumangalaLaksmi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதர்: மந்திரத்திற்கு ஆற்றல் இருக்கிறது என்றால், மக்கள் அனைவரும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது ஏன் இரகசியமாக இருக்க வேண்டும்?

ஜியார்ஜ் ஹெரிஸன்: நம்மிடம் இருக்கும் மந்திரத்தை மக்கள் அனைவரும் பெற்றுக் கொள்ளலாம், ஆனால் அவர்கள் ஏனோ மற்றவர்களிடம் பெற்றுக் கொள்ள முனைகிறார்கள். நாம் அவர்களுக்கு கொடுக்கலாம், அது எல்லொருக்கும் கிடைக்கும்.

பிரபுபாதர்: ஆம். மந்திரா, அது மதிப்புமிக்கது என்றால், அது எல்லொருக்கும் மதிப்புமிக்கது தான். அது ஏன் ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் இருக்க வேண்டும்?

ஜான் லெனின்: அனைத்து மந்திராவும்... அனைத்து மந்திராவும் சும்மா பகவானின் பெயர்தான். அது இரகசியமான மந்திரா அல்லது போதுவானதாக இருந்தாலும், அவை அனைத்தும் பகவானின் பெயர்தான். எனவே அதில் அதிக வேறுபாடு இருக்காது, இல்லையா, நீங்கள் எதைப் பாடுகிறீர்கள்?

பிரபுபாதர்: இல்லை. எவ்வாறு என்றால் மருந்துக் கடையில் அவர்கள் எல்லா மருந்துக்களையும் நோய்ககளை குணப்படுத்துவதற்காக விற்கிறார்கள். இருப்பினும், நீங்கள் வைத்தியரின் மருந்துச்சீட்டை கொண்டு தான் ஒரு குறிப்பிட்ட மருந்தை வாங்கலாம். இல்லையெனில் அவர்கள் உங்களுக்கு கொடுக்கமாட்டார்கள். நீங்கள் மருந்துக் கடைக்கு சென்று, "நான் நோய்வாய்பட்டிருக்கிறேன். நீ எனக்கு ஏதாவது மருந்து கொடு," அது அல்ல... அவன் உங்களை கேட்பான், " உன் மருந்துச்சீட்டு எங்கே?" எனவே அதேபோல், இந்த யுகத்தில், இந்த கலியுகத்தில், இந்த மந்திரா, ஹரே கிருஷ்ணா மந்திரா, சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, ஒரு சிறந்த வல்லவர்— நாங்கள் அவரை கிருஷ்ணரின் அவதாரமாக கருதுகிறோம் - சைதன்ய மஹாபிரபு, அவர் இதை போதித்தார். ஆகையினால் எங்கள் கொள்கை யாதெனில் எல்லோரும் பின்பற்ற வேண்டும். மஹாஜனோ யேன கத꞉ ஸ பந்தா꞉ (சி.சி. மத்ய 17.186). நாங்கள் சிறந்த அதிகாரிகளின் அடிச்சுவட்டை பின்பற்ற வேண்டும். அதுதான் எங்கள் வேலை."

690911 - உரையாடல் with John Lennon, Yoko Ono and George Harrison - டிட்டேன்ஹர்ஸ்ட்