TA/Prabhupada 0599 - கிருஷ்ண பிரக்ஞை என்பது சுலபமானதல்ல - சரனாகதி அடையாமல் அதனைப் பெறமுடியாது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0599 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0598 - We cannot Understand How Great God is. That is our Folly|0598|Prabhupada 0600 - We are not Prepared to Surrender, This is our Material Disease|0600}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0598 - கடவுள் எவ்வளவு சிறப்பானவர் என்பதை நாம் உணரமாட்டோம் - இது நம் முட்டாள்தனம்|0598|TA/Prabhupada 0600 - நாம் சரனாகதி அடைவதற்கு தயாராகவில்லை - இது நமது பௌதிக வியாதியாகும்|0600}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:35, 25 June 2021



Lecture on BG 2.23 -- Hyderabad, November 27, 1972

எனவே மற்றொரு இடத்தில் பிரம்ம-சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது: வேதேஷு துர்லபம் அதுர்லபம் ஆத்ம-பக்தாவ் (பிரம்ம சம்ஹிதை 5.33) வேதேஷு. நீங்கள் வெறுமனே வேதங்களைப் படித்தால், வேதத்தைப் படிப்பதன் இறுதி குறிக்கோள் கிருஷ்ணரை அறிவதுதான் என்றாலும், ஆனால் உங்கள் சொந்த யூகங்களால் நீங்கள் வேதங்களைப் படிக்க விரும்பினால், அவர் எப்போதும் அரிதாகவே இருப்பார். வேதேஷு துர்லபம் அதுர்லபம் ஆத்ம-பக்தௌ (பிரம்ம சம்ஹிதை. 5.33) ஆனால் நீங்கள் கடவுளுடைய பக்தரை அணுகினால், அவர் விடுவிக்க முடியும். அவர் விடுவிக்க முடியும். மஹீயஸாம் பாத-ரஜோ-'பிஷேகம் நிஷ்கிஞ்சனானாம் ந வ்ருணீத யாவத், நைஷாம் மதிஸ் தாவத் உருக்ரமாங்க்ரிம் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.32) பிரகலாத மஹாராஜா கூறுகையில், "உங்களுக்கு கிருஷ்ண உணர்வு இருக்க முடியாது ..." நைஷாம் மதிஸ் தாவத் உருக்ரமாங்க்ரிம் கிருஷ்ணரின் உணர்வு அவ்வளவு எளிதானது அல்ல. நீங்களே சரணடையாவிட்டால் நீங்கள் அதை அடைய முடியாது. நிஷ்கிஞ்சனானாம், மஹீயஸாம் பாத-ரஜோ-'பிஷேகம் நிஷ்கிஞ்சனானாம் ந வ்ருணீத யாவத். நீங்கள் ஒரு பக்தரின் தாமரை பாதங்களின் தூசியை எடுக்காத வரை, நிஷ்கிஞ்சனானாம் இந்த பௌதிக உலகத்துடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை - அவர் வெறுமனே இறைவனின் சேவையில் அக்கறை கொண்டவர் அத்தகைய நபருடன் நீங்கள் தொடர்பு கொள்ளாவிட்டால், கிருஷ்ணபக்தியை அடைய முடியாது. இவை சாஸ்திரம் சொல்வது .

எனவே கிருஷ்ணர் என்பவர் முழுமுதற் கடவுள், அவர் நபர். ஆனால் நாம் ஒரு கிருஷ்ண-பக்தர் மூலமாகச் செல்லாவிட்டால் அவரைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள, கிருஷ்ணர் ஒரு பக்தராக வந்துள்ளார், அவர் தான் பகவான் சைதன்ய மஹாபிரபு. ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த ஆகவே நாம் கிருஷ்ணரை பகவான் சைதன்யர் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கிருஷ்ணர் தானே வந்துவிட்டார் ...க்ருஷ்ணாய க்ருஷ்ண-சைதன்ய-நாம்னே. ரூப கோஸ்வாமி, அவர் முதல் முறையாக சைதன்ய மஹாபிரபுவை சந்தித்தபோது ... முதலில் இல்லை, இரண்டாவது முறையாக. நவாப் ஹுசைன் ஷாவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது அவர் முதன்முதலில் சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு, சைதன்ய மஹாபிரபு அவர்கள் தன்னுடைய பணியை நிறைவேற்ற விரும்பினார். எனவே அவர்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்புவதற்காக அரசாங்க சேவையில் இருந்து ராஜினாமா செய்து சைதன்ய மஹாபிரபுவுடன் சேர முடிவு செய்தனர். ஆகவே, ரூப கோஸ்வாமி, அலகாபாத்தில் சைதன்ய மஹாபிரபுவை சந்தித்தபோது இது தொடர்பாக அவர் இயற்றிய முதல் ஸ்லோகம், அவர் கூறினார் நமோ மஹா-வதான்யாய க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாய தே: (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 19.53) "என் பிரபுவே, நீங்கள் மிகவும் அற்புதமான அவதாரம்." ஏன்? "ஏனென்றால் நீங்கள் கிருஷ்ண பிரேமையை பரப்புகிறீர்கள் கிருஷ்ண என்றால் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியாத போது., கிருஷ்ண பிரேமையை பற்றி என்ன பேசுவது ஆனால் அந்த கிருஷ்ண-பிரேமையை, நீங்கள் பரப்புகிறீர்கள் நமோ மஹா-வதான் ... "எனவே நீங்கள் மிகவும் அற்புதமான, தானம் செய்யும் நபர்." நமோ மஹா-வதான்யாய வதான்யாய என்றால் தானம் செய்பவர், நீங்கள் விரும்பும் அளவுக்கு தானம் செய்பவர்.