TA/Prabhupada 0600 - நாம் சரனாகதி அடைவதற்கு தயாராகவில்லை - இது நமது பௌதிக வியாதியாகும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0600 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0599 - Krsna Consciousness is not Easy. You cannot have it Unless You Surrender Yourself|0599|Prabhupada 0601 - Caitya-guru means Who gives Conscience and Knowledge from Within|0601}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0599 - கிருஷ்ண பிரக்ஞை என்பது சுலபமானதல்ல - சரனாகதி அடையாமல் அதனைப் பெறமுடியாது|0599|TA/Prabhupada 0601 - தனக்குள்ளேயிருந்து உணர்வையும், அறிவையும் வழங்குபவர் சைதகுரு ஆவார்|0601}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:50, 1 July 2021



Lecture on BG 2.23 -- Hyderabad, November 27, 1972

எனவே சைதன்ய மஹாபிரபு, மக்கள் கிருஷ்ணரை தவறாக புரிந்து கொண்டதால். பகவத் கீதையில் "நீங்கள் என்னிடம் சரணடையுங்கள்" என்று கிருஷ்ணர் கூறினார். அவரால் என்ன செய்ய முடியும்? அவர் கடவுள். அவர் கிருஷ்ணர் அங்கே அவர் உங்களிடம் கேட்கிறார், உங்களுக்கு கட்டளையிடுகிறார்: "நீ சரணடையவும், நான் உனக்குப் பொறுப்பேற்கிறேன்." அஹம் த்வம் சர்வ-பாபே….. ஆனால் இன்னும், மக்கள் தவறாக புரிந்து கொண்டனர்: "ஓ, நான் ஏன் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும்? அவரும் என்னைப் போன்ற ஒரு மனிதர். கொஞ்சம் முக்கியமானவராக இருக்கலாம். ஆனால் நான் ஏன் அவரிடம் சரணடைய வேண்டும்? " ஏனென்றால் இங்கே சரணடையக்கூடாது என்பது பௌதிக நோய் . எல்லோரும் மூழ்கி இருக்கிறார்கள் "நான் ஒரு இவர் அவர் என்று." இது பௌதிக நோய். எனவே இந்த பௌதிக நோயிலிருந்து குணமடைய நீங்கள் சரணடைய வேண்டும்.

தத் வித்தி ப்ரணிபாதேன
பரிப்ரஷ்நேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம்
ஜ்ஞானினஸ் தத்த்வ-தர்ஷின:
(பகவத் கீதை 4.34)

எனவே நீங்கள் சரணடையத் தயாராக இல்லாவிட்டால் ... பௌதிகஆசையில் இருப்பவர்களுக்கு அது ஒரு பெரிய கடினமான வேலை. யாரும் சரணடைய விரும்பவில்லை. அவர் போட்டியிட விரும்புகிறார். தனித்தனியாக, ஒருவருக்கு ஒருவர், குடும்பத்திற்கு குடும்பம், தேசத்திற்கு தேசம், எல்லோரும் எஜமானராக மாற முயற்சிக்கின்றனர். இதில் சரணடைவதற்கான கேள்வி எங்கே? சரணடைவதில் கேள்வியே இல்லை. எனவே இது நோய். ஆகவே, இந்த மோசடியை அல்லது மிக நீண்டகால நோயைக் குணப்படுத்த நீங்கள் சரணடைய வேண்டும் என்று கிருஷ்ணர் கோருகிறார். ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66) "பிறகு? நான் சரணடைந்தால், முழு விஷயமும் தோல்வியாக இருக்குமா? எனது வணிகம், எனது திட்டங்கள், எனது, பல விஷயங்கள் ...? "இல்லை. நான் உனக்கு பொறுப்பேற்கிறேன். நான் உனக்கு பொறுப்பேற்கிறேன். அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:. "கவலைப்பட வேண்டாம்." இவ்வளவு உத்தரவாதம் இருக்கிறது. இன்னும், நாம் சரணடையத் தயாராக இல்லை. இது நம் பௌதிக நோய் எனவே கிருஷ்ணர் மீண்டும் சரணடைவது எப்படி என்பதைக் காட்ட ஒரு பக்தராக மீண்டும் வந்தார். சைதன்ய மஹாபிரபு. க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம் ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம் (ஸ்ரீமத் பாகவதம் 11.5.32)

எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் விஞ்ஞானமானது மற்றும் அங்கீகாரம் பெற்றது இது ஒரு போலியான விஷயம் அல்ல, மனதின் கலவையால் தயாரிக்கப்படும் ஒன்று அல்ல கிருஷ்ணர் சொல்வது போல், வேத போதனையின் அடிப்படையில் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66). எனவே இந்த தத்துவத்தை மட்டுமே நாங்கள் கற்பிக்கிறோம், நீங்கள் ... இதோ கிருஷ்ணர்…. முழுமுதற்கடவுள் நீங்கள் கடவுளைத் தேடுகிறீர்கள். கடவுள் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. இங்கே இருக்கிறார் கடவுள், கிருஷ்ணர் அவரது பெயர், அவரது செயல்பாடுகள், எல்லாம் பகவத்-கீதையில் உள்ளன. நீங்கள் அவரை ஏற்றுக்கொண்டு சரணடையுங்கள். கிருஷ்ணர் சொல்வது போல், மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு (பகவத் கீதை 18.65) எனவே நாங்கள் பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளபடியே அதை பேசுகிறோம். நாங்கள் தவறாகப்பொருள் கொள்ளவில்லை. நாங்கள் பகவத்-கீதையை கெடுக்க மாட்டோம். இந்த குறும்புகளை நாங்கள் செய்வதில்லை. சில நேரங்களில் மக்கள், "சுவாமிஜி, நீங்கள் அற்புதமாக செய்திருக்கிறீர்கள்" என்று கூறுகிறார்கள். ஆனால் என்ன அற்புதம்? நான் ஒரு மந்திரவாதி அல்ல. எனது ஒரே பங்களிப்பு நான் பகவத்-கீதையை கெடுக்கவில்லை. நான் அதை உள்ளது உள்ளபடி முன்வைத்துள்ளேன். எனவே அது வெற்றிகரமாக உள்ளது.

மிக்க நன்றி. ஹரே கிருஷ்ணா(முடிவு)