TA/Prabhupada 0625 - வாழ்வுக்கு அவசியமானவை அனைத்தும் கடவுளால் அளிக்கப்படும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0625 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0624 - The God is also Eternal and We are also Eternal|0624|Prabhupada 0626 - If you want to Learn factually Things then You should Approach Acarya|0626}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0624 - கடவுள் நிரந்தரமானவர் - நாமும் நிரந்தரமானவர்கள்|0624|TA/Prabhupada 0626 - உண்மைகளை நீங்கள் உணர விழைந்தால் - ஒரு ஆசாரியரை அணுகவும்|0626}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:56, 31 May 2021



Lecture on BG 2.13 -- Pittsburgh, September 8, 1972

எனவே நாகரீகம் பெற்ற மனிதர்களாகிய நாம் - அமெரிக்கர், இந்தியர், ஜெர்மானியர் அல்லது ஆங்கிலேயராக இருக்கட்டும். அது ஒரு பொருட்டல்ல - நாம் மிகக் குறைவு. எனவே நமக்கு பொருளாதார பிரச்சனைகள் உள்ளன. நம் பொருளாதார நிலையை வளர்க்க முயற்சிக்கிறோம். அந்த பொருளாதார நிலை என்ன? உண்பது, உறங்குவது, இனச்சேர்க்கை மற்றும் தற்காத்தல். நாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறோம், ஆனால் விலங்குகளும் சுறுசுறுப்பாக இருக்கின்றன சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும், இனச்சேர்க்கை செய்வதற்கும், பாதுகாப்பதற்கும், ஆனால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நமக்கு பிரச்சனைகள் இருக்கின்றது. எனவே புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், வாழும் உயிரினங்களின் பெரும் பகுதிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால் ... அவர்களின் வாழ்க்கைத் தேவைகள் நித்தியமான கடவுளால் வழங்கப்படுகின்றன. யானை போல. ஆப்பிரிக்க காட்டில் பத்து இலட்சம் கணக்கான யானைகள் உள்ளன. அவைகள் ஒரு நேரத்தில் ஐம்பது கிலோ சாப்பிடுகின்றன. ஆனால் அவைகள் உணவைப் பெறுகிகின்றன. இதேபோல், ஒரு சிறிய எறும்பு, அதற்கு ஒரு தானிய சர்க்கரை தேவைப்படுகிறது. எனவே அவையும் தனது உணவை பெறுகிறது. ஆகவே, நித்தியமான தெய்வம் உணவை ஏற்பாடு செய்துள்ளார், அல்லது பொருளாதார பிரச்சனைகள் இயற்கையால் தீர்க்கப்படுகின்றன. அவர்கள் எந்த வியாபாரமும் செய்வதில்லை, தொழில்நுட்பம் கற்க பள்ளி அல்லது கல்லூரிகளுக்கு செல்வதில்லை, வாழ்வாதாரத்தை சம்பாதிக்க, ஆனால் அவை வழங்கப்படுகின்றன. அவர்கள் ஆரோக்கியமானவர்கள். எந்த நோயும் இல்லை. எனவே நமது நாகரிகத்தின் முன்னேற்றம் என்னவென்றால் நாம் பிரச்சனைகளை உருவாக்கியுள்ளோம். அவ்வளவுதான். இது நமது நாகரிகத்தின் முன்னேற்றம், ஆத்மாவின் உருவாக்கம் என்ன என்பது நமக்குத் தெரியாது, இது ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு எவ்வாறு மாறுகிறது, அடுத்த வாழ்க்கை என்ன, நாம் அடுத்த பிறப்பை ஒரு மனிதனாகப் பெறுகிறோமா அல்லது மனிதனை விட சிறப்புடனா, அல்லது மனிதனை விடக் குறைவுடனா. அப்படியானால், அடுத்ததாக அந்த வாழ்க்கை வடிவத்தை நாம் எவ்வாறு பெறுகிறோம்? நாம் நித்தியமானவர்கள் என்பதால், இந்த உடலை மாற்றுகிறோம். ஸ்தூல உடல் மற்றும் நுட்பமான உடல்: இரண்டு வகையான உடல்கள் இருப்பதாக நமக்குத் தெரியாது. இந்த ஸ்தூல உடல் பூமி, நீர், நெருப்பு, காற்று, ஈதர் ஆகியவற்றால் ஆனது; நுட்பமான உடல் மனம், புத்திசாலித்தனம் மற்றும் அகங்காரம் ஆகியவற்றால் ஆனது. நுட்பமான உடலுக்குள், ஆன்மா இருக்கிறது. இப்போது, ​​இந்த ஸ்தூல உடல் பயனற்றதாகவோ அல்லது வேலை செய்ய முடியாததாகவோ மாறும்போது, நுட்பமான உடல் என்னை மற்றொரு ஸ்தூல உடலுக்கு கொண்டு செல்கிறது. இது ஆன்மாவின் பரிமாற்றம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நாம் நுட்பமான உடலைக் காண்பதில்லை. நாம் ஒவ்வொருவரும், நமக்கு மனம் உள்ளது என்பதை அறிவோம், ஆனால் மனதைப் பார்க்க முடியாது. நம்மால் அறிவைப் பார்க்க முடியாது, 'அகங்காரம்' என்னவென்று நம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால் அவை ஏற்கனவே உள்ளன. எனவே உங்கள் கண்களால் நீங்கள் அனைத்தும் பார்க்க வேண்டிய தேவையில்லை. கண்கள், அவை பூரணமானவை அல்ல இந்த மண்டபத்தின் மறுபக்கம் இருட்டாக இருப்பதைப் போல, எனக்கு கண்கள் இருந்தாலும் உங்களை என்னால் பார்க்க முடியாது. எனவே நமக்கு கண்கள் இருந்தாலும், அது மிகவும் பூரணமற்றது. அது எல்லா சூழ்நிலைகளிலும் பார்க்க முடியாது. சில சூழ்நிலைகளில், நாம் காணலாம். எனவே வெறுமனே பார்ப்பதன் மூலம் மட்டுமே நாம் நம்பக்கூடாது. ஆனால் ஒரு விஷயம், நான் உங்களை பார்க்க முடியவில்லை என்றாலும், நீங்கள் என்னைக் கேட்கலாம். அல்லது நீங்கள் கேட்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். காதுகள் கண்களை விட வலிமையானவை. எனவே நம் அனுபவத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள், நாம் கேட்கலாம். நம்மால் பார்க்க முடியவில்லை என்றாலும், விஷயங்கள் இல்லை என்று அர்த்தமல்ல. அதே எடுத்துக்காட்டு: மனம் என்றால் என்ன, புத்திசாலித்தனம் என்ன, அகங்காரம் என்ன, என்னால் பார்க்க முடியவில்லை என்றாலும், ஆனால் நான் அதைப் பற்றி கேட்க முடியும். எனவே சரியான அறிவு கேட்பதன் மூலம் பெறப்படுகிறது. ஆகவே, அறிவை, சரியான அறிவை, கேட்பதன் மூலம் ஏற்றுக்கொள்கிறோம். மற்றொரு எடுத்துக்காட்டு: ஒரு மனிதன் தூங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில், அவரைக் கொல்ல யாராவது வருகிறார்கள் என்றால், அவர் தூங்குகிறார், அவருக்குத் தெரியாது. ஆனால் அவரது நண்பர் சிலர் அவரை எச்சரித்தால், "என் அன்பான திரு., உன்னைக் கொல்ல யாரோ வருகிறார்கள். எழுந்திரு! "அவர் கேட்க முடியும், அவர் எழுந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, நமது மற்ற புலன்களால் செயல்பட முடியாதபோது, ​​நம் காது மிகவும் வலிமையானது. எனவே அதிகாரப்பூர்வ நபரிடமிருந்து கேட்க முயற்சிக்க பரிந்துரைக்கப்படுகிறது. கல்வி முறையும் அப்படித்தான். நீங்கள் ஏன் பல்கலைக்கழகம், பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருகிறீர்கள்? ஒரு அனுபவமிக்க பேராசிரியரிடமிருந்து கேட்க. அவருக்குத் தெரியும், நீங்கள் கேட்பதன் மூலம் அறிவைப் பெறுவீர்கள்.