TA/Prabhupada 0754 - நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் இடையே அறிவுறுத்தும்படியான போராட்டம்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0754 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0753 - Big Men, Let Them Have One Set of Books and Study|0753|Prabhupada 0755 - Sea-sufferer|0755}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0753 - பெரிய நபர்கள், நம் புத்தகங்களின் தொகுப்பு ஒன்றை வாங்கிப் படிக்கட்டும்|0753|TA/Prabhupada 0755 - கடலால் வருந்துபவர்|0755}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:24, 19 July 2021



Nrsimha-caturdasi Lord Nrsimhadeva's Appearance Day -- Bombay, May 5, 1974

இன்று பகவான் நர்சிம்ஹா-தேவாவின் தோற்ற நாள். இது நர்சிம்ஹ- சதுர்தசி என்று அழைக்கப்படுகிறது. எனவே இவ்வளவு குறுகிய காலத்திற்குள், இந்த இளைஞர்கள் எப்படி வாத்தியங்களை வாசிப்பது என்பதை நன்றாகக் கற்றுக் கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், குறிப்பாக நான் திரு ஹிரண்யகஷிபுவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ( கைத்தட்டல் ). திரு ஹிரண்யகஷிபு தனது பங்கை மிக நேர்த்தியாக ஆற்றியுள்ளார்.

எனவே இது மிகவும் நல்ல போதனை- நாத்திகருக்கும் ஆத்திகருக்கும் இடையிலான போராட்டம். பிரஹ்லாத மகாராஜாவின் கதை நித்திய உண்மை. நாத்திகருக்கும், ஆத்திகருக்கும் இடையே எப்போதும் ஒரு போராட்டம் இருக்கும். ஒரு நபர் கடவுள் உணர்வுள்ளவராக, கிருஷ்ண உணர்வுள்ளவராக மாறினால், அவர் பல எதிரிகளைக் சந்திக்க நேரிடும். ஏனென்றால், இது பேய்கள் நிறைந்த உலகம். கிருஷ்ண பக்தனைப் பற்றி என்ன பேசுவது, கிருஷ்ணர் கூட அதனை கண்டார் , அவர் அவதரித்த போது, ​​ பல ராக்ஷஸர்களை அவர் கொல்ல வேண்டியிருந்தது. அவருடைய தாய்மாமன், அவரது தாயின் சகோதரர், மிகவும் நெருக்கமான உறவு. ஆனாலும், அவர் கிருஷ்ணரைக் கொல்ல விரும்பினார். தேவகிக்கு மகன் பிறந்தவுடன், கிருஷ்ணர் யார் என்று அவருக்குத் தெரியாததால் உடனடியாகக் கொன்றார். அவரது சகோதரியின் எட்டாவது குழந்தை கம்சாவைக் கொன்றுவிடும் என்பது கணிப்பு. எனவே அவர் எல்லா குழந்தைகளையும் கொல்லத் தொடங்கினார். கடைசியில், கிருஷ்ணர் வந்தார். ஆனால் அவரால் கிருஷ்ணரைக் கொல்ல முடியவில்லை. கிருஷ்ணரால் கொல்லப்பட்டார்.

எனவே கடவுளை யாராலும் கொல்ல முடியாது. ராக்ஷஸர்கள், கடவுளற்ற சமூகம், அவர்கள் வெறுமனே கடவுளைக் கொல்ல விரும்புகிறார்கள். ஆனால் உண்மையில், கடவுள் ஒருபோதும் கொல்லப்படுவதில்லை, ஆனால் ராக்ஷஸர்கள் கடவுளால் கொல்லப் படுகிறார்கள். அதுவே இயற்கையின் விதி. இது பிரஹ்லாத மகாராஜாவின் வாழ்க்கையிலிருந்து வந்த அறிவுறுத்தல். பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளபடி, அதை நாம் புரிந்து கொள்ளலாம் ம்ரித்யு சர்வ ஹரஸ் சாஹம் (ப கீ 10 34). பகவத் கீதையில் "நீங்கள் வைத்திருக்கும் அனைத்தையும் எடுத்துச் செல்லும் வடிவத்தில் நானும் மரணம்" என்று கூறப்படுகிறது. பௌதீக விஷயங்களை, பௌதீக கையகப்படுத்துதல்களை வைத்திருப்பதில் நாம் மிகவும் பெருமைப்படுகிறோம், ஆனால் கிருஷ்ணர் வரும்போது ... பிரஹ்லாத மகாராஜா பார்த்தார். அவரது தந்தையான ஹிரண்யகஷிபுவும், நர்சிம்ம-தேவரைப் பார்த்தார். இந்த ஹிரண்யகஷிபு பௌதீகவாதிகள், விஞ்ஞானிகள் போல் மிகவும் புத்திசாலி. புத்திசாலித்தனமாக அவர்கள் பல விஷயங்களை கண்டுபிடித்து வருகின்றனர். யோசனை என்ன? யோசனை "நாம் என்றென்றும் வாழ்வோம், மேலும் மேலும் புலன் இன்பத்தை அனுபவிப்போம்." இது நாகரிகத்தின் நாத்திக முன்னேற்றம் என்று அழைக்கப்படுகிறது. எனவே ஹிரண்யகஷிபு வழக்கமான பௌதீகவாதியாக இருந்தார். ஹிரண்யா என்றால் தங்கம் என்றும், கஷிபு என்றால் மென்மையான படுக்கை, தலையணை என்றும் பொருள். எனவே பௌதீகவாதிகள் தங்கத்தை மிகவும் விரும்புகிறார்கள் மற்றும் உடலுறவை அனுபவிக்கிறார்கள். அது அவர்களின் தொழில். எனவே இந்த பௌதீகவாதிகளின் பொதுவான உதாரணம் ஹிரண்யகஷிபு மற்றும் பிரஹ்லாத மகாராஜா, பிரகரஸ்த- ரூபேண ஆஹ்லாத. ஆஹ்லாத அதாவது ஆழ்நிலை பேரின்பம் என்று பொருள். ஆனந்த- சின்மய-ரஸா-ப்ரதிபாவித்தாபிஹி ( ப்ர ஸம் 5.37 ). உயிர்வாழிகளின் உண்மையான அடையாளம் பிரஹ்லாதா, பேரின்பம். ஆனால் பௌதீக தொடர்பு காரணமாக, நாம் வாழ்க்கையின் பரிதாப நிலையில் இருக்கிறோம்.