TA/Prabhupada 0786 - எமராஜனின் தண்டனை காத்துக்கொண்டுள்ளது

Revision as of 14:53, 18 July 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0786 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 6.1.48 -- Dallas, July 30, 1975

பிரபுபாதா: பிரம்மச்சாரி குருகுலத்தில் இருக்க வேண்டும், இருபத்தைந்தாவது வயது வரை. அவர் பயிற்சி பெறுவார். அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது குரு உணர்ந்தால், பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி திருமணம் செய்து கொள்வார். இல்லையெனில், போதனை என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்பதாகும். நுழைய வேண்டிய அவசியமில்லை ... ஏனெனில் இந்த மனித வாழ்க்கை கடவுள் உணர்தலுக்கானது. இது பாலியல் இன்பத்திற்காகவோ அல்லது உணர்வு திருப்திக்காகவோ அல்ல. இது வெறுமனே ... இங்கே ஒரு வாய்ப்பு இருக்கிறது ஒருவரின் நிலையை புரிந்து கொள்ளுங்கள், அவர் ஆன்மீக ஆன்மா என்று, கிருஷ்ணா, அதாவது முழுமுதற் கடவுள், அவரும் ஒரு ஆன்மீக ஆன்மா. ஆகவே ஆன்மீக ஆத்மா, தனிப்பட்ட ஆத்மா, கிருஷ்ணரின் அங்க உறுப்பாகும். எனவே பூரணத்துவதோடு ஒன்றிணைவது அவருடைய கடமை. ஒரு இயந்திரத்தின் பகுதியை போல, தட்டச்சு இயந்திரத்தில் ஒரு திருகு போல. திருகு இயந்திரத்துடன் இருந்தால், அதற்கு மதிப்பு உள்ளது. இயந்திரம் இல்லாமல் திருகு மட்டும் இருந்தால், அதற்கு எந்த மதிப்பும் இல்லை. சிறிய திருகுக்கு யார் அக்கறை காட்டுகிறார்கள்? ஆனால் அந்த திருகு ஒரு இயந்திரத்தில் தேவைபடும் போது, ​​நீங்கள் அதை வாங்கச் செல்வீர்கள் - அவர்கள் ஐந்து டாலர்களை வசூலிப்பார்கள். ஏன்? இது இயந்திரத்துடன் இணைந்து இருக்கும் போது, ​​அதற்கு மதிப்பு கிடைத்துள்ளது. பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. நெருப்பின் தீப்பொறிகள் போல. நெருப்பு எரியும் போது, ​​நீங்கள் தீப்பொறி பார்த்து இருப்பீர்கள், "புட்! புட்!" இதனுடன். அது மிகவும் அழகாக இருக்கும். அது மிகவும் அழகாக இருக்கிறது, ஏனெனில் அது நெருப்புடன் உள்ளது. தீப்பொறி தீயில் இருந்து கீழே விழுந்தவுடன், அதற்கு எந்த மதிப்பும் இல்லை. அதை யாரும் கவனிப்பதில்லை. அது முடிந்தது. இதேபோல், எவ்வளவு காலமாக நாம் கிருஷ்ணருடன் இருக்கிறோமோ, கிருஷ்ணரின் ஒரு அங்க உறுப்பாக இருப்பதால், நமக்கு மதிப்பு உள்ளது. நாம் கிருஷ்ணரின் தொடுதலுக்கு வெளியே வந்தவுடன், நமக்கு எந்த மதிப்பும் இல்லை. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே கிருஷ்ணருடன் எப்போதும் நம்மை எப்படி வைத்திருப்பது, அதுதான் மனித வாழ்க்கையின் நோக்கம். நாம் அதைச் செய்யாவிட்டால், அது பாவமாகும். பின்னர் நாம் தண்டிக்கப்படுகிறோம், "உங்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ணருடனான உங்கள் உறவு. இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தவில்லை". ஓ, அவர் தண்டிக்கப்படுகிறார்: "சரி, நீங்கள் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் மீண்டும் விலங்காகுங்கள்." எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், "நாம் சுதந்திரமாக இருக்கிறோம், நாம் விரும்பும் எந்த முட்டாள்தனத்தையும் செய்ய முடியும்." என்று நினைக்காதீர்கள். அது மிகவும் ஆபத்தான வாழ்க்கை. அப்படி முட்டாள்தனமாக நினைக்க வேண்டாம். ஒரு வழக்கம் உள்ளது ... யமராஜா உள்ளார். ஏனென்றால் நாம் கிருஷ்ணரின் மகன்கள் ... கிருஷ்ணர் விரும்பும் போது, "என்னுடைய இந்த மகன்கள், மோசடிகள், இந்த பௌதிக உலகில் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வரட்டும், " என்று எண்ணுகிறார். எனவே கிருஷ்ணர் தனிப்பட்ட முறையில் வருகிறார். யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத, ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் (ப.கீ 4.7). கிருஷ்ணர் விரும்புகிறார், "இந்த மோசடிகள், இந்த பௌதிக உலகில் அழுகி வருகின்றன, ஜென்ம ஜென்மமாக. அவர்கள் மீண்டு வரட்டும்." ஏனென்றால் அவர் அதிக பாசமுள்ளவர். எனவே ... இந்த மனித வடிவத்தை அவர் பயன்படுத்தாவிட்டால், வீட்டிற்கு மீண்டு திரும்பிச் சென்று, கடவுளை சென்றடைவதற்கு பயன்படுத்தாவிட்டால், அது பாவம். பின்னர் அவர் தண்டிக்கப்படுகிறார்.

எனவே எல்லோரும் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் சேர வேண்டும் என்பதே முடிவு; இல்லையெனில், அவர் யமராஜாவின் தண்டனைக்கு காத்திருக்கிறார்.

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய ஸ்ரீல பிரபுபாதா.