TA/Prabhupada 0806 - கிருஷ்ணர் மற்றும் அவரது பிரதிநிதிகளைப் பின்பற்றுங்கள் - நீங்கள் மகாஜனம் ஆவீர்கள்

Revision as of 03:13, 19 July 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0806 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.7.23 -- Vrndavana, September 20, 1976

நீங்கள் எவ்வாறு கிருஷ்ணரின் பிரதிநிதியாவது? அது சைதன்ய மஹாபிரபுவால் விவரிக்கப்பட்டுள்ளது.

யாரே தேக தாரே கஹ 'கிரிஷ்ண'... - உபதேஷ
ஆமார ஆஜ்ஞாய குரு ஹஞா தார' ஏஇ தேஷ,
(Vanisource:CC Madhya 7.128|சைதன்ய சரிதாம்ருதம் மத்திய 7.128]])

நீங்கள் வெறுமனே கிருஷ்ணர் கூறியதை பிரசங்கம் செய்தால், நீங்கள் அவருடைய பிரதிநிதி ஆகிவிடுவீர்கள். உற்பத்தி செய்யாதீர்கள். புத்திசாலியாகச் செயல்படுகிறேன் என்று உற்பத்தி செய்யாதீர்கள். வெறுமனே கிருஷ்ணரையும் அவருடைய பிரதிநிதியையும் பின்பற்றுங்கள், பிறகு நீங்கள் மஹாஜன ஆவிர்கள். இல்லையெனில் நீங்கள் முட்டாள். மூட⁴. ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: (பகவத் கீதை 7.15). அதுதான் தேர்வு. சைதன்ய மஹாபிரபுவின் அறிவுரைகளைப் பின்பற்றும் ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சைதன்ய மஹாபிரபு ஒருபோதும், "நான் கிருஷ்ணருடைய சேவகன்" என்று சொல்லவில்லை. இல்லை. கோ³பீ-ப⁴ர்து꞉ பத³-கமலயோர் தா³ஸ-தா³ஸ-தா³ஸ-த³ஸானுதா³ஸ꞉ "சேவகனுக்கு சேவகனுக்கு சேவகனாக..." நீங்கள் எவ்வளவு அதிகமாகச் சேவகனுக்கு சேவகனாக அகிறீர்களோ, நீங்கள் பக்குவம் அடைவீர்கள் (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய 13.80). நீங்கள் உங்களைச் சுதந்திரமானவனாகக் கூறினாள், உடனேயே அயோக்கியன் ஆகிவிடுகிறீர்கள். இதுதான் செயல்முறை. நாம் எப்போதும் குருவிற்கு மிகவும் கீழ்படிந்த சேவகனாக இருக்க வேண்டும்.

யஸ்ய தேவே பரா பக்திர்
யதா தேவே ததா குரௌ
தஸ்யைதே கதி²தா ஹ்ய் அர்தா²꞉
ப்ரகாஶந்தே மஹாத்மன꞉
(ஷ்வேதாஷ்வதர உபநிஷத் 6.23)

பிறகு அது வெளிப்படுத்தும். முழுமையாக அனைத்தும் வெளிப்படுத்தப்படும். இது அனுபவத்தினாலோ, கல்வி திறனாலோ வெளிப்படுத்தப் படுவதில்லை. இல்லை. யே யதா மாம் ப்ரபத்யந்தே. ஒருவர் சரணடைந்ததிற்கு எற்றாற் போல், பகவான் பலனளிக்கிறார். யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்-யஹம் (பகவத் கீதை 4.11).

ஆகையால் பகவான் யார் என்பதை புரிந்துக் கொள்ள எந்தச் சிரமமும் இல்லை. கிருஷ்ணர் இங்கே இருக்கிறார், முழுமுதற் கடவுள்-நேரடியாக. மக்கள் ஏன் பகவானை தேடிச் செல்கின்றனர் என்று எனக்குத் தெரியவில்லை, பகவான் யார் என்று ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை. பாருங்கள். அப்படி என்றால் மூடா என்று அர்த்தம். பகவான் இங்கே இருந்தாலும், அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார். அதுதான் மூடா, நராதம. மேலும் அவர் ஏன் மூடா? ஏனென்றால் நராதம. அவர் வழிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஏதாவது உற்பத்தி செய்ய விரும்புகிறார். அவ்வாறு செய்யாதிர்கள். இங்கு அர்ஜுனன் ஒரு மஹாஜன, அவர் கிருஷ்ணரின் நண்பன், அவர் எப்பொழுதும் கிருஷ்ணருடன் இருப்பார், மேலும் கிருஷ்ணர் அவரை அங்கீகரிக்கிறார். ஒருவர் கிருஷ்ணருடன் எப்போதும் இருப்பதால், அவருக்குக் கிருஷ்ணரை பற்றித் தெரியும் என்று அர்த்தம் அல்ல. இல்லை. அது சாத்தியம் அல்ல. எவ்வாறென்றால், இந்த உதாரணத்தை நான் பலமுறை கொடுத்திருக்கிறேன், அதாவது நான் இங்கு அமர்ந்திருக்கிறேன், மேலும் அந்தப் பூச்சியும் இங்கு உட்கார்ந்திருக்கிறது. அதற்காக நாங்கள் மிகவும் அந்தரங்கமாக இருக்கிறோம் என்று பொருள்படாது. இல்லை. பூச்சியின் நோக்கம் வேறு, மேலும் என்னுடைய தொழில் வேறு. மேலும் பூச்சியின் வேலை கடிப்பது. அம்மாதிரியான சகவாசம் உதவாது. சகவாசம் என்றால் அந்த நபருடன் அன்பை வளர்த்துக் கொள்வது. அதுதான் சகவாசம்.

த³தா³தி ப்ரதிக்³ருʼஹ்ணாதி
கு³ஹ்யம் ஆக்²யாதி ப்ருʼச்ச²தி
பு⁴ங்க்தே போ⁴ஜயதே சைவ
ஷட்³-வித⁴ம்ʼ ப்ரீதி-லக்ஷணம்
(உபதே³ஶாம்ருʼத 4)