TA/Prabhupada 0812 - நாம் பரிசுத்த நாமத்தை ஜெபிக்க தயங்குகிறோம்

Revision as of 15:52, 3 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0812 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


741010 - Lecture SB 01.08.30 - Mayapur

கிருஷ்ணரின் ஸ்தானத்தை நாம் புரிந்து கொள்ள முயற்சித்தால், நாம் விடுவிக்கப்படுகிறோம். நாம் புரிந்து கொள்ள முயற்சித்தால், கிருஷ்ணர் உதவுவார். கிருஷ்ணர் சொல்கிறார், ஷ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண: புண்ய-ஷ்ரவண-கீர்தன: (ஸ்ரீமத் பாகவதம் 1.2.17) கிருஷ்ணரைப் பற்றி நாம் அதிகம் கேட்கும்போது, ​​நாம் தூய்மையடைகிறோம். நாம் தூய்மையடையாததால் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் கிருஷ்ண நாமத்தைக் கேட்டால் - ஹரே கிருஷ்ண... ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண ஹரே ஹரே- நீங்கள் உச்சாடனமிட்டு கேட்டால், நீங்கள் தூய்மையடைவீர்கள். நாம் ஏன் இதைச் செய்யக் கூடாது, இந்த எளிய முறையை எடுத்துக் கொள்ளுங்கள், மேலும் இது சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படுகிறது. ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம் (CC Adi 1.2.17), வெறுமனே ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண என்று இருபத்தி நான்கு மணிநேரமும் உச்சாடனம் செய்யுங்கள். கீர்தனீய: ஸதா ஹரி: (CC Antya 20.21, Śrī Śikṣāṣṭakam 3). நீங்கள் பக்குவம் அடைவீர்கள். இந்த வாய்ப்பை நாம் ஏன் இழக்கிறோம்? அதுவே நம் துரதிர்ஷ்டம். ஏதாத்ருஷீ தவ க்ருபா பகவன் மமாபி: என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விளக்குகிறார். "என் பிரபுவே, உங்கள் கருணையை மிகவும் தாராளமாகக் காட்டியுள்ளீர்கள், அந்தப் நாமம், உங்கள் நாமத்தை உச்சரிப்பதே போதுமானது." நாம்னாம் அகாரி பஹுதா நிஜ-ஸர்வ-ஷக்தி: இந்த நாம உச்சாடனம், அபின்நத்வான் நாம-நாமினோ: (CC Antya 20.16), அவருடைய எல்லா ஆற்றலும் நாமத்தில் இருக்கிறது. நாம்னாம் அகாரி பஹுதா நிஜ-ஸர்வ-ஷக்திஸ் தத்ரார்பிதா. எல்லா ஆற்றல்களும் உள்ளன. நாம்னாம் அகாரி… மேலும் பல நாமங்கள் உள்ளன, ஒரு நாமம் மட்டுமல்ல. கிருஷ்ண நாமத்தை நீங்கள் உச்சரிக்க விரும்பவில்லை என்றால், வேறு பெயர்களும் உள்ளன, எந்தப் பெயரும். ஹரேர் நாமத்தின் பெயராக இருக்க வேண்டும், நாம, ஹரியின் நாமம், மற்றவர்கள் அல்ல, ஹரேர் நாம. அப்போது, நீங்கள் அனைத்து ஆற்றல்களையும் பெறுவீர்கள். நாம்னாம் அகாரி பஹுதா நிஜ-ஸர்வ-ஷக்திஸ் தத்ரார்பிதா. நியமித: ஸ்மரணே ந கால: எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. நீங்கள் காலையிலோ அல்லது மாலையிலோ அல்லது நீங்கள் சுத்திகரிக்கப்படும்போதோ அல்லது சுத்திகரிக்கப்படாமலோ நாம உச்சாடனம் செய்யலாம். எந்தச் சூழ்நிலையிலும், நீங்கள் நாம உச்சாடனம் செய்யலாம். நியமித꞉ ஸ்மரணே ந கால꞉ எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை.

குறிப்பாகக் கலௌ - கலியுகத்தில், கிருஷ்ணர் மக்களுக்கு மிகவும் மலிவாகக் கிடைக்கிறார். ஆனாலும், புனித பெயரை உச்சரிக்க நாம் தயங்குகிறோம். எனவே சைதன்ய மஹாபிரபு வருந்துகிறார், ஏதாத்ருஷீ தவ க்ருபா பகவன் மமாபி: "இந்த வீழ்ந்த ஆத்மாவின் மீது நீங்கள் மிகவும் தாராளமாகவும் கருணையாகவும் இருந்தாலும், இன்னும், துரதிர்ஷ்டவசமாக, நான் இந்தப் புனித நாமத்தை உச்சரிக்க விரும்பவில்லை." இதுதான் நமது நிலை, பிடிவாதம், நாயின் பிடிவாதம். ஆனால் நாம் அதைச் செய்தால், நாம் தூய்மை அடைகிறோம். நஷ்ட-ப்ராயேஷ்வபத்ரேஷு நித்யம் பாகவத-ஸேவயா : (ஸ்ரீமத் பாகவதம் 1.2.18) எனவே சைதன்யா மஹாபிரபுவின் பரிந்துரையானது ஸ்ரீமத்-பாகவதத்தைப் படிக்க வேண்டும், நீங்கள் தூய்மையான நிலையிலோ அல்லது தூய்மை இல்லாத நிலையிலோ படிக்கலாம், உச்சாடனம் செய்யலாம். இது நம் வைஷ்ணவ ஒழுங்குமுறை, கடமை. முடிந்தவரை, நாம் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத்-பாகவதம் ஆகியவற்றைப் படிக்க வேண்டும். இத்தகைய இலக்கியங்கள் - சைதன்ய -சரிதாம்ருத, ப்ரஹ்ம-ஸம்ஹிதா. அவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது அனைத்துமே, அது ஒரு பொருட்டல்ல. மேலும் இருபத்தி நான்கு மணிநேரமும் ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்யுங்கள். இதுதான் நம் வேலை.

எனவே அனைவருக்கும் இந்த வாய்ப்பை வழங்குகிறோம். நாம் இந்தப் பெரிய கட்டிடத்தைக் கட்டியுள்ளோம், அல்லது மேலும் மேலும் கட்டிக்கொண்டிருக்கிறோம் - ஏன்? அனைவருக்கும் இந்த வாய்ப்பை வழங்க. தயவு செய்து இங்கே வாருங்கள். பாடுங்கள், ஹரே கிருஷ்ண கீர்த்தனையில் சேருங்கள், பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்யுங்கள், உங்களுக்குக் கிடைத்த திறமை எதுவாக இருந்தாலும், எளிதில், அதிக சுமை இல்லாமல். உங்களுக்கு ஏதாவது செய்யத் தெரிந்தால், கிருஷ்ணருக்காக அதைச் செய்யுங்கள் அனைவருக்கும் தெரியும். அனைவருக்கும் சில திறமைகள் கிடைத்துள்ளன. எனவே அந்தத் திறமையைக் கிருஷ்ணருக்காகப் பயன்படுத்த வேண்டும். "இல்லை, நான் வெறுமனே உச்சாடனம் செய்வேன்" என்று நீங்கள் நினைத்தால், சரி, நீங்கள் செய்யுங்கள். ஆனால் நாம உச்சாடனம் செய்கிறேன் என்ற பெயரில் தூங்க வேண்டாம். அது... ஏமாற்ற வேண்டாம். அந்த மோசடி நல்லதல்ல. ஹரிதாச தாகூரை போல நீங்கள் நாம சங்கீர்த்தனம் செய்யலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் வெறுமனே சங்கீர்த்தனம் செய்யலாம். நாங்கள் உங்களுக்கு உணவு வழங்குவோம். கவலை இல்லை. ஆனால் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். நீங்கள் ஈடுபாடு கொள்ள வேண்டும்.' யத் கரோஷி யஜ் ஜுஹோஷி யத் அஷ்நாஸி, குருஷ்வ தத் மத்-அர்பணம் (பகவத் கீதை 9.27) நிச்சயமாக, நாம் இருபத்தி நான்கு மணி நேரம் நாம சங்கீர்த்தனம் செய்ய முடிந்தால், அது மிகவும் நல்லது. ஆனால் அது சாத்தியமில்லை. நாம் அவ்வளவு உயர்ந்தவர்கள் அல்ல. கிருஷ்ணருக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

எனவே இது... இந்த நிறுவனம், கிருஷ்ணா பக்தி இயக்கம், அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது. இந்த நோக்கத்திற்காக நாம் உலகம் முழுவதும் மையங்களைத் திறக்கிறோம், நீங்கள் வாருங்கள், ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரியுங்கள், கிருஷ்ணர், பாகவதம், பகவத்-கீதைையை பற்றிக் கேளுங்கள். நீங்கள் என்ன செய்ய முடியுமோ அதைக் கிருஷ்ணருக்காகச் செய்யுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை வெற்றி பெறுகிறது.

மிக்க நன்றி.