TA/Prabhupada 0876 - நீங்கள் ஆனந்தத்தின் ஆன்மீக கடலுக்கு வரும்போது, ​​அது தினசரி அதிகரிக்கும்

Revision as of 11:33, 5 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0876 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750519 - Lecture SB - Melbourne

பிரபுபாதர்: கைரவா-சந்திரிகாவைப் போலவே, சந்திரனைப் போலவே, முதல் நாளில் அது ஒரு கோடு போலவே இருக்கிறது, பின்னர் படிப்படியாக அதிகரிக்கிறது- உடலும் நிலவொளியும் அதிகரிக்கிறது. எனவே இந்த ஒப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வளவு அதிகமாக கிருஷ்ண உணர்வு பெறுகிறீர்களோ, அவ்வளவு உங்கள் வாழ்க்கையின் பிரகாசம் அதிகரிக்கும். ஷ்ரேயாஹ்- கைரவ- சந்திரிகா- விதரணம் வித்யா- வதூ- ஜீவனம். பின்னர் இந்த வாழ்க்கை அறிவு நிறைந்ததாக இருக்கும். வித்யா-வதூ-ஜீவனம். ஆனந்தாம்புதி- வர்தனம். மேலும் அறிவின் ஆயுளை அதிகரிப்பது ஆனந்தம் என்று பொருள். ஆனந்தா என்றால் இன்பம். நமக்கு இன்பம் வேண்டும். எனவே நீங்கள் மேலும் மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவீர்கள். ஆனந்தாம்புதி- வர்தனம். மேலும், பிரதி- பதம் பூர்நாம்ருதாஸ்வாதனம்: மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் நாம் இருக்கிறோம் ... பௌதிக வாழ்க்கை முறையில் நாம் விரும்பத்தகாத, சிரமங்களை, நேர்மாறாக மட்டுமே அனுபவிக்கிறோம். ஆனந்தாம்புதி - வர்த... அம்புதி என்றால் கடல் என்று பொருள். எனவே இந்த கடல் அதிகரிக்காது, ஆனால் நீங்கள் ஆனந்தத்தின் ஆன்மீக கடலுக்கு வரும்போது, ​​அது தினமும் அதிகரிக்கும். இந்த இளைஞர்களைப் போல. அவர்கள் ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து வருகிறார்கள். அவர்கள் இந்தியர்கள் அல்ல. ஆனால் அவர்கள் ஏன் இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களின் நித்தியமான பேரின்பம் அதிகரிக்காமல் போனால் ? அவர்கள் முட்டாள்களோ மோசடிக்காரர்களோ இல்லை. அவர்கள் படித்தவர்கள். அவர்கள் இதை ஏன் பின்பற்றுகிறார்கள்? ஆனந்தாம்புதி- வர்தனம். இது அவர்களின் நித்தியமான பேரின்பத்தை அதிகரித்து வருகிறது.

எனவே இந்த செயல்முறைக்கு யார் வருகிறார்களோ, அவர் தனது 'ஆனந்தாம்புதி-வர்தனத்தை' அதிகரிப்பார். பிரதி- பதம் பூர்நாம்ருதாஸ்வாதனம்: மேலும் அவர் ருசிக்க முடியும், வாழ்க்கையின் பொருள் என்ன, இன்பத்தின் பொருள் என்ன என்று. பரம் விஜயதே ஸ்ரீ கிருஷ்ண-சங்கீர்த்தனம் : "ஹரே கிருஷ்ண மந்திரத்திற்கு அனைத்து மகிமைகளும்."

எனவே இது செயல்முறை. எங்கள் கிருஷ்ண பக்தி இயக்கம் இந்த அறிவை முடிந்தவரை பரப்புகிறது, கிருஷ்ணரின் அருளால் மெல்போர்னில் இந்த கோயில் கிடைத்துள்ளது, இது நமது சீடர் ஸ்ரீமன் மதுத்விஷா சுவாமிக்கு மிகவும் பெருமை சேர்த்தது. நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது எனது ஒரே வேண்டுகோள். நீங்கள் எதையும் செய்யாவிட்டால், வெறுமனே வந்து ஜபம் செய்யுங்கள், நீங்கள் படிப்படியாக மிக விரைவில் அறிந்து கொள்வீர்கள். அதஹ் ஸ்ரீ கிருஷ்ண- நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்திரியாஹ் (சை சரி மத்திய 17.136). கிருஷ்ணா, அவரது பெயர், அவரது வடிவம், அவரது செயல்பாடுகள், அவரது குணங்கள், இந்த அப்பட்டமான பௌதிக புலன்களால் நாம் புரிந்து கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை. அதஹ் ஸ்ரீ கிருஷ்ண- நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்திரியாஹ். "அப்படியானால், இந்திரியத்தை மட்டுமே நாங்கள் பெற்றுள்ளோம், நாங்கள் எப்படி புரிந்துகொள்வோம்?" சேவோணமுக்ஹெ ஹி ஜிஹ்வாதவ். இறைவனின் சேவையில் உங்கள் புலன்களை நீங்கள் ஈடுபடுத்தினால், ஸ்வயம் ஏவ ஸுப்ஹுரதி அதஹ், பகவான் கிருஷ்ணர் "இதோ நான் இருக்கிறேன்" என்பதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். இது செயல்முறை. இப்போது இந்த வார்த்தை மிகவும் முக்கியமானது, சேவோணமுக்ஹெ ஹி ஜிஹ்வாதவ். ஜிஹ்வா என்றால் நாக்கு என்று பொருள். பகவானுடைய சேவையில் உங்கள் நாக்கை வெறுமனே ஈடுபடுத்தினால், நீங்கள் படிப்படியாக வளர்வீர்கள். எனவே நாக்கை எவ்வாறு ஈடுபடுத்துவது? "நீங்கள் பார்த்தால், அல்லது தொட்டால், நீங்கள் நுகர்ந்தால்" என்று கூறப்படவில்லை. எனவே நாவின் தொழில் என்ன? நாவின் தொழில் - நல்ல உணவுப் பொருட்களை நாம் சுவைக்க முடியும், மேலும் அதிர்வுறும். இந்த இரண்டு வேலைகளையும் செய்யுங்கள். உங்கள் நாக்கால் அதிர்வுற ஹரே கிருஷ்ணா கோஷமிடுங்கள், முடிந்தவரை பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் ஒரு பக்தராகி விடுங்கள்.

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய ஸ்ரீல பிரபுபாதா.