TA/Prabhupada 0893 - அது அனைவரின் உள் நோக்கம். யாரும் வேலை செய்ய விரும்பவில்லை: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0892 - If You fall from the Instruction, How You Can Remain Eternal Servitor?|0892|Prabhupada 0894 - Duty Must be Done. Even it is Little Suffering. That is Called Tapasya|0894}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0892 - நீங்கள் அறிவுறுத்தலில் இருந்து விழுந்தால், நீங்கள் எவ்வாறு நித்திய சேவையாளராக இருக்க|0892|TA/Prabhupada 0894 - கடமை செய்யப்பட வேண்டும். அது சிறு துன்பம் தந்தாலும் கூட. அதுவே தபஸ்யா என்று அழைக்கப்பட|0894}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:32, 7 August 2021



730417 - Lecture SB 01.08.25 - Los Angeles

பக்தர்: மொழிபெயர்ப்பு: "அந்த பேரழிவுகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் நிகழும் என்று நான் விரும்புகிறேன், இதனால் நாங்கள் உங்களை மீண்டும் மீண்டும் பார்க்க முடியும், உங்களைப் பார்த்ததால், நாங்கள் இனி மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புகளைக் காண மாட்டோம்."

பிரபுபாதா: எனவே இது மிகவும் சுவாரஸ்யமான வசனம், விபதா, பேரழிவுகள், ஆபத்து, இது போன்ற ஆபத்து மற்றும் பேரழிவுகள் எனக்கு கிருஷ்ணரை நினைவூட்டினால் மிகவும் நல்லது. அது மிக நன்றாக உள்ளது. தத் தி நுகாம்பம் சு-சமிக்ஷமனோ புஞ்சானா எவாத்மா-கிருதம் விபாகம் (ஸ்ரீ பா 10.14.8). ஒரு பக்தர், அவர் எப்படி ஆபத்தான நிலையைப் பெறுகிறார்? ஆபத்து இருக்க வேண்டும். ஆபத்து ... ஏனென்றால் இந்த இடம், இந்த பொருள் உலகம் ஆபத்துகளால் நிறைந்துள்ளது. இந்த முட்டாள்கள், அவர்களுக்கு அது தெரியாது. அவர்கள் ஆபத்துக்களைத் தவிர்க்க முயற்சிக்கின்றனர். அது இருப்புக்கான போராட்டம். எல்லோரும் மகிழ்ச்சியாகி ஆபத்தைத் தவிர்க்க முயற்சிக்கின்றனர். இது பொருள் வணிகம். ஆத்யந்திகா-சுகம். ஆத்யந்திகா-சுகம். உச்சகட்ட மகிழ்ச்சி. ஒரு மனிதன் வேலை செய்கிறான், சிந்திக்கிறான்: "நான் இப்போது மிகவும் கடினமாக உழைக்கிறேன், எனக்கு கொஞ்சம் வங்கி இருப்பு இருக்கட்டும், அதனால் நான் வயதாகும்போது, ​​எந்த வேலையும் இல்லாமல் வாழ்க்கையை அனுபவிப்பேன்." அது அனைவரின் உள் நோக்கம். யாரும் வேலை செய்ய விரும்பவில்லை. கொஞ்சம் பணம் கிடைத்தவுடன் அவர் வேலையிலிருந்து ஓய்வு பெறவும், மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்புகிறார். ஆனால் அது சாத்தியமில்லை. நீங்கள் அந்த வழியில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

இங்கே இது கூறப்படுகிறது: அபுநார் பாவ-தர்ஷனம் (ஸ்ரீ பா 1.8.25). உண்மையான ஆபத்து என்னவென்றால் ... அவள் அபுனாவைப் பற்றி பேசுகிறாள். அபுனா என்றால் ... அ என்றால் இல்லை என்று பொருள் மற்றும் புனர் பாவா என்றால் பிறப்பு மற்றும் இறப்பை மீண்டும் தொடர்வது. உண்மையான ஆபத்து பிறப்பு மற்றும் இறப்பை மீண்டும் மீண்டும் செய்வதாகும். அதை நிறுத்த வேண்டும். இந்த ஆபத்து என்று அழைக்கப்படுவதில்லை. இதெல்லாம் ... பொருள் உலகம் ஆபத்துகளால் நிறைந்துள்ளது. பதம் பதம் யத் விபதாம் (ஸ்ரீ பா 10.14.58). நீங்கள் கடலில் இருந்தால் போல. நீங்கள் கடலில் இருந்தால், உங்களிடம் மிகவும் வலுவான கப்பல், மிகவும் பாதுகாப்பான கப்பல் இருக்கலாம், ஆனால் அது பாதுகாப்பு அல்ல. நீங்கள் கடலில் இருப்பதால், எந்த நேரத்திலும் ஆபத்துகள் ஏற்படலாம். உங்கள் நாட்டிலிருந்து நீங்கள் நினைவில் வைத்திருக்கலாம், அது என்ன, டைட்டானிக்?

பக்தர்: டைட்டானிக்.

பிரபுபாதா: எல்லாம் பாதுகாப்பாக இருந்தது, ஆனால் முதல் பயணத்தில் அது நீரில் மூழ்கியது, உங்கள் நாட்டின் அனைத்து முக்கிய மனிதர்களும் தங்கள் உயிரை இழந்தனர். நீங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் ஆபத்து இருக்க வேண்டும். இந்த பொருள் உலகமே ஆபத்தான நிலை. எனவே எங்கள் நோக்கம் ... அந்த ஆபத்து இருக்க வேண்டும். இப்போது எங்கள் நோக்கம் எப்படி சீக்கிரம் கடலைக் கடப்பது என்பதில் இருக்க வேண்டும். எவ்வளவு காலம் நீங்கள் கடலில் இருக்கிறீர்களோ, நீங்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறீர்கள், உங்கள் கப்பல் எவ்வளவு வலிமையாக இருந்தாலும். அது ஒரு உண்மை. எனவே நீங்கள் கடல் அலைகளால் கலங்கக்கூடாது. கடலைக் கடக்க முயற்சி செய்யுங்கள். மறுபுறம் செல்லுங்கள். அது உங்கள் நோக்கமாகட்டும். இதேபோல், நாம் பொருள் உலகில் இவ்வளவு காலம் இருப்பதால், ஆபத்தான பேரழிவுகள் இருக்க வேண்டும், ஏனெனில் இது பேரழிவின் இடம். எனவே நமது நோக்கம், இந்த பேரழிவுகளுக்குள்ளும், ஆபத்துகளிலும் கூட, நம்முடைய கிருஷ்ண உணர்வை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்கிறோம், இந்த உடலைக் நீத்த பிறகு, நாம் திருவீட்டிற்கு திரும்பி, கிருஷ்ணரிடம் செல்கிறோம். அது நம் நோக்கமாக இருக்க வேண்டும். பேரழிவுகள் என்று அழைக்கப்படுவதால் நாம் அமைதியை இழக்க கூடாது. அவை உண்மையான பேரழிவுகள்.