TA/Prabhupada 0896 - நாம் புத்தகத்தை விற்கும்போது, ​​அதுதான் கிருஷ்ண உணர்வு

Revision as of 05:39, 6 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0896 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730417 - Lecture SB 01.08.25 - Los Angeles

தயக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைத்தி மாம் ஏதி கௌந்தேய (ப கீ 4.9). நீங்கள் கிருஷ்ண உணர்வில் முன்னேறினால், அதன் விளைவாக, இந்த உடலை துறந்த பிறகு ... கிருஷ்ணர் கூறுகிறார், தயக்த்வா தேஹம், இந்த உடலை துறந்து, புனார் ஜன்ம நைதி, நீங்கள் இந்த பொருள் உலகில் மீண்டும் பிறக்க வேண்டாம். அது வேண்டும். தற்போதைய தருணத்தில் நான் மிகவும் வசதியாக இருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். என் உடல் மிகவும் வசதியான நிலையில் வைக்கப்பட்டுள்ளது, ஆனால் மரணம் இருக்கிறது, மற்றொரு பிறப்பும் இருக்கிறது. எனவே இந்த உடலைக் கைவிட்ட பிறகு, நான் ஒரு பூனை மற்றும் நாயின் உடலைப் பெற்றால், இந்த வசதியான நிலையின் பொருள் என்ன? ஏனெனில் மரணம் நிச்சயம், மற்றும் ஜன்மந்தம் ததா தேஹாந்தரம். தேஹாந்தரம் என்றால் நீங்கள் வேறொரு உடலை ஏற்க வேண்டும். நீங்கள் எந்த வகையான உடலைப் பெறப் போகிறீர்கள் என்று தெரியாவிட்டால் ... அதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது, உங்களுக்கு இதுபோன்ற மனநிலை கிடைத்திருந்தால், அத்தகைய மற்றும் அதற்கு பொருந்திய உடலைப் பெறுவீர்கள். எனவே ஒரு வசதியான நிலையில், நான் என்னை நாயின் மனநிலையில் வைத்திருந்தால், நான் எனது அடுத்த வாழ்க்கையை நாயாகப் பெறப் போகிறேன். இந்த வசதியான நிலையின் மதிப்பு என்ன? நான் இருபது ஆண்டுகள், ஐம்பது ஆண்டுகள் அல்லது அதிகபட்சமாக நூறு ஆண்டுகள் வசதியான நிலையில் இருக்கலாம். அந்த வசதியான நிலைக்குப் பிறகு, நான் இந்த உடலை விட்டுக்கொடுக்கும் போது, என் மனநிலை காரணமாக, நான் ஒரு பூனை, நாய் அல்லது ஒரு எலி ஆகிவிட்டால், இந்த வசதியான நிலையின் நன்மை என்ன?

இந்த மக்களுக்கு அது தெரியாது. அவர்கள் நினைக்கிறார்கள், குறிப்பாக இந்த காலத்தில் : "நான் இப்போது வசதியான நிலையில் இருக்கிறேன், எனக்கு போதுமான பணம் கிடைத்துள்ளது, எனக்கு போதுமான நிலம் கிடைத்துள்ளது. எனக்கு போதுமான வசதிகள், போதுமான உணவு கிடைத்துள்ளது. எனவே உடல் முடிந்தவுடன், நான் மீண்டும் பிறக்கப்போவது இல்லை. எவ்வளவு காலம் நான் வாழ்கிரேனோ, வாழ்க்கையை அனுபவிப்போம். " இது நவீன தத்துவம், இன்பமே சிறந்த நலம் என்னும் கோட்பாடு. ஆனால் அது உண்மை இல்லை. எனவே குந்தி கவலைப்படுகிறார்: அபுனர் பவா-தர்ஷனம் (|ஸ்ரீ பா 1.8.25). அபுனர் பவா, மீண்டும் செய்யக்கூடாது. நீங்கள் எப்போதும் கிருஷ்ணரைக் கண்டால், அதுதான் கிருஷ்ண உணர்வு. கிருஷ்ண உணர்வு என்பது எப்போதும் கிருஷ்ணரை நினைப்பதாகும். உங்கள் உணர்வு கிருஷ்ண சிந்தனையில் உள்வாங்கப்பட வேண்டும்.

எனவே நாம் பல்வேறு வகையான ஈடுபாட்டை, கிருஷ்ண உணர்வைத் தருகிறோம். நம் ஆற்றலை நாம் திசை திருப்பக்கூடாது. இப்போது நாம் புத்தகத்தை விற்கும்போது ... அதுதான் கிருஷ்ண உணர்வு; நாம் புத்தகத்தை விற்பனை செய்கிறோம். ஆனால் புத்தகம் விற்பதற்கு பதிலாக, நகைகள் விற்பனை செய்யலாம் என்று நாம் நினைத்தால், அது மிகவும் நல்ல யோசனையல்ல. அது மிகவும் நல்ல யோசனை அல்ல. பின்னர் நாம் மீண்டும் நகைக்கடைக்காரர்களாக மாறுகிறோம். புனர் மூஷிக பவா. மீண்டும் எலி ஆகுக. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமது கிருஷ்ண உணர்வை திசை திருப்ப முடியாது. பின்னர் நீங்கள் நரகத்திற்குச் சென்றுவிடுவீர்கள். ஆபத்து கூட இருக்கிறது, கிருஷ்ண உணர்வில் கூட துன்பம் இருக்கிறது, நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் அறிவுறுத்தல் ... இதுபோன்ற ஆபத்தை நாம் வரவேற்க வேண்டும். மேலும் கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த ஜெபம் என்ன? தத் தே 'நுகம்பாம் சு- சமிக்ஷமனா (ஸ்ரீ பா 10.14.8). "என் அன்பான ஆண்டவரே, நான் இந்த ஆபத்தான நிலையில் வைக்கப்படுவது உமது பெரிய கருணை." அதுவே பக்தரின் பார்வை. அவர் ஆபத்தை ஆபத்தாக கருதுவதில்லை. "இது கிருஷ்ணரின் கருணை." என அவர் எடுத்துக்கொள்கிறார். என்ன வகையான கருணை? இப்போது, புஞ்சாண எவாத்மா-கிருதம் விபாகம். "எனது கடந்தகால நடவடிக்கைகள் காரணமாக, நான் மிகுந்த கஷ்டத்திற்குள்ளாக வேண்டும், ஆனால் நீங்கள் அந்த துன்பத்தைத் தணிக்கிறீர்கள், எனக்கு குறைந்த துன்பத்தைத் தருகிறீர்கள்."