TA/Prabhupada 0943 - எதுவும் எனக்கு சொந்தமானது அல்ல. ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம் , எல்லாம் கிருஷ்ணருக்கு சொந்தமு: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0942 - We Have Created Unnecessary Problems Simply by Forgetting Krsna|0942|Prabhupada 0944 - Only Necessity is that We Take Advantage of Krsna's Arrangement|0944}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0942 - கிருஷ்ணரை மறப்பதன் மூலம் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கியுள்ளோம்|0942|TA/Prabhupada 0944 - கிருஷ்ணர் செய்துள்ள ஏற்பாட்டின் நன்மைகளை நாம் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்|0944}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:27, 16 August 2021



730427 - Lecture SB 01.08.35 - Los Angeles

எனவே எல்லோரும், அந்த வரம்பற்ற ஆசை காரணமாக, ஒன்றன் பின் ஒன்றாக ... இந்த ஆசை, இந்த ஆசை நிறைவேறும் போது, ​​மற்றொரு ஆசை, மற்றொரு ஆசை, மற்றொரு ஆசை. இந்த வழியில் நீங்கள் வெறுமனே சிக்கல்களை உருவாக்குகிறீர்கள். ஆசைகள் நிறைவேறாதபோது, ​​நாம் விரக்தியடைந்து, குழப்பமடைகிறோம். விரக்தி இருக்கிறது. ஒரு வகையான விரக்தி - உங்கள் நாட்டில் ஹிப்பிகளைப் போலவே , அதுவும் விரக்தி. மற்றொரு வகையான விரக்தி எங்கள் நாட்டில் உள்ளது, மிகவும் பழைய விரக்தி - சந்யாசியாக மாறுவது. எனவே சந்யாசியாக மாற, ப்ரஹ்ம ஸத்யம் ஜகன் மித்யா, இந்த உலகம் பொய்யானது. அது எப்படி பொய்யானது? அவரால் அதை சரியாகப் பயன்படுத்த முடியவில்லை; எனவே அது பொய்யானது. அது பொய்யல்ல. வைஷ்ணவ தத்துவம் என்பது, இந்த உலகம் பொய்யானது அல்ல; அது உண்மை. ஆனால் "நான் இந்த உலகத்தை அனுபவிப்பவன்" என்று நீங்கள் நினைக்கும் போது பொய்யானது. அதை கிருஷ்ணருடையது என்று ஏற்றுக்கொண்டு, நீங்கள் கிருஷ்ணரின் சேவைக்கு பயன்பட வேண்டும், அப்போது அது தவறல்ல. இந்த பூக்கள், இந்த பூக்கள் பூக்கடையில் உள்ளன என்பதை இந்த எடுத்துக் காட்டு வழங்கியுள்ளோம். மக்கள் வாங்கும் பல பூக்கள் உள்ளன. நாங்கள் வாங்குகிறோம், மற்றவர்கள் வாங்குகிறார்கள். அவர்கள் புலன் திருப்திக்காக வாங்குகிறார்கள், நாங்கள் கிருஷ்ணருக்காக வாங்குகிறோம். மலர் ஒன்றே. எனவே ஒருவர் கேட்கலாம் "நீங்கள் கிருஷ்ணருக்கு வழங்குகிறீர்கள். கிருஷ்ணர் என்பவர் முழுமுதற் கடவுள், நீங்கள் எவ்வாறு பௌதிக பொருள்களை வழங்குகிறீர்கள், இந்த பூக்கள்? " ஆனால் உண்மையில் பௌதிகம் என்று எதுவும் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் கிருஷ்ணரை மறக்கும்போது, ​​அது பௌதிகம். அது பௌதிகம். இந்த மலர் கிருஷ்ணருக்கானது. இது ஆன்மீகம். இந்த மலர், என் உணர்வு இன்பத்திற்காக எடுத்துக் கொள்ளும்போது, இது பௌதிகம். இது அவித்யா. அவித்யா என்றால் அறியாமை என்று பொருள். எதுவும் எனக்கு சொந்தமானது அல்ல. ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம், எல்லாம் கிருஷ்ணருக்கு சொந்தமானது. எனவே எங்கள் இயக்கம் இந்த கிருஷ்ண பக்தியை எழுப்புவதற்காகும். எல்லாம் கிருஷ்ணருக்கு சொந்தமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கிருஷ்ணர் என்பது உண்மை. உலகம் உண்மை. இந்த உலகம் கிருஷ்ணரால் உருவாக்கப்பட்டது, எனவே இதுவும் உண்மை. எனவே கிருஷ்ண பக்தியில் செய்யப்படும் போது எல்லாம் உண்மை. இல்லையெனில் அது மாயா, அவித்யா.

ஆகவே, அவித்யவினால், அறியாமையால், நாம் புலன்களை திருப்தி செய்து அனுபவிக்க விரும்புகிறோம், மேலும் சிக்கல்களை உருவாக்குகிறோம். உக்ர-கர்மா என்ற பல செயற்கை படைப்புகளை நாம் உருவாக்குகிறோம். நாம் அவித்யவில் இருந்தாலும், கிருஷ்ணரின் அருளால் எல்லாம் மிகவும் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. எங்கிருந்தாலும், உலகின் எந்தப் பகுதியிலும், உணவு இருக்கிறது. எல்லாம் இருக்கிறது, முழுமையானது, பூர்ணம் இதம், பூர்ணம் இதம். கிரீன்லாந்தில், அலாஸ்காவில் ஒருவர் வசிப்பதைப் போல, தட்பவெப்ப நிலை நாம் விரும்புவது போல மிகவும் சாதகமாக இல்லை, ஆனால் அவர்கள் வாழ்கிறார்கள், அங்குள்ள மக்கள். சில ஏற்பாடுகள் உள்ளன. இதேபோல், நீங்கள் எல்லா இடங்களிலும் கூர்ந்து கவனித்தால்... தண்ணீரில் பல லட்ச, லட்சக்கணக்கான மீன்கள் இருப்பதைப் போல. உங்களை ஒரு படகில் ஏற்றி, ஒரு மாதம் நீங்கள் அதில் வாழ வேண்டும் என்றால், நீங்கள் இறந்துவிடுவீர்கள். உங்களுக்கு உணவு இல்லை. ஆனால் பின்னர் ..., தண்ணீருக்குள், பல லட்ச கணக்கான மீன்கள் உள்ளன, அவைகளுக்கு போதுமான உணவு கிடைத்துள்ளது. போதுமான உணவு. ஒரு மீன் கூட உணவு கிடைக்காமல் இறக்காது. ஆனால் நீங்கள் தண்ணீரில் போடப்பட்டால், நீங்கள் இறந்துவிடுவீர்கள். எனவே இதேபோல், கடவுளின் படைப்பால் 8,400,000 இனங்கள், வடிவங்கள், உயிர்கள் உள்ளன. எனவே கடவுள் அனைவருக்கும் உணவைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் சிறையில் இருந்தாலும், அரசாங்கம் உங்களுக்கு உணவை வழங்குகிறது. இதேபோல், இந்த பௌதிக உலகம் சிறைச்சாலையாக கருதப்பட வேண்டும் என்றாலும் வாழும் உயிரினங்களைப் பொறுத்தவரை, இன்னும் எதற்கும் பற்றாக்குறை இல்லை.