TA/Prabhupada 0954 - இந்த அடிப்படை பண்புகளை நாம் வெல்லும்போது, ​​நாம் மகிழ்ச்சியாகி விடுகிறோம்

Revision as of 07:28, 16 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750623 - Conversation - Los Angeles

பஹுலாஷ்வ: ஸ்ரீல பிரபுபாதா, நம் பௌதிக அசுத்தமான நிலையில், நாம் முட்டாள்தனமாக அல்லது பைத்தியக்காரத்தனமாக செயல்படும்போது, ​​அதை தமஸ் அல்லது அறியாமை என்று அழைக்கிறோம். ஆனால் ஆன்மீக வானத்தில், உயிரினம் அவரது தூய்மையான நிலையில் இருக்கும்போது, ​​என்ன செயல்படுகிறது ... அந்த சமயத்தில் அவரை மாயை கொள்ளச் செய்ய ஏதாவது செயல்படுகிறதா?

பிரபுபாதர்: ஆம். ஜெயா-விஜயாவைப் போல. அவர்கள் குற்றம் செய்தார்கள். அவர்கள் நான்கு குமாரர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. அது அவர்களின் தவறு. குமாரர்கள் மிகவும் வருந்தினர். பின்னர் அவர்கள் "நீங்கள் இந்த இடத்தில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள்" என்று அவரை சபித்தனர். எனவே நாம் சில நேரங்களில் தவறு செய்கிறோம். அதுவும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாகும். அல்லது நாம் சிறியவர்களாக இருப்பதால் கீழே விழ வாய்ப்புள்ளது. நெருப்பின் சிறிய துண்டு போல, அது நெருப்பாக இருந்தாலும், அது அணைக்கப்பட வாய்ப்புள்ளது. பெரிய தீ அணையாது. எனவே கிருஷ்ணர் பெரிய நெருப்பு, நாம் ஒரு பகுதி, தீப்பொறிகள், மிகச் சிறியது. எனவே நெருப்பிற்குள் தீப்பொறிகள் உள்ளன, "பட்! பட்!" அங்கு பல உள்ளன. ஆனால் தீப்பொறிகள் கீழே விழுந்தால், அது அணைந்துவிடும். அது அப்படி. வீழ்ச்சி என்பது பௌதிக உலகில், மூன்று வெவ்வேறு தரங்களாக உள்ளன: தமோ-குணம், ரஜோ-குணம் மற்றும் சத்வ-குணம். என்றால் ... தீப்பொறி கீழே விழுவது போல. அது உலர்ந்த புல் மீது விழுந்தால், புல் தீப்பிடித்து விடும். எனவே கீழே விழுந்தாலும், எரிக்கும் தன்மை இன்னும் உள்ளது. உலர்ந்த புல்லின் சூழல் காரணமாக, அது மீண்டும் மற்றொரு நெருப்பை உண்டாக்குகிறது, மற்றும் எரிக்கும் தன்மை உள்ளது. அது சத்வ-குணம். மேலும் தீப்பொறி பச்சை புல் மீது விழுந்தால், அது அணைக்கப்படும். மற்றும் உலர்ந்த புல், பச்சை புல் உலர்ந்தால், மீண்டும் எரியும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தீப்பொறி தண்ணீரில் விழுந்தால், அது மிகவும் கடினம். இதேபோல், ஆன்மா, பௌதிக உலகில் வரும்போது, ​​மூன்று குணங்கள் உள்ளன. எனவே அவர் தமோ-குணத்துடன் தொடர்பு கொண்டால், அவர் மிகவும் அருவருப்பான நிலையில் இருக்கிறார். இது ரஜோ-குணத்துடன் கீழே விழுந்தால், பிறகு சிறிய செயல்பாடு உள்ளது. அவர்கள் வேலை செய்வது போல. அவர் சத்வ-குணத்துடன் கீழே விழுந்தால், "நான் நெருப்பு" என்ற அறிவில் குறைந்தபட்சம் தன்னை வைத்திருக்கிறார். "நான் இந்த மந்தமான பௌதிகத்தை சேர்ந்தவன் அல்ல."

எனவே நாம் அவரை மீண்டும் சத்வ-குணத்திற்கு, பிராமண தகுதிக்கு கொண்டு வர வேண்டும், அதனால் அவர் அஹம் ப்ரஹ்மாஸ்மியைப் புரிந்து கொள்ள முடியும், "நான் ஆன்மீக ஆன்மா. நான் இந்த ஜட பொருள் இல்லை." பின்னர் அவரது ஆன்மீக செயல்பாடு தொடங்குகிறது. எனவே அவரை சத்வ-குணத்தின் தளத்திற்கு அழைத்து வர முயற்சிக்கிறோம், ரஜோ-குணம், தமோ-குணம் ஆகியவற்றின் வேலைகளை விட்டுவிடுவதற்கு: இறைச்சி சாப்பிடுவதில்லை, சட்டவிரோத பாலுறவு இல்லை, போதை இல்லை, சூதாட்டம் இல்லை. பல இல்லை - பௌதிக குணங்களின் செல்வாக்கை அவருக்கு மறுக்க. பின்னர், அவர் சத்வ-குணத்தோடு அமைந்திருந்தால், அவர்..... அவர் சத்வ-குணத்தோடு இருக்கும்போது, பின்னர் ரஜஸ்-தமஸ், மற்ற தாழ்ந்த பண்புகள், அவரை தொந்தரவு செய்ய முடியாது. தாழ்ந்த பண்புகள், தாழ்ந்த பண்புகளின் தளம் இதுதான்: சட்டவிரோத பாலுறவு, இறைச்சி சாப்பிடுவது, போதை, சூதாட்டம். ததா ரஜஸ்-தமோ-பாவா: காம-லோபாதயஷ் ச யே (ஸ்ரீ.பா. 1.2.19). ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு தாழ்ந்த பண்புகளிலிருந்து விடுபடும்போது.... அடிப்படை பண்பு என்றால் காம, காம ஆசைகள் மற்றும் பேராசை. பௌதிக உலகில், பொதுவாக அவர்கள் இந்த தாழ்ந்த பண்புகளின் கீழ் உள்ளனர், எப்போதும் காம ஆசைகளால் நிரப்பப்பட்டு திருப்தி அடையாத, பேராசை கொண்டவர். எனவே இந்த தாழ்ந்த பண்புகளை நாம் வெல்லும்போது, ​​நாம் மகிழ்ச்சியாகி விடுகிறோம். ததா ரஜஸ்-தமோ-பாவா: காம-லோபாதயஷ் ச யே, சேத ஏதைர் அனவித்தம்... (ஸ்ரீ.பா. 1.2.19). இந்த தாழ்ந்த பண்புகளால் நனவு பாதிக்கப்படாதபோது,சேத ஏதைர் அன... ஸ்தித: ஸத்த்வே ப்ரஸீததி. சத்வ-குணத்தின் மேடையில் அமைந்திருப்பதால், அவர் மகிழ்ச்சியாக உணர்கிறார். அதுவே ஆன்மீக வாழ்க்கையின் ஆரம்பம். எப்போது ... காம ஆசைகள் மற்றும் பேராசை ஆகியவற்றால் மனம் கலங்கியிருக்கும் வரை, ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி எந்த கேள்வியும் இல்லை. எனவே, முதல் வேலை மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதாகும், அதனால் அது தாழ்ந்த பண்புகள் - காம ஆசைகள் மற்றும் பேராசை ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடாது. பாரிஸில் வயதான எழுபத்தைந்து வயதான மனிதரைப் பார்த்தோம், அவர் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு செல்கிறார், ஏனென்றால் காம ஆசை இருக்கிறது. அவர் கேளிக்கை விடுதியில் நுழைவதற்கு ஐம்பது டாலர்களை செலுத்துகிறார், பின்னர் அவர் மற்ற விஷயங்களுக்கு மேலும் பணம் செலுத்துகிறார். அவருக்கு எழுபத்தைந்து வயதாகியும் கூட, காம ஆசை இருக்கிறது.