TA/Prabhupada 0989 - குருவினுடைய ஆசியினால் ஒருவருக்கு கிருஷ்ணர் கிடைக்கிறார். இதற்குப் பெயர் பகவத் பக்தி: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0988 - So-called Sentimental Religionism is Not Here in the Srimad-Bhagavatam|0988|Prabhupada 0990 - Love Does Not Mean 'I love myself' and Meditate Upon Love. No|0990}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0988 - ஸ்ரீமத் பாகவதத்தில் உணர்ச்சிமயமான சமயத்துவம் என்பது காணப்படுவதில்லை|0988|TA/Prabhupada 0990 - நேசம் என்பது நான் என்னையே நேசிக்கிறேன் என்பதோ நேசத்தின் மேல் தியானம் செய்கிறேன் என்ப|0990}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:33, 16 August 2021



740724 - Lecture SB 01.02.20 - New York

பிரபுபாதர்: கிருஷ்ணரைப் புரிந்து கொள்வது சாதாரண விஷயம் அல்ல. கிருஷ்ணர் சொல்கிறார்,

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு
கஷ்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தானாம்
கஷ்சின் வேத்தி மாம் தத்த்வத:
(BG 7.3).

இந்த உண்மை எதனால் புரியும் என்றால் கிருஷ்ணரின் மூலமாகவோ கிருஷ்ணரின் பிரதிநிதி மூலமாகவோ தான் பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார்,

மய்யாஸக்த-மனா: பார்த
யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:
(ப.கீ 7.1)

மத்-ஆஷ்ரய:. மத்-ஆஷ்ரய: என்றால் "என்னுடையதற்குள்... எனக்கு கீழ்" எனப்படும். உண்மையில் அது... மத்-ஆஷ்ரய: என்றால் கிருஷ்ணரிடம் அடைக்கலம் பெற்றவரை குறிக்கும். அல்லது எந்த தயக்கமும் இன்றி கிருஷ்ணரிடம் சரணடைந்தவரைக் குறிக்கும். அவருக்கு பெயர்தான் மத்-ஆஷ்ரய: அல்லது கிருஷ்ணரிடம் அடைக்கலம் பெற்றவர். எனவே இந்த யோகம் இந்த பக்தி யோகம் இங்கு குறிப்பிட்டுள்ளது போல் பகவத் பக்தி யோகம். இந்த பகவத் பக்தி யோகத்தை பகவத் பக்தனின் திருவடிகளில் சரண் அடைந்த பின்பே கற்க முடியும். இதற்குப் பெயர்தான் பாகவத பக்தன். அவனால் பகவத் பக்தனாக தானாகவே ஆக முடியாது, ஆன்மீக குருவைப் பற்றி கவலைப்படாமல். அது சுத்த முட்டாள்தனம். அயோக்கியத்தனம். அவனால் அது எப்போதுமே முடியாது.

நாம் தினமும் பாடுகிறோம் யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ. ஆனால் அதற்கு அர்த்தம் தெரியுமா துரதிஷ்டவசமாக யஸ்ய ப்ரஸாதாத் ஆன்மீக குரு திருப்தி அடைந்தால் பகவான் திருப்தி அடைகிறார். தன்னால் அல்ல... யஸ்ய, யஸ்ய ப்ரஸாதாத் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான குரோர் அவஜ்ஞா, குருவை மதிக்காமல் இருத்தல் என்பதாகும். முக்கியமாக குருவின் வேலை கிருஷ்ண பக்தியை பரப்புவது. கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரப்பும் ஒருவரை ஒருவர் நிந்தனை செய்வாரானால் அதுவே மிகப் பெரும் பாவம். ஆனால் நாம் பத்து விதமான பாவங்களைப் பற்றியும் குரு அஷ்டகம் மற்றும் குருவை பற்றியும் படிக்கின்றோம் ஸ்ரீ குரு சரண பத்மா என்றால் என்ன அர்த்தம் என்று நமக்குத் தெரியுமா? அந்தப் பாடல் என்ன? படித்துப் பாருங்கள்.

பக்தர்: ஸ்ரீ-குரு-சரன-பத்ம, கேவல பகதி-ஸத்ம, பந்தோ முஇ ஸாவதான... பிரபுபாதர்: ஸாவதான மதே, "மிகுந்த அக்கறையுடன்" இந்தப் பாடலைப் பாடுகின்றார் அதற்கு அர்த்தம் தெரியுமா? இல்லை. யாரால் இதற்கு அர்த்தம் சொல்ல முடியும்? சரி நீங்கள் சொல்லுங்கள்.

பக்தர்: ஸ்ரீகுரு சரண் பத்ம என்றால் "குருவினுடைய தாமரைப் பாதங்கள்" என்று பொருள். கேவல பக்தி சத்ம‌ என்றால் அவரே பக்தியின் நீர்த்தேக்கம் போன்றவர். பந்தோ முஇ ஸாவதான என்றால் நாம் அவரை மிகுந்த ஆச்சரியத்துடன் வழிபடுகிறோம் என்று பொருள். பிரபுபாதர்: ம்ம். படியுங்கள் அடுத்த வரிகளைப் படியுங்கள்.

பக்தர்: ஜாஹார ப்ரஸாதே பாஇ...

பிரபுபாதர்: ஜாஹார ப்ரஸாதே பாஇ... பின்பு?

பக்தர்: ஏ ப வ தோரியா ஜாஇ. பிரபுபாதர்: ஏ ப வ தோரியா ஜாஇ. குருவால் ஒருவர் அருளப்பட்டால் அறியாமையை கடப்பது தெளிவாகிவிடும். ஜாஹார ப்ரஸாதே பாஇ, ஏ ப வ தோரியா ஜாஇ. பின்பு அடுத்த வரி?

பக்தர்: க்ருஷ்ண-ப்ராப்தி ஹோய் ஜாஹா ஹாதே.

பிரபுபாதர்: க்ருஷ்ண-ப்ராப்தி ஹோய் ஜாஹா ஹாதே. குருவினுடைய ஆசியினால் ஒருவர் கிருஷ்ணரை பெறுகிறார். இதுவே...யஸ்ய ப்ரஸாதாத் பகவத். எங்கும் உள்ளது. இதுவே பகவத் பக்தி யோகம். ஆக ஒருவர் இந்த நிலையை அடையவில்லை எனில் பகவத் பக்தி என்பது என்ன? அது அயோக்கியத்தனம் அது பகவத் பக்தி அல்ல.

ஏவம் ப்ரஸன்ன-மனஸோ
பகவத்-பக்தி-யோகத:
(ஸ்ரீ.பா 1.2.20)