TA/Prabhupada 1018 - ஆரம்பத்தில் நாம் லட்சுமி-நாராயணா என்றளவில் ராதா-கிருஷ்ணரை வணங்க வேண்டும்

Revision as of 10:35, 18 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 1018 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730408 - Lecture SB 01.14.44 - New York

பிரதியும்னா: மொழிபெயர்ப்பு: "அல்லது நீங்கள் எப்போதுமே வெறுமையாக உணர்கிறீர்களா, ஏனென்றால், உங்கள் மிக நெருங்கிய நண்பரான கிருஷ்ணரை நீங்கள் இழந்திருக்கலாம்? என் சகோதரர் அர்ஜுனனே, நீ இவ்வளவு மனச்சோர்வடைந்ததற்கு வேறு எந்த காரணத்தையும் என்னால் நினைக்க முடியவில்லை."

பிரபுபாதர்: ஆகவே அர்ஜுனனின் நெருங்கிய நண்பன் கிருஷ்ணர். அர்ஜுன மட்டுமல்ல, எல்லா பாண்டவர்களுக்கும். எனவே அவர்கள் கிருஷ்ணரிடமிருந்து பிரிவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது கிருஷ்ண பக்தரின் அடையாளம். சைதன்ய மஹாபிரபு "எனக்கு கிருஷ்ணர் மீது எந்த அன்பும் இல்லை" என்று கூறினார். அந்த வசனம், இப்போது நான் மறந்துவிட்டேன் ... ந ப்ரேம-கந்தோ ’ஸ்தி (சி.சி மத்திய 2.45). எனவே உங்களுக்கு கிருஷ்ணர் மீது காதல் இல்லையா? நீங்கள் எப்போதும் கிருஷ்ணருக்காக அழுகிறீர்கள், இன்னும் நீங்கள் கிருஷ்ணர் மீது அன்பு இல்லை என்று சொல்கிறீர்களா? " "இல்லை, ஒரு காட்சி செய்வதற்காக நான் அழுகிறேன். உண்மையில் நான் கிருஷ்ணரின் பக்தன் அல்ல. " "ஏன்?" அது "ஏனென்றால் நான் கிருஷ்ணரின் பக்தனாக இருந்திருந்தால், அவர் இல்லாமல் நான் எப்படி வாழ முடியும்? நான் இன்னும் இறக்கவில்லை. அதாவது எனக்கு கிருஷ்ணர் மீது எந்த அன்பும் இல்லை. " இது அன்பின் அடையாளம் - ஒரு காதலனால் ஒரு கணம் கூட வாழ முடியாது காதலியுடன் தொடர்பு கொள்ளாமல். இது அன்பின் அடையாளம். எனவே இந்த அன்பை ராதாவிற்கும் கிருஷ்ணருக்கும் இடையில் மட்டுமே பாராட்ட முடியும், அல்லது கோபிகளுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே; மற்றபடி இல்லை. உண்மையில் அன்பின் பொருள் என்னவென்று நமக்குத் தெரியாது. சைதன்ய மஹாபிரபு சொன்னது போல, அதுவும்

ஆஷ்லிஷ்ய வா பாத-ரதாம் பினஷ்டு மாம்
அதர்ஷனான் மர்ம-ஹதாம் கரோது வா
யதா ததா வா விததாது லம்படோ
மத்-ப்ராண-நாதஸ் து ஸ ஏவ நாபர:
(சை.ச அந்த்ய 20.47, ஷிக்ஷாஷ்டக 8)
யுகாயிதம் நிமேஷேண
சக்ஷுஷா ப்ராவ்ருஷாயிதம்
ஷூன்யாயிதம் ஜகத் ஸர்வம்
கோவிந்த-விரஹேண மே
(சை.ச அந்த்ய 20.39, ஷிக்ஷாஷ்டக 7)

கோவிந்த-விரா. விரா என்றால் பிரித்தல் என்று பொருள். அதாவது, ராதாராணி... சைதன்யா மஹாபிரபு, ஸ்ரீமதி ராதாராணியாக பாவித்து கொண்டார். கிருஷ்ணர் அவர் தன்னையே புரிந்து கொள்ள முடியாதபோது… கிருஷ்ணர் வரம்பற்றவர். கிருஷ்ணர் தன்னை தானே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர் வரம்பற்றவர். அது வரம்பற்றது. அவரது வரம்பற்ற தன்மையைப் பற்றி வரம்பற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆகையால், கிருஷ்ணர் ஸ்ரீமதி ராதாராணியால் பரவசத்தை அடைந்தார், அதுதான் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு. அந்த படம் மிகவும் அருமை: கிருஷ்ணர் ராதாராணியின் அன்பை பெற்று பரவசத்தை அடைகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக தோன்றுகிறார். ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ராதா-க்ருஷ்ண நஹே அன்ய (ஸ்ரீ குரு-பரம்பரா 6). ஆகவே, சைதன்யா மஹாபிரபுவை வழிபடுவதன் மூலம், நீங்கள் ஒரே நேரத்தில் ராதாவையும் கிருஷ்ணரையும் வணங்குகிறீர்கள். ராதா-கிருஷ்ணரை வழிபடுவது மிகவும் கடினம். ஆகவே, நாம் ராதா-கிருஷ்ணரை வணங்குகிறோமே, அது அவர்களுடைய நாராயண வடிவத்தில், ராதா கிருஷ்ணா-லக்ஷ்மி நாராயணாவாக. ஆரம்பத்தில் நாம் லட்சுமி-நாராயண என்றளவில் ராதா-கிருஷ்ணரை வணங்க வேண்டும், பிரமிப்பு மற்றும் வணக்கத்துடன், விதிமுறைகளையும் விதிகளையும் மிகவும் கண்டிப்பாக பின்பற்றி. இல்லையெனில், வ்ரிந்தாவனத்தில் உள்ள ராதா கிருஷ்ணா, அவர்கள், பக்தர்கள், அவர்கள் கிருஷ்ணரை வழிபடுவதில்லை, ஏனெனில் அவர் கடவுள், ஆனால் அவர்கள் கிருஷ்ணரை வழிபடுகிறார்கள். வழிபாடு அல்ல - அது வழிபாட்டிற்கு மேலே உள்ளது. இது அன்பு மட்டும். உங்கள் காதலனை நேசிப்பது போல: அது வழிபாடு என்று அர்த்தமல்ல. இது தன்னிச்சையானது, இதயத்தின் பணி. எனவே அதுவே வ்ரிந்தாவன நிலை. எனவே நாம் வ்ரிந்தாவன அளவிற்கு மிக உயர்ந்த தரத்தில் இல்லை என்றாலும், இன்னும், கிருஷ்ணரை பிரிந்திருப்பதை நாம் உணரவில்லை என்றால், நாம் தெரிந்து கொள்ள வேண்டும், நாம் இன்னும் கிருஷ்ணரின் சரியான பக்தர் அல்ல என்று. அது வேண்டும்: பிரிவை உணர்தல்.