TA/670111b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் அனைத்திற்கும் முலமானவர் என்றால், மேலும் நீங்கள் கிருஷ்ணரை நேசித்தால், பிறகு நீங்கள் அனைவரையும் நேசிப்பீர்கள். அதுதான் உண்மை. உங்கள் தந்தையை நீங்கள் நேசித்தால், பிறகு நீங்கள் உங்கள் சகோதரரை நேசிப்பீர்கள். உங்கள் நாட்டை நேசித்தால், பிறகு நீங்கள் உங்கள் நாட்டு மக்களை நேசிப்பீர்கள். ஒருவேளை நாம் அந்நிய நாட்டில் இருக்கும் போது இந்தியாவிலிருந்து ஒருவர்வந்து; நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்றால். நாம் சாதரணமாக கேட்போம், "ஓ, நீங்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்களா? எந்த பகுதியிலிருந்து வந்திருக்கிறீர்கள்?" ஏன் அந்த மனிதரிடம் ஈடுபாடு? ஏனென்றால் நான் இந்தியாவை நேசிக்கிறேன். மேலும் அவர் இந்தியர் ஆகையால், நான் அவரை நேசிக்கிறேன். ஆகவே அன்பு மூலத்திலிருந்து ஏற்படுகிறது."
670111 - சொற்பொழிவு BG 10.08 - நியூயார்க்