TA/680623b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சமூகத்தில் ஆதியில் இருந்த எண்ணம் யாதெனில், அறிவுத்திறன் வாய்ந்தவர்கள், அறிவுச் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், அவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பிரமனை புரிந்துக்கொள்ள, இந்த உலகின் நிலைப்பாட்டை புரிந்துக்கொள்ள, அவர்கள் ஆன்மீக அறிவைப் புரிந்துக் கொண்டனர். இத்தகைய அறிவின் முன்னேற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால் தற்காலத்தில் பிராமணர் குலத்தில் பிறந்தவர் யாரானாலும், அவர் பிராமணர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் அவர் ஒரு செம்மாராக இருப்பார். ஆனால் அது சிந்தனையில் கொள்ளப்படாது. ஆகையால், மனித சமூகத்தின், இந்த எட்டு பிரிவுகளும், விஞ்ஞான ரீதியான மனித சமூகத்தின் பிரிவுகள் மறைந்துவிட்டது. ஆகையினால் சைதன்ய மஹாபிரபு அறிவுரித்தினார் அதாவது கலௌ, 'இந்த யுகத்தில்' நாஸ்த்ய் ஏவ நாஸ்த்ய் ஏவ நாஸ்த்ய் ஏவ கதிர் அன்யதா (சி.சி. அதி 17.21), 'மனித சமூகத்தின் வாழ்க்கை குறிக்கோளின் முன்னேற்றத்திற்கு வேறு பதிலீடு கிடையாது.' ஏனென்றால் மனித சமூகம், வாழ்க்கையின் குறிக்கோளில் முன்னேற்றம் பெறுவதிற்கானது, மேலும் வாழ்க்கையின் அந்த குறிக்கோள் கிருஷ்ண உணர்வுதான்."
680623 - சொற்பொழிவு SB 07.06.06-9 - மாண்ட்ரீல்