TA/680706 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கடவுள் எப்பொழுதும் உங்கள் அன்புக்காக ஏங்குகின்றார், உங்கள் பௌதிக விஷயங்களுக்காக அல்ல. ஸ்ரீல ரூப கோஸ்வாமி விளக்கியுள்ளார், யாராவது மிக அருமையான, சுவையான உணவுப் பதார்த்தங்கள் பலவற்றை உங்களுக்கு கொடுக்கும்போது, துரதிஷ்டவசமாக உங்களுக்கு பசியார்வம் இல்லாவிட்டால், அவை அனைத்தும் பயனற்றதாகிவிடும், ஏனென்றால் உங்களால் உண்ண முடியாது, பசியார்வம் இல்லை. இதேபோல், கடவுளுக்கு பல்வேறு நிவேதனங்களை செய்வதாக படம் காட்டலாம், ஆனால் பிரேம பக்தி இல்லாவிட்டால், அது ஏற்கப்படாது. அது ஏற்கப்படாது, ஏனென்றால் கடவுள் ஒன்றும் ஏழை அல்ல. அவர் ஒன்றும் யாசகம் கேட்கவில்லை."
680706 - சொற்பொழிவு SB 07.09.09 - மாண்ட்ரீல்