TA/681014 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
பிரபுபாதர்: அது என்ன?

விஷ்ணுஜன: ஐஸ்க்ரீம் வண்டி.

பிரபுபாதர்: ஓ, ஐஸ்க்ரீம். (சிரிப்பு) ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறாயா? ம்?

விஷ்ணுஜன: இல்லை. அவர்கள் தெருவில் அங்கும் இங்கும் செல்கிறார்கள்.

பிரபுபாதர்: வாடிக்கையாளர்களை திரட்டுகிறார்களா?

தமல கிருஷ்ணா: ஆம்.

பிரபுபாதர்: ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டாம். இது மாயை. (சிரிப்பு) 'வாரும், வாரும், என்னை அனுபவி. வாரும் வாரும், என்னை அனுபவி.' (சிரிப்பு) அனுபவித்தவுடன் மாட்டிக்கொள்வீர்கள். அவ்வளவுதான். மீன் தூண்டில் போன்றது. தூண்டிலை போட்டுவிட்டு, மீனை அழைப்பார்கள், 'வாரும், வாரும், என்னை அனுபவி. வாரும், வாரும், என்னை அனுபவி'. உடனே—அப்! (சிரிப்பு) முடிந்தது. பின்னர், (மீனைப் போன்று ஒலியெழுப்புகிறார்) 'இப்போது எங்கு செல்வாய்? வா என் பைக்குள். ஆம், உன்னை நன்றாக வறுப்பேன்'. பார்த்தீர்களா? இவை அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது. மீன் சாப்பிடச் சென்று தன் உயிரை இழந்தது, நாவினால்.

681014 - சொற்பொழிவு BG 02.19-25 - சியாட்டில்