TA/681025 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தற்போது நாம் பௌதிக உணர்வு நிலையில் இருக்கிறோம், நாம் ஆன்மீக உணர்வு அல்லது கிருஷ்ண உணர்வுக்கு முன்னேற வேண்டும். என்ன என்ன நிலைகள்? அது விளக்கப்படுகிறது. அதன் அர்த்தம், இதுவே ஆத்மா மற்றும் உடலைப் பற்றிய உண்மை அறிவை பெரும் பொதுவான வழி. பகவான் சைதன்ய மஹாபிரபு நமக்கு ஒரு விசேஷமான பரிசை கொடுத்துள்ளார், அதாவது நாம் எல்லாவற்றையும் பகுப்பாய்வு ரீதியாக, வேத சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி புரிந்து கொள்ளாவிட்டாலும், ஒருவன் வெறுமனே பகவானின் புனித நாமங்களை உச்சாடனம் செய்யும் முறையின் மூலமே தன்னை புரிந்து கொள்ள முடியும். அதுதான் பகவான் சைதன்யரின் விசேஷமான பரிசு. அவர் கூறினார் இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சாடனம் செய்வீர்களானால், பின்னர் எல்லாம் தானாக வெளிப்படுத்தப்படும்."
681025 - சொற்பொழிவு BG 13.06-7 - மாண்ட்ரீல்