TA/681230b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ண உணர்வை உடையவர் தன்னுணர்வை பெற்றவராவார். எல்லாம் கிருஷ்ணருடன் இணைக்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட வேறு எதனையும் அவர் பின்பற்ற வேண்டிய தேவை என்ன? எல்லாம் நிறைவு பெற்றுவிட்டது. ஆராதிதோ யதி ஹரிஸ் தபஸா தத꞉ கிம் (நாரத பஞ்சராத்ர 1.2.6). ஒருவர் முழுமுதற் கடவுளை உணர்ந்தவராயின், யாகங்கள், தவங்கள், இது அது என்று விதிக்கப்பட்ட சட்டதிட்டங்களை பின்பற்றவேண்டிய எந்தவொரு கடமையும் அவருக்கு இல்லை. அவரது வேலை முடிந்துவிட்டது. ஒரு மனிதன் குணமடைந்துவிட்டால் மருந்துக்கான எந்தவொரு தேவையும் இருப்பதில்லை. அவன் ஆரோக்கியமான நிலையில் இருக்கின்றான். பக்தித் தொண்டில், கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருப்பது, அவன் ஆரோக்கியமான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. அவர் செய்ய வேண்டிய விதிக்கப்பட்ட கடமைகள் எதுவும் இல்லை. பார்த்தீர்களா? அவர் இவ்வாறான வேலையில் ஈடுபடாமல் இருப்பதற்கும் எந்த காரணமும் இல்லை."
Lecture BG 03.18-30 - - லாஸ் ஏஞ்சல்ஸ்