TA/690109d சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே பகவான் மிகவும் கருணை நிறைந்தவர் அதனால் சில மனிதர்களால் கூட அவரை புரிந்துக் கொள்ள முடியவில்லை... முதல் விஷயம், மக்களால் உண்மையில் கடவுள் என்பவர் யார் என்று புரிந்துக் கொள்ள முடியவில்லை, அத்னால் பகவான் தானே வந்து விளக்குகிறார். இருப்பினும், அவர்கள் தவறு செய்கிறார்கள். ஆகையினால் கிருஷ்ணர் ஒரு பக்தராக நமக்கு கிருஷ்ண உணர்வை கற்பிக்க வந்தார். எனவே நாம் பகவன் சைதன்யரின் அடிச்சுவட்டை பின்பற்ற வேண்டும். மேலும் நரோத்தம தாஸ டாகுர கற்பிக்கிறார் அதாவது "முதலில், கௌரஸுந்தரரின் பெயரை உச்சாடனம் செய்ய முயற்சி செய்யுங்கள்."
ஷ்ரீ-க்ருʼஷ்ண-சைதன்ய ப்ரபு-நித்யானந்த
ஷ்ரீ-அத்வைத கதாதர ஷ்ரீவாஸதி-கௌர-பக்த-வ்ருʼந்த

இந்த முறையில், நாம் கௌரஸுந்தரரிடம், பகவன் சைதன்யருடன், சிறிது இணைக்கப்பட்டவுடன், பிறகு நாம் தானாக திவ்வியமான உணர்ச்சியை உணருவோம். மேலும் அந்த உணர்வின் நிலை உடலின் நடுக்கத்தின் மூலம் உணரப்படுகிறது. நாம் அத்தகைய நடுக்கத்தை பொது இடத்தில் அதாவது " நான் ஒரு சிறந்த பக்தனாகிவிட்டேன்," என்று காண்பிக்க பின்பற்ற கூடாது, ஆனால் நாம் பக்தி தொண்டை நன்றாகவும் மேலும் உண்மையுடனும் செயலாற்ற வேண்டும்; பிறகு அந்த நிலை, நடுக்கம், தானாக வந்துவிடும்."

690109 - Bhajan and Purport to Gauranga Bolite Habe - லாஸ் ஏஞ்சல்ஸ்