TA/690219b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வெறுமனே "கிருஷ்ணா" என்று நீங்கள் உச்சாடனம் செய்து மேலும் அதை நீங்கள் காதால் கேட்டால், தானாக உங்கள் மனம் கிருஷ்ணர்மிது நிலைத்துவிடும். அதாவது யோகா முறை உடனடியாக உன்னை அடைந்துவிடும். ஏனென்றால் அனைத்து யோகா முறையும் உங்கள் மனதை விஷ்ணுவின் உருவில் கவனம் செலுத்த தான், மேலும் கிருஷ்ணர்தான் மூலவர் அவருடைய விரிவாக்கம் தான் விஷ்ணுவின் உருவம். கிருஷ்ணர் தான்... எவ்வாறு என்றால் இதோ இங்கு ஒரு விளக்கு இருக்கிறது. இப்போது இந்த விளக்கிலிருந்து, இந்த மெழுகுவர்த்தியிலிருந்து, நிங்கள் மற்றொரு மெழுகுவர்த்தியை உருவாக்கலாம், நீங்கள் தீ பற்றவைக்கலாம். பிறகு மற்றொன்று, மற்றொன்று, மற்றொன்று, - ஆயிரக்கணக்கில் நீங்கள் விரிவாக்கலாம். ஒவ்வொரு மெழுகுவர்த்தியும் முதல் மெழுகுவர்த்தியின் சக்தியுடையதாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒருவர் இந்த மெழுகுவர்த்தியை மூல மெழுகுவர்த்தியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல், கிருஷ்ணர் இலட்ச கணக்கான விஷ்ணுவாக விரிவாக்கம் செய்கிறார். ஒவ்வொறு விஷ்ணுவின் உருவமும் கிருஷ்ணருக்கு இணையானது, ஆனால் கிருஷ்ணர்தான் மூலமான மெழுகுவர்த்தி, ஏனென்றால் கிருஷ்ணரிடமிருந்து தான் அனைத்தும் விரிவாக்கம் பெறுகிறது."
690219 - சொற்பொழிவு BG 06.30-34 - லாஸ் ஏஞ்சல்ஸ்