TA/690609 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த இயக்கம், கிருஷ்ண உணர்வு இயக்கம், அதாவது, எல்லாவற்றையும் சீராக்கி விடும், எல்லாவற்றிற்கும் வழிசமைத்துக் கொடுக்கும். அதை அவர்கள் அறிய வேண்டும். நமது வழிமுறை மிகவும் எளிமையானது. இந்த வழிமுறையை நம்மால் தொழிற்சாலைகளில் அறிமுகப்படுத்தலாம், ஏன் எங்கு வேண்டுமானாலும் அறிமுகப்படுத்தி எல்லாவற்றையும் அமைதியாக்கி விட முடியும். அது உண்மை. பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக்கழகம், தொழிற்சாலை, எங்கு வேண்டுமானாலும். சேதோ-தர்பண-மார்ஜனம்ʼ (CC Antya 20.12, Śikṣāṣṭaka 1). அது தூய்மைப்படுத்தும் வழிமுறை. எல்லாம் மாசுடையது. எனவே தூய்மைப்படுத்தி மக்களை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற நாம் விரும்புகின்றோம். அதுவே நமது பணி. நாம் ஒன்றும் "உனது பணத்தை கொடு, நான் அனுபவிக்கிறேன்" என்றவாறு பணத்தை சேகரிக்கும் இயக்கம் அன்று. நாம் அதுவன்று. பணம்..., நம்மிடம் ஏராளமாக பணம் உள்ளது. கிருஷ்ணர் நமது... எல்லா பணமும் கிருஷ்ணருடையது. யம்ʼ லப்த்வா சாபரம்ʼ லாபம்ʼ மன்யதே நாதிகம்ʼ தத꞉ (BG 6.22).‌‌ கிருஷ்ணர் மதிப்புமிக்கவர், ஒருவர் கிருஷ்ணரை பெற்றுவிட்டால்… பின்பு அவருக்கு வேண்டியது எதுவுமில்லை."
690609 - உரையாடல் - New Vrindaban, USA