TA/700518b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்கள் கண்களில் இறைவனின் அன்பை தடவிக் கொண்டால், பிறகு நீங்கள் பகவானை எப்பொழுதும் பார்க்கலாம். ஸந்த꞉ ஸதைவ ஹ்ருʼதயேஷு விலோகயந்தி. ஆம். ஆக பக்தி. எனவே இதுதான் பகவானை புரிந்து கொள்ளும் வழி. தொண்டு செய்வதால், அன்பை மேம்படுத்துவதால்... இந்த அன்பை தொண்டு செய்வதன் மூலம் தான் அதிகரிக்கலாம். இல்லையென்றால் அங்கு சாத்தியமில்லை. ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ (பிரஸ. 1.2.234). உங்கள் சேவை மனப்பான்மையை அதிகமாக அதிகரிக்கும் போது, பகவானிடம் உள்ள செயலற்ற அன்பு மேலும் அதிகரிக்கும். மேலும் பகவான் மீது உள்ள உங்கள் அன்பு பரிபூரணமான நிலையை அடைந்தவுடன், நீங்கள் பகவானை எப்பொழுதும் காண்பீர்கள், ஒவ்வொரு கணமும். இருபத்தி நான்கு மணி நேரமும் நீங்கள் பார்க்கலாம். மிக்க நன்றி."
700518 - சொற்பொழிவு ISO 13-15 - லாஸ் ஏஞ்சல்ஸ்