TA/710201 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் பகவானின் எந்த ஒரு பெயரை ஜெபித்தாலும், அது புரிந்துக் கொள்ளப்பட வேண்டும், பகவான், பூரண உண்மையானவர், பகவானுக்கும் அவருடைய பெயருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்வதனால் நீங்கள் நேரடியாக கிருஷ்ணருடன் தொடர்பு கொள்கிறீர்கள், மேலும் நீங்கள் சுத்திகரிக்கப்படுகிறீர்கள். சேதோ-தர்பண-மார்ஜனம்ʼ பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம்ʼ (சி.சி. அந்த்ய 20.12, ஷிக்ஷாஷ்டக 1). நிச்சயமாக, இந்த மஹா-மந்திரத்தைப் பற்றி அனைத்தையும் விவரிப்பது ஒரு நீண்ட முன்மொழிவு, ஆனால் நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன், அதாவது நீங்கள் எங்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள, அதாவது இந்த சிறுவர்கள் மற்றும் பெண்கள், வெறுமனே உச்சாடனம் செய்வதன் மூலம், அவர்கள் எவ்வாறு மிகவும் தூய்மையாகிறார்கள், அவர்கள் எவ்வாறு நித்தியமான பரவசத்தில் நடனமாடுகிறார்கள், அதை நீங்கள் பார்க்கலாம், மேலும் அதை உங்கள் வாழ்க்கையில் பரிசோதனை செய்ய முயற்சி செய்யுங்கள்—நீங்கள் ஆனந்தம் அடைவீர்கள்."
710201 - சொற்பொழிவு - அலகாபாத்