TA/710217 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முக்தி பெறுவது என்றால் தற்போதைய தருணத்தில் இந்த பௌதிக..., இந்த பௌதிக உலகில், அவன் ஜட உடலை ஏற்றிருக்கிறான், மற்றும் அவன் கிருஷ்ணரின் நேர்மையான வேலைக்காரனானதும், அவனுக்கு ஆன்மீக உடல் அளிக்கப்படும். ஒரு சிப்பாய் போல. ஒரு நபர், அவன் சிப்பாய் ஆகாமல் அவனுக்கு... அவனுக்கு சீருடை வழங்கப்படமாட்டாது. ஆனால் அவன் சிப்பாய் வேலையை ஏற்றுக் கொண்டதும், உடனடியாக அவனுக் சீருடை வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த பௌதிக உலகில் வேறுபட்ட உடலை ஏற்றுக் கொள்கிறீர்கள், மேலும் அதுதான் பூத்வா பூத்வா ப்ரலீயதே (ப.கீ 8.19). நீங்கள் ஒரு வகை உடலை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள், அது மறைந்து போகிறது; மறுபடியும் நீங்கள் மற்றொன்றை ஏற்க வேண்டும். ஆனால் நீங்கள் பூர்ணமாக கிருஷ்ண பக்தனாக ஆனவுடனே, த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம நைதி (ப.கீ. 4.9), பிறகு, இந்த உடலைவிட்டு போனதும், அவன் மீண்டும் இந்த பௌதிக உலகத்திற்கு வருவதில்லை. அவன் உடனடியாக... மம் ஏதி, அவன் பரிமாற்றம் அடைகிறான். அதேபோல், அவன் ஆன்மீக உடலை ஏற்றுக் கொள்கிறான்."
710217 - உரையாடல் - கோரக்பூர்