TA/710919 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நைரோபி இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே ஒருவன் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதில் தீவிரமாக இருந்தால், அவன் பாவம் நிறைந்த அனைத்து வாழ்க்கையில் இருந்தும் விடுபட முயற்சி செய்ய வேண்டும், யேஷாம்ʼ அந்த-கதம்ʼ பாபம்ʼ. இல்லையெனில், கிருஷ்ணர் தூய்மையானவர்:
பரம்ʼ ப்ரஹ்ம பரம்ʼ தாம
பவித்ரம்ʼ பரமம்ʼ பவான்
(ப.கீ. 10.12)
அது அர்ஜுனரால் விவரிக்கப்பட்டது.

எனவே நாம் முழுமையான தூய்மையை சென்று அடைய வேண்டுமென்றால், நாம் முதலில் தூய்மையாக வேண்டும். இந்த ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்வது உங்களை தூய்மைப்படுத்தும், ஆனால் கட்டுப்படுத்தப்பட வேண்டிய நான்கு கொள்கைகளை தவிர்ப்பது உங்களுக்கு உதவியாகும். பிறகு நீங்கள் மிகவும் வேகமாக அணிவகுத்துச் செல்வீர்கள், மேலும் வீடுபேறு அடைவீர்கள், பரமபதம் அடைவீர்கள், மிகவும் விரைவாக. அதுதான் செயல்பாடு."

710919 - சொற்பொழிவு on Sri Sri Gurv-astaka - நைரோபி