TA/720624 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே ஒருவர் உண்மையை பார்த்திருக்க வேண்டும், உண்மையை உணர்ந்திருக்க வேண்டும். தத்-விஜ்ஞானார்தம்ʼ ஸ குரும் ஏவாபிகச்சேத் (மு 1.2.12). அதுதான் குரு, அப்படியென்றால் உண்மையை பார்த்திருப்பவர். அவர் எவ்வாறு உண்மையை பார்த்தார்? பரம்பரா முறைவழி. இதை கிருஷ்ணர் கூறினார், மேலும் ப்ரஹ்மாவும் அதையே கூறினார், பிறகு நாரதரும் அதையே கூறினார், வ்யாஸதேவரும் அதையே கூறினார், பிறகு சீடர் தொடர் முறை, மத்வாசார்ய, மாதவேந்த்ர புரீ, ஈஷ்வர புரீ, பகவான் சைதன்ய, ஷட்-கோஸ்வாமீ, க்ருʼஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமீ, ஷ்ரீநிவாஸ ஆசார்ய, நரோத்தம தாஸ டாகுர, விஷ்வநாத சக்ரவர்தீ டாகுர—இந்த வழியாக—ஜகந்நாத தாஸ பாபாஜீ, கௌர கிஷோர தாஸ பாபாஜீ, பக்திஸித்தாந்த ஸரஸ்வதீ. பிறகு நாமும் அதையே பேசிக் கொண்டிருக்கிறோம். 'நாம் நவீனமாகிவிட்டோம், நவீன விஞ்ஞானம் மாறிவிட்டது', என்ற காரணமல்ல. ஒன்றும் மாறவில்லை. அதெல்லாம் முட்டாள்தனம்."

720624 - சொற்பொழிவு SB 02.04.01 - லாஸ் ஏஞ்சல்ஸ்