TA/731026 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே எங்கள் முயற்சி, கிருஷ்ண உணர்வு இயக்கம், மனித வாழ்க்கையின் பொறுப்புக்கு வர மக்களை அறிவுறுத்துவதாகும். இது நமது வேத நாகரிகம். வாழ்வின் பிரச்சினை என்பது வாழ்நாளில் சில வருடங்களுக்கான சிரமங்கள் அல்ல. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்று திரும்பத் திரும்ப வரும் பிரச்னையை எப்படி தீர்ப்பது என்பதுதான் வாழ்க்கையின் உண்மையான பிரச்சினை. அதுவே பகவத் கீதையில் உள்ள உபதேசம்: ஜென்ம - ம்ருத்யு - ஜரா - வியாதி - துக்க - தோசனுதர்சனம் (BG 13.9). வாழ்வின் எத்தனையோ பிரச்னைகளால் மக்கள் சங்கடப்படுகின்றனர். ஆனால், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றை எப்படி நிறுத்துவது என்பதுதான் வாழ்வின் உண்மையான பிரச்னை. அதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வாழ்வின் சிக்கலைப் புரிந்து கொள்ளாத அளவுக்கு அவர்கள் மந்தமானவர்களாக மாறிவிட்டனர்."
731026 - Departure - மும்பாய்