TA/740116 - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவரால் நாவின் தூண்டுதலை கட்டுப்படுத்த முடிந்தால், பிறகு அவரால் இயற்கையாகவே வயிற்றின் தூண்டுதலையும் மேலும் பிறப்புறுப்பின் தூண்டுதலையும் நிறுத்த இயலும், மூன்று நேர் கோடுகள். எனவே இது பயிற்சி செய்யப்பட வேண்டும். ஏதான் வேகான் யோ விஷஹேத தீர꞉ (NOI 1): "இவை அனைத்தின் தூண்டுதலையும் கட்டுப்படுத்துவதில் வெற்றி அடையும் ஒருவர்," ப்ருʼதிவீம்ʼ ஸ ஶிஷ்யாத், "இபோது இவர் சுதந்திரமாக உலகம் எங்கிலும் சீடர்களை உருவாக்க முடியும்." மேலும் அவர்கள் அப்படி இல்லை... என்னால் என்னுடைய நாவை மேலும் என் பிறப்புறுப்பை கூட கட்டுப்படுத்த முடியவில்லை, மற்றும் நான் ஆன்மீக குருவானேன். இது முட்டாள்தனம். இது முட்டாள்தனம். நீங்கள் முதலில் கற்றுக் கொள்ளுங்கள். கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். முதல் தரமான கட்டுப்படுத்தியாகுங்கள், தீர꞉. அதுதான் தீர꞉ என்று அழைக்கப்படுகிறது: தூண்டுதலால் தொந்தரவு அடையதவர்கள். ஏதான் வேகான் யோ விஷஹேத தீர꞉. தீரஸ் தத்ர ந முஹ்யதி. இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது, தீர꞉. தீர꞉ என்றால் மிகவும் நிதானமான, முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பவர். அதுதான் தீர꞉ என்று அழைக்கப்படுகிறது. தீரஸ் தத்ர ந முஹ்யதி. நீங்கள் தீர: ஆகாமல், ஆன்மீக வாழ்க்கை என்ன என்பதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியாது. அது சாத்தியமல்ல."
740116 - சொற்பொழிவு SB 01.16.20 - ஹானலுலு