TA/740120 - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் நேரத்தின் முழு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றோம். காலேன ஸர்வத்ர கபீர-ரம்ʼஹஸா. அது இங்கு விளக்கப்பட்டுள்ளது. காலேன வா தே பலினாம்ʼ பலீயஸா. மிகவும் வலுவானது. அங்கு சக்தி இல்லை... உங்கள் விஞ்ஞான சக்தி என்று அழைக்கப்படுவது... காலத்தின் செல்வாக்கிற்கு எதிராக நீங்கள் போராட முடியாது. எனவே நேரத்தை சேமித்துக் கொள்ளுங்கள். நேரத்தை சேமித்துக் கொள்ளுங்கள். மற்றொரு செயல்முறை யாதெனில், நேரத்தை சேமித்துக் கொள்ளுங்கள், நீங்கள் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்தால் பிறகு நேரம் இழக்கப்படுவதில்லை. நேரம் இழக்கப்படுவதில்லை. ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம், புத்தகம் படிப்பது, கிருஷ்ணா புத்தகம். எந்த நேரமும், எந்த நேரத்தையும் நீங்கள் கிருஷ்ணரை நினைப்பதில் செலவழித்து, கிருஷ்ணருக்கு சேவை செய்து, கிருஷ்ணருக்காக உச்சாடனம் செய்து, கிருஷ்ணருக்காக உட்கொண்டு, கிருஷ்ணருக்காக நடனமாடினால், அந்த நேரம் காப்பாற்றப்படுகிறது. அந்த நேரம் காப்பாற்றப்படுகிறது. ஆகையினால் இது பரிந்துரைக்கப்படுகிறது ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம், கலௌ நாஸ்த்ய் ஏவ நாஸ்த்ய் ஏவ . . . (CC Adi 17.21). இல்லையென்றால், யோகா பயிற்சியால், அது இல்லை... எத்தனை ஆண்கள் உண்மையில் யோகா பயிற்சி செய்ய முடியும்? அவை அனைத்தும் கேலிக்கூத்து. இது சாத்தியமாகும். ஹரே கிருஷ்ணா மந்திரம், ஒரு குழந்தை கூட பங்கு கொள்ள முடியும்."
740120 - சொற்பொழிவு SB 01.16.24 - ஹானலுலு