TA/740528 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ரோம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ப்ரஹ்மா நாரதருக்கு அறிவுறுத்தினார். நாரதர் வ்யாஸதேவருக்கு அறிவுறுத்தினார். வ்யாஸதேவர் அவர் சீடர் மத்வாசார்யருக்கு அறிவுறுத்தினார். இவ்வாறாக நாமும் அதே வழியை பின்பற்ற வேண்டும். முதன்முதலாக, ஆன்மீக குருவிற்கு மரியாதை வழங்குங்கள், அவர் ஶுகதேவ கோஸ்வாமீக்கு செய்தது போல. தம்ʼ வ்யாஸ-ஸூனும் உபயாமி குரும்ʼ முனீனாம் (SB 1.2.3). எனவே பிறகு அவருடைய ஆன்மீக குரு, பிறகு அவருடைய ஆன்மீக குரு, பிறகு அவருடைய ஆன்மீக குரு. நீங்கள் இந்த புகைப்படத்தில் வைத்திருப்பது போல்: முதலில், உங்கள் ஆன்மீக குரு, பிறகு அவருடைய ஆன்மீக குரு, பிறகு அவருடைய ஆன்மீக குரு, அவருடைய ஆன்மீக குரு—இறுதியாக கிருஷ்ணர். இதுதான் செயல்முறை. இவர்களை தாண்டி கிருஷ்ணரை நேரடியாக அணுக முயற்சி செய்யாதீர்கள். அது பயனற்றது. நீங்கள் பரம்பரா முறைப்படி படிப்படியாக அறிவை பெற்றது போல், அதேபோல், நாம் கிருஷ்ணரை இந்த முறைப்படி அணுக வேண்டும்.
நாராயணம்ʼ நமஸ்க்ருʼத்ய
நரம்ʼ சைவ நரோத்தமம்
தே³வீம்ʼ ஸரஸ்வதீம்ʼ வ்யாஸம்ʼ
ததோ ஜயம் உதீ³ரயேத்
(SB 1.2.4)

இவ்வழியாக நீங்கள் புகழப்படுவீர்கள்."

740528 - சொற்பொழிவு SB 01.02.04 - ரோம்