TA/750423b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"விருந்தினர்: இஸ்கொன் எந்த அரசாங்கத்தையும்விட சிறப்பாக செய்துள்ளது. பத்து வருடத்தில் இஸ்கொன் செய்திருப்பதை, வேறு எந்த அரசாங்கமும் செய்ததில்லை.
பிரபுபாதர்: ஆம். அமெரிக்காவில் கூட அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். எங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் கோவிலில் ஒரு கடைக்காரர் எங்கள் பக்தர்களை விசாரித்தார், அதாவது "நீங்கள் எவ்வாறு பராமரிக்கிறீர்கள்? நீங்கள் வேலை செய்வதில்லை. உங்களிடம் பல கார்கள் இருக்கின்றன. நீங்கள் நன்றாக சாப்பிடுகிறீர்கள். நீங்கள் அழகான கட்டிடங்களில் வாழ்கிறீர்கள். நீங்கள் எவ்வாறு வழங்கப்படுகிறீர்கள்?" அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. த்ரிபுராரி: இருப்பினும் அவர்கள் நம்மை ஒட்டுண்ணியாக நினைக்கிறார்கள். விருந்தினர்: ஆம், அது மற்றொரு உணர்வு, ஆனால் நாம் அதை தெளிவுபடுத்த வேண்டும். பிரபுபாதர்: சரி, ஒட்டுண்ணியோ இல்லையோ, ஆனால் நாம் வேலை செய்வதில்லை மேலும் நமக்கு உணவு கிடைப்பதில்லை. த்ரிபுராரி: அவர்கள் கூறுகிறார்கள், ஏனென்றால் நாம் அவர்களிடம் பிச்சை கேட்கிறோம் என்று. அதனால் அவர்கள் நமக்காக வாங்குகிறார்கள். பிரபுபாதர்: எனவே ஏன் நிங்கள் நிறுத்திக் கொள்ளக்கூடாது? எங்களுக்கு கொடுக்க நீங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறீர்கள். நிங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்கிறோம் என்றால், நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள். ஆனால் உங்களால் நிறுத்த முடியாது. (சிரிப்பொலி) நிங்கள் எங்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும். நாங்கள் பிச்சைக்காரர்கள் என்று கான்பிக்கிறோம், ஆனால் நாங்கள் வரி விதிக்கிறோம், உங்களிடமிருந்து வரி வாங்குகிறோம். நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக் கொள்ளுங்கள். மகன்லல்: அரசாங்கமும் பிச்சை எடுக்கிறது. பிரபுபாதர்: ஆம். இல்லை, நாங்கள் பிச்சை எடுக்கின்றோம் என்றால், நீங்கள் அதை நிறுத்துங்கள். அது உங்கள் கைகளில் உள்ளது. நாங்கள் உங்களை சார்ந்து இருக்கவில்லை."
|
750423 - காலை உலா - விருந்தாவனம் |