TA/750424 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ண உணர்வு என்பது தூய்மையான உணர்வாகும். தூய்மையான உணர்வு என்றால் இதை புரிந்துக் கொள்வதாகும் அதாவது 'நான் மிக நெருக்கமாக கிருஷ்ணருடன் அவருடைய அங்க உறுப்பாக இணைக்கப்பட்டிருக்கிறேன்'. எவ்வாறென்றால், என் கை விரல்கள் என் உடலுடன் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கிறது. நெருக்கமாக... விரலில் ஒரு சிறிய வலி இருந்தாலும், நான் மிகவும் தொந்தரவாக கருதுகிறேன், ஏனென்றால் நான் இந்த விரலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கிறேன். அதேபோல், நமக்கு கிருஷ்ணருடன் நெருக்கமான தொடர்பு உள்ளது, ஆனால் நாம் தாழ்வை அடைந்துவிட்டோம். ஆகையினால் கிருஷ்ணரும் சிறிது வலியை உணர்கிறார், மேலும் அதனால் அவர் கிழே வருகிறார்:
பரித்ராணாய ஸாதூனாம்ʼ
விநாஶாய ச துஷ்க்ருʼதாம்
தர்ம-ஸம்ʼஸ்தாபனார்தாய
ஸம்பவாமி யுகே யுகே
(BG 4.8)

கிருஷ்ணர் வலியை உணர்கிறார். எனவே நீங்கள் கிருஷ்ண பக்தனாக மாறுங்கள், பிறகு கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைவார். அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம்."

750424 - சொற்பொழிவு SB 01.07.07 - விருந்தாவனம்