TA/Prabhupada 0682 - எனது கட்டளைக்கேற்ப விநியோகம் செய்பவரல்ல கடவுள்



Lecture on BG 6.30-34 -- Los Angeles, February 19, 1969

விஷ்ணுஜன: தன்னுணர்விற்கு அப்பாற்பட்ட கிருஷ்ண உணர்வின் இந்நிலையில், பக்தனுக்கு கிருஷ்ணரே எல்லாமாகி விடுவதாலும், பக்தன் கிருஷ்ணரின் மீதான அன்பில் முழுமையடைவதாலும், பக்தன் கிருஷ்ணருடன் ஒன்றாகி விடுவதாக கூறலாம். பின்னர், கிருஷ்ணருக்கும் பக்தனுக்கும் இடையே ஒரு நெருங்கிய உறவு தொடங்குகிறது. அந்நிலையில் ஜீவனை அழிக்கவோ, பக்தனின் பார்வையிலிருந்து பரம புருஷரை விலக்கவோ இயலாது.

பிரபுபாதா: எவ்வாறு அவர் பார்வையில் இருந்து விலக முடியும்? பக்தன் எல்லாவற்றிலும் கிருஷ்ணரையும், கிருஷ்ணரை எல்லாவற்றிலும் காண்கிறான். கிருஷ்ணரில் எல்லாம், எல்லாவற்றிலும் கிருஷ்ணர். பிறகு எப்படி கிருஷ்ணரைப் பார்ப்பதை தவிர்க்க முடியும்? ஆம்

விஷ்ணுஜன: "கிருஷ்ணரில் கலப்பது ஆன்மீக அழிவாகும். பக்தன் அத்தகு அபாயத்தை ஏற்பதில்லை. பிரம்ம சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது : " பிரேமை என்னும் மையினால் அலங்கரிக்கப்பட்ட பக்தரின் கண்களால் எப்போதும் காணப்படும் ஆதி புருஷரான கோவிந்தனை நான் வணங்குகிறேன். பக்தனின் இதயத்தில் வீற்றுள்ள அவர் , தனது நித்தியமான சியாம சுந்தர ரூபத்தில் எப்போதும் காணப்படுகிறார்."

பிரபுபாதா: சியாம சுந்தரர், இவரே சியாமசுந்தரர், கர்தமஸி. சியாம சுந்தரர்.

ப்ரேமாஞ்ஜன-ச்சு2ரித-ப4க்தி-விலோசனேன
ஸந்த: ஸதை3வ ஹ்ரு'த3யேஷு விலோகயந்தி
யம்' ஷ்2யாமஸுந்த3ரம் அசிந்த்ய-கு3ண-ஸ்வரூபம்'
கோ3விந்த3ம் ஆதி3-புருஷம்' தம் அஹம்' ப4ஜாமி.
(Bs 5.38)

எனவே, க்ருஷ்ணர் மீது அன்பை வளர்த்துக் கொண்ட ஒருவன், க்ர்தமஸியாகிய சியாம சுந்தரரை எப்போதும் தன் இதயத்தில் காண்கிறான். இதுவே யோகத்தின் பக்குவ நிலையாகும். அவர் சியாம சுந்தரர், உண்மையில் கர்தமஸி என்று நான் பெயரிட்டுள்ளேன். சரி, அடுத்து ? அடுத்தது.

விஷ்ணுஜன: இந்த நிலையிலுள்ள பக்தனின் பார்வையை விட்டு பகவான் விலகுவதில்லை, பக்தனும் அவரது தரிசனத்தை இழப்பதில்லை. இறைவனை இதயத்தினுள் பரமாத்மாவாக காணும் யோகியின் விஷயத்திலும் இதுவே உண்மை. தூய பக்தனாக மாறக்கூடிய இத்தகு யோகி, தனக்குள் இறைவனை காணாமல் ஒரு கணமும் வாழமுடியாதவனாக ஆகிவிடுகிறான்.

பிரபுபாதா : அவ்வளவு தான். இதுவே கடவுளைக் காணும் முறை.(சிரிப்பு) இல்லையென்றால், கடவுள் ஒன்றும் எனக்கு பணியாள் அல்ல, " தயவு செய்து என்னை வந்து பாருங்கள்." எல்லா இடத்திலும், ஒவ்வொரு கணமும், எவ்வாறு கடவுளை காண்பது என்பதற்காண தகுதியை நீங்கள் அடைய வேண்டும். அந்த தகுதியை அடைவது சுலபமானதே. அது மிகவும் கடினமானது அல்ல. விஷ்னுஜன : பரமாத்மாவின் தொண்டில் ஈடுபடும் அத்தகு யோகி, நானும் பரமாத்மாவும் ஒருவரே என்பதை அறிந்து, எல்லா சூழ்நிலைகளிலும் எப்போதும் என்னில் நிலைக்கிறான் என்பது அவருக்கு தெரியும்.

பிரபுபாதா: ஹ்ம்ம், பொருளுரையைப் படியுங்கள்.

விஷ்ணுஜன: பொருளுரை : பரமாத்மாவின் மீது தியானம் செய்யப் பழகும் யோகி, தனக்குள் கிருஷ்ணரது விரிவங்கமான விஷ்ணுவை நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்திய உருவில் காண்கிறான்.

பிரபுபாதா: இந்தப் படம், விஷ்ணுவின் படம். இவரே யோகிகளுடைய தியானத்திற்குறிய கருப்பொருள். இதுவே உண்மையான யோகம். இந்த விஷ்ணு, கிருஷ்ணருடைய விரிவங்கம். பிரம்ம சம்ஹிதையில் கூறப்படுவது என்னவென்றால்,

ய: காரணார்ணவ-ஜலே ப4ஜதி ஸ்ம யோக3-
நித்3ராம் அனந்த-ஜக3த்3-அண்ட3-ஸரோம-கூப:
விஷ்ணுர் மஹான் ஸ இஹ யஸ்ய கலா-விஷே2ஷோ
கோ3விந்த3ம் ஆதி3-புருஷம்' தம் அஹம்' ப4ஜாமி
(பி.ச 5.47)

ஆதி புருஷரான கோவிந்தனை நான் வணங்குகிறேன்." கோ3விந்த3ம் ஆதி3-புருஷம். புருஷம் என்றால், இறைவன் ஆண், ஆதி என்றால் தொடக்கம். கோ3விந்த3ம் ஆதி3-புருஷம்' தம் அஹம்' ப4ஜாமி. யார் அந்த கோவிந்தன்? யாருடைய ஒரே விரிவங்கமாக மஹாவிஷ்ணு இருக்கிறாரோ, அவர். மேலும், அந்த மஹாவிஷ்ணுவின் செயல்பாடு என்ன? யஸ்யைக-னிஷ்2வஸித-காலம் அதா2வலம்ப்3ய ஜீவந்தி லோம-விலஜா ஜக3த்3-அண்ட3-நாதா:2 (பி.ச 5.48) ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் , பிரம்மா என்று அழைக்கப்படக்கூடிய பிரதான உயிர்வாழி உள்ளார். ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் மூல நபர் பிரம்மா தான் எனவே பிரம்மாவின் வாழ்க்கை , அதாவது பிரபஞ்சத்தினுடைய வாழ்க்கை மகாவிஷ்ணுவின் ஒரு சுவாச காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். மகாவிஷ்ணு காரணக்கடலில் சயனித்துக் கொண்டிருக்கிறார், அவர் மூச்சுக் காற்றை வெளிவிடும் போது லட்சக்கணக்கான பிரபஞ்சங்கள் நீர்க்குமிழிகள் போல வெளியே வந்து மேலும் வளர்ச்சி பெறுகின்றன. அவர் சுவாசத்தை உள்ளிழுக்கும் போது , லட்சக்கணக்கான பிரபஞ்சங்கள் அவருக்குள் செல்கின்றன. ஆக , இதுதான் பௌதீக உலகத்தின் நிலை. இது மீண்டும் வந்து வந்து போகிறது. பூ4த்வா பூ4த்வா ப்ரலீயதே (ப.கீ8.19) இந்த பௌதீக உலகம், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உருவாக்கப்பட்டு, பின் மீண்டும் அழிக்கப்படுகிறது, என பகவத் கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த படைத்தலும், அழித்தலும் மஹாவிஷ்ணுவின் சுவாசத்தையே நம்பியுள்ளது. அப்படியென்றால், மஹாவிஷ்ணுவின் ஆற்றலை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

ஆனால், இங்கு சொல்லப்படுவது என்னவென்றால், இந்த மஹா விஷ்ணு, யஸ்யைக-னிஷ்2வஸித-காலம் அதா2வலம்ப்3ய ஜீவந்தி லோம-விலஜா ஜக3த்3-அண்ட3-நாதா:2 விஷ்ணுர் மஹான் ஸ இஹ யஸ்ய கலா-விஷே2ஷ: (பி.ச 5.48) இந்த மஹாவிஷ்ணு , கிருஷ்ணருடைய விரிவங்கத்தின் விரிவங்கம் தான். கிருஷ்ணரே ஆதி புருஷர். கோ3விந்த3ம் ஆதி3-புருஷம்' தம் அஹம்' ப4ஜாமி. இந்த மஹாவிஷ்ணுவானவர், மீண்டும் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் கர்போதகசாயி விஷ்ணுவாக நுழைகிறார். மேலும் இந்த கர்போதக விஷ்ணுவிடமிருந்து, க்ஷீரோதக விஷ்ணு வருகிறார். அந்த க்ஷீரோதக விஷ்ணு, ஒவ்வொரு உயிர்வாழியின் இதயத்திற்குள்ளும் நுழைகிறார். இவ்வகையில், படைப்பு முழுவதும், விஷ்ணுவின் சாந்நித்யம் உள்ளது. எனவே, யோகியின் தியானத்திற்கு கருப்பொருளாக விளங்கும் விஷ்ணுவின் உருவம் இங்கே விளக்கப்பட்டுள்ள்து. எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கும் அந்த விஷ்ணு ஈஷ்2வர: ஸர்வ-பூ4தானாம்' ஹ்ரு'த்3-தே3ஷே2 'ர்ஜுன திஷ்ட2தி (ப.கீ 18.61) இந்த மஹாவிஷ்ணு, க்ஷீரோதக விஷ்ணு, எல்லோருடைய இதயத்திலும் அமர்ந்திருப்பதாக பகவத் கீதை கூறுகிறது. எனவே, யோகி, அவர் எங்கே அமர்ந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அங்கே தனது சிந்தனையைச் செலுத்த வேண்டும். இதுவே யோக முறை. அடுத்து இதுவே யோக முறை. அடுத்து

விஷ்ணுஜன : விஷ்ணு கிருஷ்ணரிலிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதை யோகி அறிய வேண்டும்.

பிரபுபாதா : ஆம்.