TA/Prabhupada 0751 – உமது ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள மட்டுமே நீங்கள் ஆகாரத்தை உட்கொள்ளவேண்டும்



Lecture on SB 1.8.37 -- Los Angeles, April 29, 1973

பிரபுபாதா: எல்லோருக்கும் ஏன் இருமல்? சிரமம் என்ன? நேற்று கூட நான் கேட்டேன். சிரமம் என்ன?

பக்தர்: ஒரு ஜலதோஷ தொற்று உள்ளதாக நான் நினைக்கிறேன்.

பிரபுபாதா: என்ன ?

பக்தர்: ஒரு ஜலதோஷ தொற்று இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரபுபாதா: ஆனால் உங்களிடம் போதுமான குளிர்கால ஆடைகள் இல்லை, எனவே நீங்கள் பாதிக்கப்படுகிறீர்களா? நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். யுக்தாஹார-விஹாரஸ்ய யோகோ பவதி சித்தி (ப கீ 6.17) ...பகவத் கீதையில் இது கூறப்படுகிறது, யுக்தாஹார. உங்கள் ஆரோக்கியத்தை நேர்த்தியாக பராமரிக்க நீங்கள் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல், உடலின் பிற தேவைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நோய்வாய்ப்பட்டால், நீங்கள் எப்படி கிருஷ்ண பக்தியில் செயல்பட முடியும்? பிரம்மாநந்தா இன்று செல்ல முடியாதது போல் ஆகிவிடும். நாம் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடக்கூடாது. அதிகமாக சாப்பிடுவதை விட குறைவாக சாப்பிடுவது நல்லது. குறைவாக சாப்பிட்டு நீங்கள் இறக்க மாட்டீர்கள். ஆனால் நீங்கள் அதிகமாக சாப்பிட்டு இறக்கலாம். மக்கள் அதிகமாக சாப்பிடுவதால் இறக்கின்றனர், குறைவான உணவிற்காக அல்ல. இது கொள்கையாக இருக்க வேண்டும். மருத்துவ விஞ்ஞானம் எப்போதும் தடைசெய்கிறது, உங்களுக்குத் தேவையானதை விட அதிகமாக சாப்பிடக்கூடாது என்று. பெருவேட்கையுடன் சாப்பிடுவது நீரிழிவு நோய்க்கான காரணம், மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காசநோய்க்கு காரணம். இது மருத்துவ அறிவியல். எனவே நாம் குறைவாகவோ, தேவைக்கு அதிகமாவோ, உணவை உட்கொள்ளக் கூடாது. குழந்தைகள் விஷயத்தில், அவர்கள் அதிகமாக எடுத்துக்கொள்வதில் தவறு செய்ய முடியும், ஆனால் பெரியவர்கள், இந்த தவறை செய்ய முடியாது, அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. குழந்தைகள், அவர்கள் ஜீரணிக்க முடியும். நாள் முழுவதும் அவர்கள் விளையாடுகிறார்கள்.

எனவே எப்படியிருந்தாலும், நம் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். சனாதன கோஸ்வாமி, அவர் நமைச்சலால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், சைதன்யா மகாபிரபு அவரைத் தழுவிக்கொண்டிருந்தார். எனவே, நமைச்சல்கள் ஈரமான நமைச்சல்களாக இருந்தன. ஈரமான மற்றும் உலர்ந்த இரண்டு வகையான நமைச்சல்கள் உள்ளன. சில நேரங்களில் அரிப்பு இடம் வறண்டு, சில நேரங்களில் ஈரமாக இருக்கும். அரிப்புக்குப் பிறகு, அது ஈரமாகிறது. எனவே சனாதன கோஸ்வாமியின் உடல் அனைத்தும் ஈரமான நமைச்சல்களால் மூடப்பட்டிருந்தது, சைதன்ய மஹாபிரபு அவரைத் தழுவிக்கொண்டிருந்தார். எனவே ஈரப்பதம் சைதன்ய மஹாபிரபுவின் உடலில் ஒட்டிக்கொண்டிருந்தது. எனவே சனாதன கோஸ்வாமி, மிகவும் வெட்கப்பட்டார். "நான் நமைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன், சைதன்யா மஹாபிரபுவைத் தழுவிக்கொண்டேன், ஈரமான விஷயம் உடலின் மேல் மணம் வீசுகிறது. நான் எவ்வளவு துரதிர்ஷ்டவசமானவன்". எனவே "சைதன்யா மஹாபிரபுவால் என்னை அரவணைக்க அனுமதிப்பதற்கு பதிலாக நாளை நான் தற்கொலை செய்து கொள்வேன்" என்று அவர் முடிவு செய்தார். எனவே அடுத்த நாள் சைதன்யா மஹாபிரபு "நீங்கள் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளீர்கள். எனவே இந்த உடல் உங்களுடையது என்று நினைக்கிறீர்களா?" எனவே அவர் அமைதியாக இருந்தார். சைதன்யா மஹாபிரபு, "நீங்கள் ஏற்கனவே இந்த உடலை எனக்காக அர்ப்பணித்திருக்கிறீர்கள், அதை நீங்கள் எவ்வாறு கொல்ல முடியும்?" இதேபோல் ... நிச்சயமாக, அன்றிலிருந்து, அவரது நமைச்சல்கள் அனைத்தும் குணமாகியது ... ஆனால் இதுதான் முடிவு, நம் உடல், கிருஷ்ண உணர்வு உள்ளவர்கள், கிருஷ்ணருக்காக உழைப்பவர்கள், உடல் தனக்கு சொந்தமானது என்று அவர்கள் நினைக்கக்கூடாது. இது ஏற்கனவே கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனவே இது எந்த புறக்கணிப்பும் இல்லாமல் மிகவும் கவனமாக வைக்கப்பட வேண்டும். கோயிலை கிருஷ்ணரின் இடம் என்பதால் நீங்கள் கவனித்துக்கொள்வது போல. இதேபோல் ... நாம் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளக்கூடாது, ஆனால் நாம் நோய்வாய்ப்படாமல் இருக்க சில கவனிப்பு எடுக்க வேண்டும்.