TA/Prabhupada 0760 - இந்த அமைப்பில் பாலுறவு தடை செய்யப்படவில்லை - பாசாங்குத்தனம் தடை செய்யப்பட்டுள்ளது



Lecture on SB 6.1.23 -- Honolulu, May 23, 1976

ஆகவே, மனிதனின் கடமை என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல், அவர் வீழ்ந்துவிட்டதால், நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் இறக்கும் காலம் வரை பராமரிப்பதில் நாம் கவலைப்படக்கூடாது. இல்லை. இருபத்தைந்து ஆண்டுகள் வரை. ஒரு பிரம்மச்சாரி பாலியல் வாழ்க்கையிலிருந்து விலகி இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறார். அது பிரம்மச்சாரி, பிரம்மச்சரியம். ஆனால் அவரால் இன்னும் முடியவில்லை என்றால், அவர் க்ரிஹஸ்தா வாழ்க்கையை ஏற்க அனுமதிக்கப்படுகிறார். இதில், எந்த ஏமாற்றமும், பாசாங்குத்தனமும் இல்லை. நான் பிரம்மச்சாரி அல்லது சன்யாசி என்று பறைசாற்றிக்கொண்டு, ரகசியமாக, எல்லா முட்டாள்தனங்களையும் செய்கிறேன் என்றால், அது பாசாங்குத்தனம். பாசாங்குத்தனமான வாழ்க்கை ஆன்மீக வாழ்க்கையில் ஒருவரை முன்னேறச் செய்யாது. ஸ்ரீ சைதன்யா மகாபிரபு அளித்த உதாரணம் அது. உங்களுக்குத் தெரிந்த அவரது தனிப்பட்ட தொண்டர், சோட்டா ஹரிதாசா, ஜூனியர் ஹரிதாசா பற்றியது. அவர் மிகவும் நல்ல பாடகர், எனவே அவர் சைதன்யா மகாபிரபுவின் சபையில் பாடிக்கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் சிக்கி மஹிதியின் சகோதரியிடம் கொஞ்சம் அரிசி பிச்சை எடுக்கச் சென்றார், அங்கே ஒரு இளம் பெண் இருந்தாள், அவன் அங்கே காம உணர்ச்சியில் பார்த்தான். அது சில நேரங்களில் இயற்கையானது. ஆனால் சைதன்யா மஹாபிரபு அதைப் புரிந்து கொண்டார். அவர் சாப்பிடும்போது, ​​"இந்த அரிசியை யார் கொண்டு வந்தார்கள்?" என்று வினவினார். "சோட்டா ஹரிதாசா." "எனவே என்னை இனி பார்க்க வேண்டாம் என்று அவரிடம் கேட்டு கொள்ளுங்கள். அவ்வளவு தான்." எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்: "என்ன நடந்தது?" பின்னர் விசாரணையில் அவர் ஒரு இளம் பெண்ணை காம உணர்ச்சியோடு பார்த்தது தெரிந்தது. எனவே தான் ... சைதன்யா மகாபிரபு மிகவும் கண்டிப்பானவர், அவர் தனது தொண்டர்களிடமிருந்து அவரை நிராகரித்தார். பிற பெரிய, பெரிய பக்தர்கள் அவரிடம் "அவர் ஏதோ தவறு செய்துள்ளார், தயவுசெய்து அவரை மன்னிக்கவும். அவர் உங்கள் வேலைக்காரன்" என்று கேட்டுக்கொண்டார்கள். எனவே சைதன்யா மகாபிரபு, "சரி, பிறகு நீங்கள் அவரை மீண்டும் அழைத்து வாருங்கள். நீங்கள் அவருடன் வாழுங்கள். நான் இந்த இடத்தை விட்டு வெளியேறுகிறேன், நான் இந்த இடத்தை விட்டு வெளியேறுகிறேன்" என்றார். அவர்கள், "இல்லை, ஐயா, நாங்கள் இனி இந்த கேள்வியை எழுப்ப மாட்டோம்" என்று கூறினார்கள்.

எனவே இந்த சோட்டா ஹரிதாசா மீண்டும் சைதன்ய மஹாபிரபுவின் சபைக்குள் செல்ல இயலாது என்று கண்டபோது, ​​அவர் நம்பிக்கையற்றவராக இருந்தார். பின்னர் அவர் திரிவேனிக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டார். எனவே சைதன்யா மகாபிரபுவுக்கு எல்லாம் தெரியும். பின்னர், சில காலம் கழித்து, "சோட்டா ஹரிதாசா பற்றி தகவல் ஏதாவது உண்டா?" யாரோ சொன்னார்கள், "ஐயா, நீங்கள் அவரை நிராகரித்தீர்கள். ஏமாற்றத்தால், அவர் தற்கொலை செய்து கொண்டார் ..." "ஓ, அது நல்லது." எவ்வளவு கண்டிப்பாகப் இருந்தார் பாருங்கள். "அது நல்லது." அவர் ஒருபோதும், எந்த அனுதாபத்தையும் வெளிப்படுத்தவில்லை: "ஓ, நான் இந்த நபரை நிராகரித்தேன், அவர் தற்கொலை செய்து கொண்டார்? ஓ." இல்லை, அவர், "ஓ, அது நல்லது. அவ்வளவுதான்." அப்படிச் சொன்னார். இது ஒரு சம்பவம்.

இன்னொரு விஷயம்: அவரது உயர்ந்த பக்தர்களில் ஒருவரான சிவானந்தா, ரத - யாத்ராவை காண சைதன்ய மஹாபிரபுவிடம் வருகை தந்த அனைத்து பக்தர்களையும் கவனித்துக்கொண்டிருந்தார். எனவே அவரது மனைவி வந்து சைதன்யா மகாபிரபுவிற்கு வணக்கங்களை வழங்கினார், மனைவி கர்ப்பமாக இருப்பதைக் கண்டார். எனவே உடனடியாக, "சிவானந்தா, உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா?" "ஆம்". "சரி, அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, ​​நீ அவனது பெயரை இவ்வாறு வைப்பாயாக." என்றார். இப்போது பாருங்கள். ஒரு மனிதன், ஒரு இளம் பெண்ணிடம் காம ஆசையுடன் பார்த்தான்: அவன் நிராகரிக்கப்பட்டான். ஒரு மனிதன் தன் மனைவியை கர்ப்பமாக இருக்கிறார்; அவர், அவரை வணங்கினார்: "அது சரி." எனவே இந்த இயக்கத்தில் பாலுணர்வு தடை செய்யப்படவில்லை, ஆனால் பாசாங்குத்தனம் தடைசெய்யப்பட்டுள்ளது. நீங்கள் நயவஞ்சகர்களாக மாறினால் எங்கும் இல்லை ... அதுதான் சைதன்ய மஹாபிரபுவின் போதனை. சோட்டா ஹரிதாசா, அவர் தன்னை ஒரு பிரம்மச்சாரி என்று காட்டிக் கொண்டார், அவர் ஒரு இளம் பெண்ணை கவனித்து வந்தார். பின்னர் அவர் புரிந்துகொண்டார், "அவர் ஒரு நயவஞ்சகர். அவரை நிராகரிக்கவும்." மற்றும் சிவானந்தா சேனா, அவர் க்ரிஹஸ்தா. க்ரிஹஸ்தாவுக்கு குழந்தைகள் இருக்க வேண்டும். அங்கே என்ன தவறு? அவர், "ஆம், எனது உணவுப்பொருட்களின் எச்சங்கள் கொடுக்கப்பட வேண்டும்" என்றார். இது சைதன்யா மகாபிரபுவின் இயக்கம்.

எனவே எங்கள் வேண்டுகோள் என்னவென்றால், நயவஞ்சகனாக வேண்டாம். நான்கு ஆசிரமங்கள் உள்ளன: பிரம்மச்சாரி, க்ரிஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம். எந்த ஆசிரமம் உங்களுக்கு ஏற்றதோ, நீங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் நேர்மையாக இருக்கவேண்டும். பாசாங்குத்தனமாக இருக்க வேண்டாம். நீங்கள் உடலின்பம் வேண்டும் என்று நினைத்தால், சரி, நீங்கள் திருமணம் செய்துகொண்டு ஒரு பண்புள்ளவரைப் போலவே இருங்கள். நயவஞ்சகனாக இருக்க வேண்டாம். இது சைதன்யா மகாபிரபுவின் இயக்கம். அவர் பாசாங்குத்தனத்தை விரும்பவில்லை. யாரும் விரும்புவதில்லை. ஆனால் கிருஷ்ணா பக்தி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஒரு நபருக்கு, அவருக்கு பாலியல் வாழ்க்கை மற்றும் செல்வ வளமை மிகவும் நல்லதல்ல. அதுதான் சைதன்யா மஹாபிரபுவின் கருத்து. பாரம் பரம் ஜிகமிசோர் பாவா ... நிஸ்கின்சநஸ்ய பஜனன்முகஸ்யா, பாரம் பரம் (சை ச மத்யா 11.8) ... எனவே தானாக முன்வந்து சைதன்ய மகாபிரபு சன்னியாசத்தை ஏற்றுக்கொண்டார். அவர் தனது குடும்ப வாழ்க்கையில் மிக நன்றாக அமைந்திருந்தார். அவர் ஒரு குடும்ப மனிதராக இருந்தபோது, ​​அவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி இறந்தார்; அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். ஆகவே சைதன்யா மகாபிரபு நமக்குக் கற்றுக் கொடுத்தார் ... ஆனால் அவர் சன்யாசம் மேற்கொண்டபோது, ​​அவர் மிகவும், மிகவும் கண்டிப்பானவர். எந்தவொரு பெண்ணும் அவருக்கு மிக அருகில் வர முடியாது தூரத்திலிருந்து தான். இது சைதன்ய மகாபிரபுவின் போதனை.