TA/Prabhupada 0209 - எவ்வாறு வீடுபெரு அடைவது, முழுமுதற் கடவுளை அடைவது

Revision as of 16:03, 29 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0209 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 6.1.16 -- Denver, June 29, 1975

எனவே மனித வாழ்க்கை என்பது சுத்திகரிக்கப்பட வேண்டிய ஒன்று. நாம் அன்றாட உணவைப் பெறுவதற்கு மிகவும் கடுமையாக உழைக்கிறோம் வெறுமனே சோம்பி உட்காருவதால் மக்களுக்கு அன்றாட உணவு கிடைப்பதில்லை. அது சாத்தியம் அல்ல. அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். டென்வர் என்னும் இந்த நல்ல நகரம் இருக்கிறது. அது காட்டிலிருந்தோ பாலைவனத்திலிருந்தோ முளைத்துவிடவில்லை. இவ்வளவு நல்ல முறையில் செய்து, இந்த நகரை நிலை நிறுத்த ஒவ்வொருவரும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. எனவே நாம் உழைக்க வேண்டும். நமக்கு மகிழ்ச்சி வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் கிருஷ்ணர் yānti deva-vratā devān (BG 9.25)) என்கிறார். யாரேனும் இவ்வுலகின் பொருள் எல்லைக்குள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டி ஒரு பெரிய மனிதனாகி, இன்னும் பெரிய அறிவாளனாகி முயன்றால், அவர்கள் இவ்வாழ்வில் சந்தோஷமாக இல்லை, ஆனால் அடுத்த ஜன்மத்தில் மகிழ்ச்சியாக ஆக விரும்புகிறார்கள் என்று அர்த்தம். சில சமயம் அவர்கள் வேறு உயர்ந்த கிரக அமைப்பிற்குச் சென்று விடுகிறார்கள். எனவே yānti deva-vratā devān pitṛn yānti pitṛ-vratāḥ (BG 9.25). எனவே நீங்கள் உழைக்க உழைக்க, நீங்கள் விரும்பிய முடிவைப் பெற முடியும். ஆனால் இறுதி வரியில், கிருஷ்ணர், mad-yājino'pi yānti mām: என்று கூறுகிறார். “நீங்கள் உழைத்தாலோ என்னை வழிபட்டாலோ, என்னை வந்தடைந்துவிடலாம்" பின்னர் கிருஷ்ணரை அடைவதற்கும் இந்த பொருள் உலகிற்குள்ளேயே இருப்பதற்கும் இடையே என்ன வேறுபாடு? வேறுபாடு என்னவென்றால் ābrahma-bhuvanāl lokāḥ punar āvartino 'rjuna (BG 8.16). இந்தப் பொருள் உலகில், நீங்கள் மிக உயர்ந்த லோகமான பிரம்மலோகத்திற்கு போனாலும், அங்கும் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் எல்லாம் இருக்கும். அல்லது நீங்கள் திரும்பி வந்துவிட வேண்டும் இந்த மக்கள் சந்திர கிரகத்திற்குச் சென்று மீண்டும் இங்கே வருவதைப் போல. எனவே இம்மாதிரி சென்றுவிட்டு மீண்டும் இங்குத் திரும்ப வருவது என்பது நன்றாக இல்லை. Yad gatvā na nivartante (BG 15.6). நீங்கள் மீண்டும் இந்த பொருள் உலகிற்கு திரும்பி வராத வண்ணம் ஒரு கிரகத்திற்கு செல்வது தான் கண கச்சிதம். அது தான் கிருஷ்ண லோகம். எனவே கிருஷ்ணர் "நீங்கள் இந்த பொருள் உலகில் மகிழ்ச்சியாக ஆக இருப்பதற்கு எவ்வளவு மிகவும் கடினமாக உழைக்கிறீர்களோ, அதே உழைப்பைக் கொண்டு என்னை, கிருஷ்ணரை, வழிபட்டால், நீங்கள் என்னிடத்தில் வந்தைந்து விடுவீர்கள்" என்று கூறுகிறார். Mad-yājino 'pi yānti mām. இதில் குறிப்பாக என்ன நன்மை இருக்கிறது? Mām upetya kaunteya duḥkhālayam aśāśvatam nāpnuvanti: (BG 8.16) “என்னிடத்தில் வருகிறவன், மீண்டும், இந்த பொருள் உலகத்திற்கு வரத் தேவையில்லை". ஆக, நம் கிருஷ்ண பக்தி இயக்கம் மீண்டும் நம் வீட்டை அடைய, தெய்வங்களின் தலையாய கிருஷ்ணரை அடைவதற்கு கற்றுத் தருகிறது. அது மக்களை என்றென்றும் மகிழ்ச்சியாக்கும். எனவே இந்த ஜன்மத்திலும், கிருஷ்ண பக்தர்கள், மகிழ்ச்சியற்று இருப்பதில்லை. அதைக் கண்கூடாக நீங்களே காணலாம். நாம் ஒரு மிக நல்ல அறையில் உட்கார்ந்து ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்துப் பிரசாதத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் துயரம் எங்கே? துயரமே இல்லை. மற்றும் பிற செயல்களோ, அவற்றிக்குப் பல மகிழ்ச்சியற்ற செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். இங்கே, கிருஷ்ணர் பக்தி தான் உள்ளது, துயரம் என்று ஒன்றும் இல்லை அது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது: susukham kartum avyayam (BG 9.2). சுசுகம். நீங்கள் பக்தியின் சேவையில் ஈடுபடும் போது, அது சுகம் மட்டுமல்ல --சுகம் என்றால் மகிழ்ச்சி-- அதில் இன்னொரு பதமும் சேர்க்கப்பட்டுள்ளது, சுசுகம், “மிகவும் சுகமானது, மிகவும் மகிழ்ச்சியானது". Kartum, பக்தியின் சேவையைப் புரிவது, பெரும் சந்தோஷம், பேரின்பம். மற்றும் avyayam. Avyayam என்றால், நீங்கள் என்ன செய்தாலும் அது தான் உங்கள் நிரந்தர சொத்து என்று அர்த்தம். மற்ற விஷயங்கள், முடியக் கூடியவை. நீங்கள் மிகவும் உயரிய கல்வியறிவு பெற்றவர் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் எம்.ஏ., பி.எச்டி, என்று பலதில் தேறியிருக்கலாம். ஆனால் அது avyayam கிடையாது; அது vyayam.Vyayam என்றால் அழிந்து போகக் கூடியது என்று பொருள். உங்கள் உடல் அழிந்தால், உங்கள் பட்டங்கள் என்று வழங்கப்பட்டவையும் அழிந்துவிடும். பின்னர் மீண்டும் அடுத்த ஜன்மத்தில், நீங்கள் மனிதப் பிறவி எடுத்தால் எம்.ஏ., பிஎச்டி, ஆகும் வாய்ப்பு இருக்கிறது ஆனால் முதலில் இந்த ஜன்மத்தில் பெற்ற எம்.ஏ., பிஎச்.டி அது அழிந்துவிடும். ஆக நாம் இங்குப் பெறுவதெல்லாம் avyayam இல்லை. Vyayam என்றால் செலவு என்று அர்த்தம், a என்றால் “இல்லை”, செலவு இல்லை. உங்களிடம் கொஞ்சம் பணம் இருந்தால், நீங்கள் அதைச் செலவு செய்தவுடன், அது வியயம், சிறிது நேரத்தில் தீர்ந்துவிடுகிறது. Avyayam என்றால் நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும், அது தீரவே தீராது. அது avyayam. எனவே கிருஷ்ண பக்தி சேவை susukhaṁ kartum avyayam என்று விளக்கப்படுகிறது. நீங்கள் என்ன செய்தாலும், ஒரு பத்து சதவீத வெற்றி அடைந்து விட்டீர்கள் என்றால் அந்தப் பத்து சதவீதம் உங்களுக்கு நிரந்தம். எனவே அது பகவத் கீதையில் śucīnāṁ śrīmatāṁ gehe யோகா-bhraṣṭosanjāyate (BG 6.41) என்று கூறப்பட்டுள்ளது இந்த ஜன்மத்தில் பக்தி யோகத்தை முடிக்க முடியாதவர்களுக்கு மனிதப் பிறவியின் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். மனிதப் பிறவி மட்டுமல்ல, அவர்கள் சுவர்க்க லோகத்திற்குச் சென்று, அங்கு அனுபவித்து, பின்னர் மீண்டும் இந்தக் கிரகத்திற்கு வருகிறார்கள். அதுவும் சாதாரண மனிதனாக இல்லை. Śucīnāṁ śrīmatāṁ gehe: அவர்கள் மிகவும் பரிசுத்தமான குடும்பத்தில் பிறக்கிறார்கள், பிராமணர், வைஷ்ணவர்களைப் போலவே, śucīnām, śrīmatām மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறக்கிறார்கள். பின்னர் அது அவரது கடமையாகிறது. பணக்காரராகப் பிறந்தவர்கள்... அமெரிக்கர்களான நீங்கள் பணக்காரர்களாகப் பிறந்திருக்க வேண்டும். உண்மையில் அப்படித்தான். எனவே நீங்கள், இந்தக் கால வரையறையில் " நம் முந்தைய பக்தி சேவையின் காரணமாக, கிருஷ்ணரின் அருளால் நாம் இந்த நாட்டில் பிறந்திருக்கிறோம். இங்கு வறுமை இல்லை" என்று எண்ண வேண்டும். śrīmatām. எனவே நீங்கள் கிருஷ்ண பக்தியை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நீங்கள் வறுமையில் வாடவில்லை. "எங்கே உணவு? எங்கே உணவு? எங்கே உணவு?" என்று உங்கள் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. வறுமையில் வாடும் பிற நாடுகளைப் போல், அவர்கள் உணவைத் தேடும் தர்மசங்கடத்தில் இருக்கின்றனர். ஆனால் நீங்கள் அதிர்ஷ்ட்டசாலிகள், எனவே ஹிப்பிகாவதன் மூலம் இந்த வாய்ப்பை வீணடிக்க வேண்டாம். வீணடிக்க வேண்டாம். பக்தராகிவிடுங்கள், கிருஷ்ணரின் பக்தராக. கிருஷ்ண பக்த இயக்கம் இருக்கிறது. எங்களுக்குப் பல மையங்கள் உள்ளன. இந்தக் கிருஷ்ணர் பக்தி என்னும் விஞ்ஞானத்தை மற்றும் கற்றிடுங்கள். உங்கள் வாழ்க்கையைக் கச்சிதமாக்கிவிடுங்கள் இது எங்கள் கோரிக்கை. மிக்க நன்றி.