TA/Prabhupada 0541 - நீங்கள் என்மீது அன்புகாட்டினால், என் நாயின்மீதும் அன்பு காட்டுங்கள்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0541 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0540 - A Person Being Worshiped as Most Exalted Personality is Something Revolution|0540|Prabhupada 0542 - What is that Qualification of the Guru? How Everyone can Become Guru?|0542}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0540 - ஒரு மனிதன் மிக உன்னதமான நபராக வழிப்படப்பட்டால், அது ஒரு புரட்சியாகும்|0540|TA/Prabhupada 0542 - குருவின் தகுதி என்ன? அனைவரும் குருவாவது எப்படி?|0542}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:24, 22 August 2021



Sri Vyasa-puja -- Hyderabad, August 19, 1976

கடவுளின் வார்த்தைகளை நீங்கள் விளக்க முடியாது. அது சாத்தியமில்லை. தர்மம் என்றால், தர்மாம் து சாஃஷாத் பகவத் பிரணீதம் (SB 6.3.19). உங்கள் வீட்டில் ஒரு வகையான மத முறையை தயாரிக்க முடியாது. அது மோசமானது, பயனற்றது. தர்மம் என்றால். சாஃஷாத் பகவத் பிரணீதம். சட்டம் போல. சட்டம் என்பது அரசாங்கத்தால் அமைக்கப்படுவது. சட்டத்தை வீட்டில் தயாரிக்க முடியாது. தெருவில் வலது புறம் செல், இடது புறம் செல் என்று அரசாங்கச் சட்டம் உள்ளது என்று வைத்துக்கொள்வோம் "வலது பக்கம் சென்றால் என்ன, இடது பக்கம் சென்றால் என்ன?" என்று சொல்ல முடியாது என்பது பொதுஅறிவு.. இல்லை, உங்களால் முடியாது. நீங்கள் குற்றவாளியாக கருதப்படுவீர்கள். இதேபோல் இப்போதெல்லாம் ... இப்போதெல்லாம் இல்லை - பழங்காலத்தில் இருந்து, பல மத அமைப்புகள் உள்ளன. நிறைய. ஆனால் உண்மையான மத அமைப்பு என்பது கடவுள் சொல்வது அல்லது கிருஷ்ணர் சொல்வதுதான். சர்வ தர்மான் பரிதியஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ (BG 18.66). இது மதம். எளிமையானது. நீங்கள் மதத்தை உருவாக்க முடியாது.

எனவே ஸ்ரீமத்-பாகவதத்தின், ஆரம்பத்தில், தர்மஹ் பிரோஜ்ஜ்ஹித கைதவோ அத்ர பரமோ நிர்மட்சரானாம் (SB 1.1.2). எனவே ... யாரோ பொறாமைப்படலாம், இந்த நபர் சில சீடர்களை அதிநவீனப்படுத்தியுள்ளார். அவர்கள் பிரார்த்தனை மற்றும் பூஜை செய்கிறார்கள். இல்லை, அது அமைப்பு. பொறாமைப்பட வேண்டாம் ... ஆசார்யம் மாம் விஜாநீயான் நாவமன்யேத கர்ஹிசித் (BG 13.8-12). ஆசார்ய கடவுளின் பிரதிநிதி. யஸ்ய ப்ரஸாதாத் பகவத் பிரசாதோ. நீங்கள் பிரார்த்தனை செய்தால், ஆச்சார்யருக்கு மரியாதை, கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுளான அவர் மகிழ்ச்சி அடைகிறார். அவரைத் திருப்திப்படுத்த நீங்கள் அவருடைய பிரதிநிதியைப் திருப்திப்படுத்த வேண்டும். "நீங்கள் என்னை நேசித்தால், என் நாயை நேசிக்கவும்." மேலும் பகவத்-கீதையில் ஆச்சார்யோபாசனம் என்று கூறப்படுகிறது. ஆச்சார்யோபாசனம். நாம் ஆச்சார்யரை வணங்க வேண்டும்.

யஸ்ய தேவே பரா பக்திர்
யதா தேவே ததா குரோ
தஸ்யைதே கதித ஹய அர்தஹ்
ப்ரகாஷந்தே மஹாத்மநஹ்
( SU 6.23 )

இதுவே வேத மந்திரம். தத் விஞ்ஞானார்தம் ச குரும் ஏவாபிகச்செத் ( MU 1.2.12).

தஸ்மாத் குரும் ப்ரபதியேத்த
ஜிஜநாஸுஹ ஸ்ரேயா உத்தமம்
ஷபதே பாரே சா நிஷிநாதம்
ப்ராஹ்மனி உபக்ஷமாஸ்ரயம்
(SB 11.3.21)

தத் வித்தி ப்ரணிபாடென பரிப்ரஷ்னேன சேவையா (BG 4.34). எனவே இவை உத்தரவுகள். குரு பரம்பரை அமைப்பின் வழியாக வர வேண்டும். அப்படிப்பட்டவர் நேர்மையானவர். இல்லையெனில் அவர் ஒரு மோசடி. பரம்பரை அமைப்பு வழியாக வர வேண்டும், மற்றும் தத்-விஞ்ஞானத்தை புரிந்து கொள்ள, ஆழ்நிலை அறிவியல், நீங்கள் குருவை அணுக வேண்டும். "நான் வீட்டில் புரிந்து கொள்ள முடியும்" என்று நீங்கள் சொல்ல முடியாது. இல்லை. அதுதான் அனைத்து சாஸ்திரங்களின் உத்தரவு. தஸ்மாத் குரும் ப்ரபத...யாருக்கு குரு வேண்டும்? நீங்கள் நாயை அழகுக்காக வைத்திருப்பது போல- குரு அழகுக்காக அல்ல, நவீன நாகரிகம், இதேபோல் நாம் ஒரு குருவை வைத்திருக்கிறோம். இல்லை, அப்படி இல்லை. யாருக்கு குரு தேவை? தஸ்மாத் குரும் ப்ரபதியேத்த ஜிஜநாஸுஹ ஸ்ரேயா உத்தமம் (SB 11.3.21). ஆத்மாவின் அறிவியலைப் புரிந்துகொள்வதில் உண்மையில் தீவிரமான ஒருவருக்கு. தத் விஞ்ஞானம். ஓம் தத் சத் . அவருக்கு ஒரு குரு தேவை. குரு அழகுக்காக அல்ல.