TA/Prabhupada 0620 - உமது குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்ப நீங்கள் ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ளீர்

Revision as of 07:38, 25 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.7.36-37 -- Vrndavana, September 29, 1976

கிருஷ்ணர் மட்டுமே உங்களை காக்க முடியும் - வேறு யாருமல்ல. இது உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் ப்ரமத்த அல்ல. இது உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் ஒரு மோசடி என்றால், நீங்கள் ப்ரமத்த. கிருஷ்ணர் மட்டுமே. கிருஷ்ணர் உறுதியளிக்கிறார், ஸர்வ-த₄ர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷ₂ரணம் வ்ரஜ (BG 18.66). ஸுஹ்ருத₃ம் ஸர்வ-பூ₄தாநாம் (BG 5.29): "நான் அனைவருக்கும் நண்பன். என்னால் உங்களைக் காக்க முடியும்." அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்₄யோ மோக்ஷயிஷ்யாமி. எனவே நீங்கள் கிருஷ்ணரை தஞ்சமடைய வேண்டும்; இல்லையெனில் நீங்கள் ஒரு ப்ரமத்த, மோசடி, மூடா₄. கிருஷ்ணர் "இதைச் செய்யுங்கள்" என்று ஆலோசனை கூறுகிறார். ஆனால் நாம் மோசடிகள், ப்ரமத்த. நாம் நினைக்கிறோம் "என் மகன் எனக்கு பாதுகாப்பு தருவான், என் மனைவி பாதுகாப்பு கொடுப்பாள், என் நண்பர் எனக்கு பாதுகாப்பு அளிப்பார், எனது அரசாங்கம் பாதுகாப்பு அளிக்கும்." இவை அனைத்தும் முட்டாள்தனம், ப்ரமத்த. இதுவே ப்ரமாத்தவின் பொருள். புரிந்து கொள்ள முயலுங்கள். ப்ரமத்த꞉ தஸ்ய நித₄நம் பஷ்₂யந்ன் அபி (SB 2.1.4)

மற்றொரு ப்ரமத்த என்னவென்றால், புலன் திருப்தி மீது பைத்தியம் பிடித்து அலைபவர்கள். நூநம் ப்ரமத்த꞉ குருதே விகர்ம (SB 5.5.4). மற்றொரு பதம் உள்ளது, நூநம் ப்ரமத்த꞉. ப்ரமத்தவாக இருப்பவர்கள், வாழ்க்கையில் பொறுப்பு இல்லாதவர்கள், சில நேரங்களில் தேவையில்லாமல் திருடி சிலவற்றைச் செய்வது, பல தவறான காரியங்கள் - விகர்மா. ஏன்? ப்ரமத்த, அவரும் பைத்தியம் பிடித்தவர். நூநம் ப்ரமத்த꞉ குருதே விகர்ம (SB 5.5.4). அவர் ஏன் தண்டிக்கப்படும் அபாயத்தை சந்திக்கிறார்? ஒருவர் திருடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தண்டிக்கப்படுவார். அரச சட்டங்களாலோ, இயற்கையின் சட்டங்களாலோ, கடவுளாலோ அவர் தண்டிக்கப்படுவார். அவர் அரச சட்டங்களிலிருந்து தப்பிக்க முடியும், ஆனால் அவர் இயற்கையின் சட்டங்களிலிருந்து அல்லது கடவுளிடமிருந்து தப்ப முடியாது. ப்ரக்ருதே꞉ க்ரியமாணாநி கு₃ணை꞉ கர்மாணி (BG 3.27). அது சாத்தியமில்லை. இயற்கையின் விதிகளைப் போலவே: நீங்கள் ஏதேனும் நோயைத் தொற்றிக் கொண்டால், நீங்கள் தண்டிக்கப்பட நேரிடும். நீங்கள் அந்த நோயால் துன்பப்படுவீர்கள். அதுவே தண்டனை. நீங்கள் தப்ப முடியாது. இதேபோல், நீங்கள் செய்யும் எதையும், காரணம் கு₃ண-ஸங்கோ₃ (அ)ஸ்ய (BG 13.22). நீங்கள் ஒரு பூனை, நாயைப் போல வாழ்ந்தால், அது தொற்று, குண, அறியாமையின் குணம். உங்கள் அடுத்த ஜன்மத்தில் ஒரு நாயாக ஆவீர்கள். நீங்கள் தண்டிக்கப்பட நேரிடும். இதுவே இயற்கையின் விதி.

இந்தச் சட்டங்களையெல்லாம் அறியாத ஒருவர், பல பாவச் செயல்களைச் செய்கிறார், விகர்மா. கர்மா, விகர்மா, அகர்மா. கர்மா என்றால் பரிந்துரைக்கப்பட்டவை. குண-கர்ம. கு₃ண-கர்ம-விபா₄க₃ஷ₂꞉ (BG 4.13). கர்மா என்றால், சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி, நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகை இயற்கை குணத்தை உருவாக்கியுள்ளதால், உங்கள் கர்மா அதன்படி உள்ளது: ப்₃ராஹ்மண-கர்ம, க்ஷத்ரிய-கர்ம, வைஷ்₂ய-கர்ம. எனவே நீங்கள் பின்பற்றினால் ... நியமிப்பது, ஆன்மீக குரு மற்றும் சாஸ்திரத்தின் கடமை, அவர் பிரம்மச்சாரியராக இருக்கும்போது, ​​"நீங்கள் இப்படி வேலை செய்யுங்கள்." "நீங்கள் ஒரு பிராமணர் போல வேலை செய்யுங்கள்," நீங்கள் ஒரு சத்திரியரைப் போல வேலை செய்யுங்கள், " " நீங்கள் ஒரு வைசியரைப் போல வேலை செய்யுங்கள்", மற்றவர்கள், "சூத்திரர்." எனவே இந்த பிரிவு ஆன்மீக குருவால் ஏற்படுத்தப்படுகிறது. எப்படி? யஸ்ய யல் லக்ஷணம் ப்ரோக்தம் வர்ணாபி₄வ்யஞ்ஜகம் (SB 7.11.35). ஆன்மீக குரு "நீங்கள் இப்படி வேலை செய்யுங்கள்" என்று கூறுவார். எனவே அது தீர்மானிக்கப்பட வேண்டும். அது கர்மா, குண-கர்மா. ஆன்மீக குரு ஒருவருக்கு இந்த குணங்கள் இருப்பதைக் காண்கிறார். அது இயற்கையானது. பள்ளி, கல்லூரி போன்றவற்றைப் போலவே, ஒருசிலர் விஞ்ஞானியாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள், ஒருசிலர் ஒரு பொறியாளராக, ஒரு மருத்துவராக, ஒரு வழக்கறிஞராக பயிற்சி பெறுகிறார்கள். மாணவரின் நாட்டம், நடைமுறை உளவியலின் படி, "நீங்கள் இந்த பாதையை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று அறிவுரை கூறப்படுகிறார். இதேபோல், சமூகத்தின் இந்நான்கு பிரிவுகளும், மிகவும் விஞ்ஞான பூர்வமானது. எனவே குருவின் அறிவுரையால், குருகுலத்தில் இருக்கும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட வகை கடமையைக் குறிப்பிடுவர், அவர் அதை உண்மையுடன் செய்தால்... ஸ்வ-கர்மணா தம் அப்₄யர்ச்ய (BG 18.46). உண்மையான நோக்கம் கிருஷ்ண உணர்வு. அவரது குணம் மற்றும் கர்மத்தின் படி ஒரு குறிப்பிட்ட தொழில் கடமையில் ஈடுபட்டுள்ளார்.

கிருஷ்ணரின் திருப்திக்காக வழங்கப்பட்ட எதுவும் மோசமானது இல்லை. அத꞉ பும்பி₄ர் த்₃விஜ-ஷ்₂ரேஷ்டா₂ வர்ணாஷ்₂ரம-விபா₄க₃ஷ₂꞉ (SB 1.2.13). வர்ணாஷ்₂ரம-விபா₄க₃ இருக்க வேண்டும். ஆனால் வர்ணாசிரமத்தின் நோக்கம் என்ன? வெறுமனே ஒரு பிராமணனாக மாறுவதன் மூலம் அவர் வெற்றி பெறுகிறாரா? இல்லை. கிருஷ்ணரை திருப்திப்படுத்தாமல் யாரும் வெற்றிபெற முடியாது. அதுவே உண்மையான வெற்றி.