TA/Prabhupada 0624 - கடவுள் நிரந்தரமானவர் - நாமும் நிரந்தரமானவர்கள்

Revision as of 07:56, 31 May 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.13 -- Pittsburgh, September 8, 1972

எனவே இந்த அறிவை நாம் அதிகாரத்திலிருந்து பெற வேண்டும். இங்கே கிருஷ்ணர் பேசுகிறார். அவர் அதிகாரியாவார். நாம் முழுமுதற் கடவுள் கிருஷ்ணரை: ஏற்றுக் கொள்கிறோம். அவரது அறிவு பூரணத்துவமானது. அவருக்கு கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் தெரியும். எனவே, அவர் அர்ஜுனனுக்கு கற்பிக்கிறார், "என் அன்பான அர்ஜுனா, இந்த உடலுக்குள் இருக்கும் ஆன்மா நித்தியமானது." அது ஒரு உண்மை. என்னால் புரிந்து கொள்ள முடிவது போல, நான் கடந்த காலத்தில் இருந்தேன், நான் தற்போது இருக்கிறேன், எனவே நான் எதிர்காலத்தில் இருக்க வேண்டும். இவை காலத்தின், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்று கட்டங்கள். இந்த பகவத்-கீதையில், வேறொரு இடத்தில் படித்தோம். - ந ஜாயதே நா மிரியதே வா கதாசித் உயிரினம் ஒருபோதும் பிறக்கவில்லை; அது இறக்கவில்லை ந ஜாயதே என்றால் அவர் ஒருபோதும் பிறப்பதில்லை. ந ஜாயதே ந மிரியதே, அது ஒருபோதும் இறக்காது. நித்யம் சாஸ்வதோ 'யாம், ந ஹன்யதே ஹன்யமானே சரீரே (பா.கீ 2.20) இது நித்தியமான, சாஸ்வத, என்றென்றும் உள்ளது. ந ஹன்யதே ஹன்யமனே சரீரே (பா.கீ 2.20) இந்த உடலை நிர்மூலமாக்குவதன் மூலம், ஆன்மா இறக்கவில்லை. இது உபநிடதங்களிலும், வேதங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ஏகோ பஹுனாம் விடதாதி காமான் கடவுளும் நித்தியமானவர், நாமும் நித்தியமானவர்கள். நாம் கடவுளின் அங்க உறுப்புக்கள். தங்கம் மற்றும் தங்கத்தின் துண்டுகள் போல; அவை இரண்டுமே தங்கம். நான் ஒரு துண்டு, தங்கத்தின் துகள் அல்லது ஆவி என்றாலும், நான் ஆவி தான். ஆகவே, கடவுளும் நாமும் வாழும் உயிரினங்கள், நாம் நித்தியமானவர்கள் என்ற தகவலைப் பெறுகிறோம். நித்யோ நித்யானாம் நித்யா என்றால் நித்தியம் என்று பொருள். இங்கு இரண்டு வார்த்தைகள் உள்ளன. ஒன்று ஒருமை எண், நித்யா, நித்தியம், மற்றொன்று பன்மை எண், நித்யானாம். எனவே நாம் பன்மை எண். நித்தியங்கள். வாழும் நிறுவனங்களின் எண்ணிக்கை என்ன என்பது நமக்கு தெரியாது. அவை அசங்க்யா என்று விவரிக்கப்படுகின்றன. அசங்க்யா என்றால் எண்ணிக்கையில் அடங்காத. பல நூறு கோடிகணக்கான. இந்த ஒற்றை எண் மற்றும் பன்மை எண்ணுக்கு என்ன வித்தியாசம்? பன்மை எண் ஒற்றை எண்ணைப் பொறுத்தது. ஏகோ பஹுனாம் விடதாத்தி காமான். நித்திய ஒற்றை எண் இதை கொடுக்கிறது வாழ்க்கையின் அனைத்து தேவைகளும் பன்மை எண்ணுக்கு, வாழும் உயிரினங்களாகிய நமக்கு. அது ஒரு உண்மை, நம் அறிவினால் இதை ஆராயலாம். 8,400,000 வெவ்வேறு வடிவங்களுள், நாகரிக மனிதர்களாகிய நாம் மிகக் குறைவு. ஆனால் மற்றவைகள், அவர்களின் எண்ணிக்கை மிகவும் பெரியது. தண்ணீரில் இருப்பது போல. ஜலஜா நவ-லக்ஷானி. தண்ணீருக்குள் 900,000 வகை உயிரினங்கள் உள்ளன. ஸ்தாவரா லக்ஷ-விம்சதி - காய்கறி வகைகள், தாவரங்கள் மற்றும் மரங்களில் 2,000,000 வெவ்வேறு வகையான வாழ்க்கை வடிவங்கள். ஜலஜா நவ-லக்ஷானி ஸ்தாவரா லக்ஷ-விம்சதி, க்ரமயோ ருத்ரா-சாங்கியயா மற்றும் பூச்சிகள், அவை 1,100,000 வெவ்வேறு வகையான வடிவங்கள். க்ரமயோ ருத்ரா-சாங்கியயா பக்ஷிணாம் தசா-லக்ஷணம் மற்றும் பறவைகள், அவை 1,000,000 வகையான வடிவங்கள். பின்னர் மிருகங்கள், பசவஸ் த்ரிம்சா- லக்ஷனி 3,000,000 வகையான நான்கு கால் விலங்குகள். மற்றும் சதுர்-லக்ஷானி மானுஷ மற்றும் மனிதனின் வடிவங்கள் 400,000 ஆகும். அவர்களில், பெரும்பாலோர் நாகரிகமற்றவர்கள்.