TA/Prabhupada 0781 -யோகத்தின் பூரணத்துவம் யாதெனில், கிருஷ்ணரின் மலரடியில் மனதை நிறுத்துவதேயாகும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0781 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0780 - We Can Get a Glimpse of Knowledge of the Absolute Truth|0780|Prabhupada 0782 - Do Not Give Up Chanting. Then Krsna Will Protect You|0782}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0780 - பரம உண்மையின் அறிவுகுறித்த ஓர் பார்வையை நாம் பெற இயலும்|0780|TA/Prabhupada 0782 - ஜெபிப்பதை கைவிடாதிருந்தால், கிருஷ்ணர் பாதுகாப்பு அளிப்பார்|0782}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:26, 19 July 2021



Lecture on SB 6.1.21 -- Chicago, July 5, 1975

அந்த தகுதி வாய்ந்த ப்ராஹ்மண என்றால் என்ன? நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறீர்கள்: ஷமோ தம: ஸத்யம் ஷௌசம் ஆர்ஜவம் திதிக்ஷா, ஜ்ஞானம் விஜ்ஞானம் ஆஸ்திக்யம் ப்ரஹ்ம-கர்ம ஸ்வபாவ-ஜம் (ப.கீ 18.42). இந்த குணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். முதலில், ஷம. ஷம என்பது மன நிலையில் சமநிலை என்று பொருள். மனம் ஒருபோதும் தொந்தரவு செய்யாது. மனம் தொந்தரவு செய்ய பல காரணங்கள் உள்ளன. மனம் கலங்காதபோது, ​​அது ஷம என்று அழைக்கப்படுகிறது. குருணாபி து:கேன ந விசால்யதே. அது யோகாவின் பூரணத்துவம்.

யம் லப்த்வா சாபரம் லாபம்
மன்யதே நாதிகம் தத:
யஸ்மின் ஸ்திதே குருணாபி
து:கேன ந விசால்யதே
(ப.கீ 6.22)

இது பயிற்சி. மனம் மிகவும் அலை பாய்வது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட, அர்ஜுனனுக்கு கிருஷ்ணரால் அறிவுறுத்தப்பட்டபோது, "உன் அமைதியற்ற மனதை நீ உறுதிப்படுத்திக் கொள்," அவர் வெளிப்படையாக கூறினார், "கிருஷ்ணா, அது சாத்தியமில்லை." சஞ்சலம் ஹி மன: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம் (ப.கீ 6.34): "என் மனம் எப்போதுமே மிகவும் கிளர்ச்சியடைவதை நான் காண்கிறேன், மனதைக் கட்டுப்படுத்துவது என்பது காற்றைத் தடுக்கும் முயற்சி தான். எனவே அது சாத்தியமில்லை." ஆனால் உண்மையில் அவரது மனம் கிருஷ்ணரிடம் நிலைநிறுத்த செய்யப்பட்டது. ஆகவே, கிருஷ்ணரின் தாமரை பாதத்தில் மனதை நிலைநிறுத்தப்பட்டவர்கள், மனம் வென்றிருக்கிறார்கள். அவர்களின் மனம் நிலையானது. அது விரும்பப்படுகிறது. ஸ வை மன: க்ருஷ்ண-பதாரவிந்தயோர் வசாம்ஸி வைகுண்ட-குணானுவர்ணனே (ஸ்ரீ.பா 9.4.18). இவை மஹாராஜா அம்பரீஷரின் தகுதிகள். அவர் மிகவும் பொறுப்பான பேரரசராக இருந்தார், ஆனால் அவரது மனம் கிருஷ்ணரின் தாமரை பாதத்தில் உறுதி கொண்டிருந்தது. அது விரும்பப்படுகிறது.

எனவே இது பிராமண தகுதி, கிருஷ்ணரின் தாமரை பாதத்தில் மனதை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதைப் பயிற்சி செய்ய, அதுதான் யோகாவின் பூரணத்துவம். யோகா என்றால் ... சில மந்திர வெற்றிகளைக் காட்டக்கூடாது. இல்லை. யோகாவின் உண்மையான முழுமை என்பது கிருஷ்ணரின் தாமரை பாதத்தில் மனதை உறுதி கொள்வதாகும். ஆகையால், இந்த யோகா அத்தியாயத்தின் ஆறாவது அத்தியாயத்தின் கடைசி முடிவில் பகவத்-கீதையில் காணலாம்,

யோகினாம் அபி ஸர்வேஷாம்
மத்-கதேனாந்தர்-ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம்
ஸ மே யுக்ததமோ மத:
(ப.கீ 6.47)

இது அர்ஜுனனுக்கு ஊக்கமளித்தது, ஏனென்றால் "நான் பயனற்றவன், என்னால் சரிசெய்ய முடியாது" என்று அர்ஜுனன் நினைத்தான். ஆனால் அவரது மனம் ஏற்கனவே சரி செய்யப்பட்டது. எனவே கிருஷ்ணர் அவரை ஊக்குவித்தார், "சோர்வடைய வேண்டாம். யாருடைய மனம் ஏற்கனவே என்னிடத்தில் எப்போதும் நிலைத்திருக்கிறதோ, அவர் முதல் வகுப்பு, மிக உயர்ந்த யோகி." எனவே நாம் எப்போதும் கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்க வேண்டும். அது ஹரே கிருஷ்ணா மந்திரம். நீங்கள் ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா என்று கோஷமிட்டால், உங்கள் மனம் கிருஷ்ணரிடம் நிலையானது என்று அர்த்தம். அதுதான் யோகாவின் முழுமை. எனவே ஒரு பிராஹ்மணராக மாற, இது முதல் தகுதி: மனதை நிலைநிறுத்த, கிளர்ச்சியடையாமல், ஷம. உங்கள் மனம் சரி செய்யப்படும்போது, ​​உங்கள் புலன்கள் கட்டுப்படுத்தப்படும். உங்கள் மனதை நீங்கள் சரிசெய்தால், "நான் வெறுமனே ஹரே கிருஷ்ணா என்று நாம சங்கீர்த்தனம் செய்வேன்…. மேலும் பிரசாதம் எடுத்துக் கொள்வேன், வேறொரு விஷயம் இல்லை," புலன்கள் தானாகவே கட்டுப்படுத்தப்படும். தா'ர மத்யே ஜிஹ்வா அதி, லோபமோய் ஸுதுர்மதி.