TA/Prabhupada 0878 - இந்தியாவில் வேத நாகரிகத்தின் வீழ்ச்சி: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0877 - If You Are Not Ideal, Then it Will Be Useless to Open a Center|0877|Prabhupada 0879 - Humbleness is very good in devotional service|0879}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0877 - நீங்கள் கொள்கையில் ஸ்திரமாக இல்லாவிட்டால், ஒரு மையத்தைத் திறப்பது பயனற்றதாக இருக்கும|0877|TA/Prabhupada 0879 - பக்தி சேவையில் பணிவு மிகவும் நல்லது|0879}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:29, 7 August 2021



730412 - Lecture SB 01.08.20 - New York

பிரதியும்னா: மொழிபெயர்ப்பு: "பக்தி சேவையின் நித்தியமான விஞ்ஞானத்தை மேம்பட்ட ஆழ்நிலை அறிஞர்களின் இதயங்களுக்கும், பௌதிக தத்துவத்தை ஊகிப்பவர்கள்ளுக்கு, பொருள் மற்றும் ஆன்மாவிற்கும் இடையில் பாகுபாடு காட்டுவதன் மூலம் தூய்மையடைய செய்தீர்கள். அப்படியானால் பெண்கள் உங்களை எவ்வாறு சரியாக அறிந்து கொள்ள முடியும்?"

பிரபுபாதர்: ஆகவே குந்திதேவி, அவள் அடக்கத்துடன் கேட்கிறாள் ... இது வைஷ்ணவரின் அறிகுறி. பகவான், கிருஷ்ணர், குந்திதேவியின் கால் தூசியை எடுக்க வந்துள்ளார். கிருஷ்ணர் குந்திதேவியை தனது அத்தை என்று கருதுவதால், மரியாதை காட்ட, கிருஷ்ணர் குந்திதேவியின் கால்களைத் தொடுவார். ஆனால் குந்திதேவி, அவள் இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், நடைமுறையில் யசோதாமாயியின் மட்டத்தில், இவ்வளவு பெரிய பக்தர் ... ஆகவே அவள் மிகவும் அடக்கமாக இருக்கிறாள் "கிருஷ்ணா, நீ பரமஹம்சங்களுக்காகவே இருக்கிறாய், நாங்கள் உன்னில் என்ன பார்க்க முடியும்? நாங்கள் பெண்கள். "

பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளபடி, ஸ்திரீயோ வைஷ்யஸ் ததா ஷூத்ரா (ப. கீ. 9.32). பாகவதத்தின் மற்றொரு இடத்தில் ஸ்திரி-ஷூத்ரா- திவிஜபந்தூனம் என்று கூறப்படுகிறது. ஷூத்ரா, ஸ்திரீ மற்றும் திவிஜபந்து. திவிஜபந்து என்றால் பிராமண குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்லது க்ஷத்திரிய குடும்பம், உயர் சாதி ... வேத முறையின்படி, நான்கு பிரிவுகள் உள்ளன: சாதூர்-வரேனம் மாயா ஸ்ருஷ்டம் குண-கர்மா ... (ப. கீ. 4.13). தரம் மற்றும் வேலை படி, முதல் வகுப்பு மனிதன் பிராமணர், புத்திசாலி. அடுத்த க்ஷத்ரிய; அடுத்தது, வைஷ்யர்கள்; அடுத்து, ஷூத்ரா. எனவே இந்த வகைப்பாட்டின் படி, பெண்கள், ஷூத்ரா மற்றும் திவிஜபந்து, திவிஜபந்து, அவர்கள் ஒரே பிரிவில் கருதப்படுகிறார்கள். திவிஜபந்து என்றால் பிராமண குடும்பத்தில், க்ஷத்ரிய குடும்பத்தில் பிறந்தவர், ஆனால் அதை தவிர, எந்த தகுதியும் இல்லை. விஷயங்களை தகுதி மூலம் கருத்தில் கொள்ள வேண்டும். இது மிகவும் நடைமுறைக்குரியது. ஒரு மனிதன் உயர் நீதிமன்ற நீதிபதியின் மகனாகப் பிறந்தான் என்று வைத்துக்கொள்வோம். எனவே அவர் உயர் நீதிமன்ற நீதிபதியின் மகன் என்பதால், அவர் உயர் நீதிமன்ற நீதிபதி என்றும் அர்த்தமல்ல. இது தான் தற்போது நடக்கிறது. ஒருவர் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார் என்பதால், எந்த தகுதியும் இல்லாமல், அவர் ஒரு பிராமணர் ஆகிறார் என்று கூறுகிறார். அதுவே இந்தியாவில் வேத நாகரிகத்தின் வீழ்ச்சி. ஒரு மோசமான நபர், அவர் பிராமணர் என்று கூறுகிறார்- எந்த தகுதியும் இல்லாமல். அவரது தகுதி ஒரு சூத்ராவை விட குறைவு; இருந்தும் கூட அவர் அவ்வாறு உரிமை கொண்டாடுகிறார். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

எனவே இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது: குண-கர்மா-விபாகாஷா (ப. கீ. 4.13). தகுதி இன்றி ... ப்ராஹ்மண என்றால் தகுதி என்று பொருள். இந்த உடல் அல்ல. பல வாதங்கள் உள்ளன, ஆனால் அவை அவர்கள் கேட்கமாட்டார்கள். என் இயக்கத்திற்கு அவர்கள் மிகவும் எதிராக இருக்கிறார்கள், ஏனென்றால் நான் ஐரோப்பாவிலிருந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து பிராமணர்களை உருவாக்குகிறேன். அவர்கள் எனக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் கவலைப்படாதீர்கள், நாம் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. எந்தவொரு நியாயமான மனிதனும் அவர்களைக் கவனிப்பதில்லை. ஆனால் எனக்கு எதிராக ஒரு பிரச்சாரம் உள்ளது. எனது ஆன்மீக சகோதரர்கள் மத்தியில் கூட, அவர்கள் செய்கிறார்கள் ... ஏனென்றால் அவர்களால் அதைச் செய்ய முடியாது, எனவே சில தவறுகளைக் கண்டறியவும். நீங்கள் பார்க்கிறீர்கள்.