TA/Prabhupada 0996 - என்னை பின் தொடர்ந்து வர அமெரிக்க இளைஞர்களையும், இளம்பெண்களையும், நான் லஞ்சம் கொடுக்கவ: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0995 - Krsna Consciousness Movement is Not Meant for Ksatriya's or Vaisya's Business|0995|Prabhupada 0997 - Krsna's Business is meant for Everyone. We therefore Welcome Everyone|0997}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0995 - கிருஷ்ண உணர்வு இயக்கம் க்ஷத்ரியரின் அல்லது வைஷ்யரின் வேலை அல்ல|0995|TA/Prabhupada 0997 - கிருஷ்ணர் செய்த வேலை அனைவருக்கும் பொருந்தும். எனவே அனைவரையும் வரவேற்கிறோம்|0997}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:34, 16 August 2021



730406 - Lecture SB 02.01.01-2 - New York

பிரபுபாதா: எனவே பரிக்ஷித் மகாராஜா சுகதேவ கோஸ்வாமியிடம் கேள்வி எழுப்பினார் ... "என் கடமை என்ன? இப்போது நான் ஏழு நாட்களுக்குள் இறக்கப்போகிறேன், என் கடமை என்ன?" எனவே அவர் கிருஷ்ணரைப் பற்றி விசாரித்தார், ஏனெனில் ஒரு வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த பரிக்ஷித் மகாராஜா, அர்ஜுனனின் பேரன் ... பாண்டவர்கள், அவர்கள் வைணவர்கள்- கிருஷ்ணரின் பக்தர்கள், எனவே குழந்தை பருவத்திலிருந்தே அவருக்கு கிருஷ்ணரை வணங்க வாய்ப்பு கிடைத்தது. அவர் கிருஷ்ண உருவச்சிலையுடன் விளையாடிக் கொண்டிருந்தார், எனவே இயற்கையாகவே அவர் கிருஷ்ணரைப் பற்றி கேட்க விரும்பினார். எனவே அவர் விசாரித்தார், "என் கடமை என்ன? கிருஷ்ணா அல்லது வேறு ஏதாவது பற்றி நான் கேட்கலாமா?" எனவே இந்த கேள்வியைக் கேட்டதும், சுகதேவ கோஸ்வாமி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார், வரேயன் ஈஷா தே பிரஷ்னா: (ஸ்ரீ பா 2.1.1) "ஓ, உங்கள் கேள்வி மிகவும் அற்புதமானது, மிகவும் வரவேற்கத்தக்கது, வரேயான்." வரேயான் என்றால் "மிகவும் வரவேற்பு", நான் கொடுத்தது என்ன, வரேயான். மகிமை, ஆம். "புகழ்பெற்ற பிரஷ்னா, ஏனென்றால் நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி விசாரித்தீர்கள்."

ஆகவே வரேயான் ஈஷா தே பிரஷ்னா கிருதோ லோகா-ஹிதாம் நிருபா: (ஸ்ரீ பா 2.1.1) "என் அன்பான ராஜா, இந்த கேள்வி உலக மக்கள் அனைவருக்கும் அநுகூலமானது." நீங்கள் வெறுமனே கிருஷ்ணரைப் பற்றி விசாரித்தால் அல்லது கிருஷ்ணரைப் பற்றி கேட்டால், நமக்கு புரியவில்லை என்றாலும், அந்த கிருஷ்ணரின் அதிர்வு ... நாம் "ஹரே கிருஷ்ணா" என்று கோஷமிடுவதைப் போலவே, ஹரே கிருஷ்ணாவின் அர்த்தம் என்னவென்று நமக்கு புரியாமல் போகலாம், ஆனாலும், இது ஆழ்நிலை ஒலி என்பதால், இது அநுகூலமானது. நீங்கள் எங்கு ஹரே கிருஷ்ணா என்று கோஷமிட்டாலும், அவர்கள் கேட்கலாம் அல்லது கேட்காமல் இருக்கலாம், அது அவர்களுக்கு அநுகூலமானது. எனவே நாம் நமது ஆட்களை தெரு சங்கீர்த்தனத்திற்கு அனுப்புகிறோம். மக்கள் அதைக் கேட்க ஆர்வமாக இருக்கிறார்களா இல்லையா என்பது முக்கியமல்ல, ஆனால் அது அநுகூலமானது. இது மனித சமுதாயத்திற்கு மிகவும் இணக்கமான ஒரு சூழ்நிலையை உருவாக்கும். அது நம் கொள்கையாக இருக்க வேண்டும். நாம் கோஷமிடுவதால், யாரும் கவனித்துக்கொள்வதில்லை, நாம் ஏமாற்றமடைய மாட்டோம். எங்கள், இந்த சங்கீர்த்தன இயக்கம் மிகவும் அருமையாக உள்ளது, வெறுமனே கோஷமிடுவதன் மூலம், அதிர்வு ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கும், வரேயன் ஈஷா தே பிரஷ்னா (ஸ்ரீ பா 2.1.1). இப்போது நீங்கள் நடைமுறையில் பார்க்கலாம், பழைய உறுப்பினர்களாக இருப்பவர்கள் ... எனவே நான் இந்த நியூயார்க்கில் அந்த கடையின் முன்புறத்தில் வெறுமனே கோஷமிடுவதன் மூலம் தொடங்கினேன். எனவே எனக்குப் பின் வர அமெரிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் நான் லஞ்சம் கொடுக்கவில்லை. ஒரே சொத்து கோஷமிடுவது. டொம்ப்கின்சன் சதுக்க பூங்காவில், இந்த ப்ரஹ்மானந்த சுவாமி அவர் முதலில் என் மந்திரத்தில் நடனமாட வந்தார். (சிரிப்பு) அவரும் அச்சுதானந்தாவும், அதுதான் நம் கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் முதல் நடனம் (சிரிப்பு) ஆம். மேலும் எனக்கு மிருதங்கங்கள் இல்லை. அது ஒரு, அது என்ன?

பக்தர்: (தெளிவற்ற) ட்ரம்.

பிரபுபாதா: ட்ரம், சிறிய ட்ரம். எனவே நான் இரண்டு முதல் ஐந்து வரை, மூன்று மணி நேரம் ஹரே கிருஷ்ணா என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தேன், மேலும் பல ஆண்களும் பெண்களும் வந்து சேர்ந்தார்கள், டைம்ஸில் முதல் புகைப்படம் வெளிவந்தது. நியூயார்க் டைம்ஸ், அவர்கள் பாராட்டினர், மக்களும் பாராட்டினர். எனவே இந்த கோஷம், ஆரம்பத்தில் நாம சங்கீர்த்தனம் மட்டுமே நடந்தது, அதற்கு மேல் எதுவும் இல்லை. அந்த நேரத்தில் பிரசாத விநியோக திட்டம் எதுவும் இல்லை. அது, பின்னர் வந்தது. எனவே இந்த மந்திரம் இந்த பௌதிக உலகின் அதிர்வு அல்ல என்று நாம் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இது பௌதிக உலகின் அதிர்வு அல்ல. நரோத்தமா தாச தாகுரா கூறுகிறார், கோலோகேரா பிரேம-தன ஹரி-நாமா-சங்கீர்த்தன. இது ஆன்மீக உலகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது முற்றிலும் ஆன்மீகம். இல்லையெனில் அது எப்படி சாத்தியமாகும்? சில நேரங்களில் யோகிகள் என்று அழைக்கப்படுபவர்கள், கோஷமிடுவது பற்றி கூறுகிறார்கள் ... பம்பாயில் அயோகியன் ஒருவன் இருக்கிறான், அவன் கூறுகிறான், "ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதும் கோகோ கோலா கோஷமிடுவதும் ஒன்றே" என்று. அவர் அத்தகைய ஒரு மோசமானவர். இது இந்த பௌதிக உலகின் அதிர்வு அல்ல என்பது அவருக்குத் தெரியாது. ஆனால் அறிவு இல்லாதவர்கள், "ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா" என்ற இந்த மந்திரத்தின் அர்த்தம் என்ன? "என்று நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் இரவும் பகலும் கோஷமிடுகிறோம் என்பதை அவர்கள் நடைமுறையில் காணலாம், இன்னும் நாம் சோர்வடைய மாட்டோம், ஆனால் நீங்கள் எடுக்கும் வேறு எந்தப் பெயரும், மூன்று முறை கோஷமிட்ட பிறகு நீங்கள் சோர்வடைவீர்கள். அதுவே சான்று. நீங்கள் இரவும் பகலும் கோஷமிடலாம், நீங்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டீர்கள். எனவே இந்த மக்கள், ஏழை மக்கள், அவர்களுக்கு புரிந்து கொள்ள மூளை திறன் இல்லை.